Jayalashmi Amma -Nagamma Temple

நாகம்மா நாராயணசுவாமி ஜெயலஷ்மி அம்மா குருஸ்தானம் சாந்திப்பிரியா ஆந்திரப்பிரதேசத்தின் செகந்திராபாத்தின் திருமலகிரியில் உள்ள ஸ்ரீலஸ்ரீ ஜெயலஷ்மி அம்மாள் குருஸ்தானம் என்பது நாக தேவதைக்காக அமைக்கப்பட்டு உள்ள ஆலயம். அந்த ஆலயத்தை அமைத்தவர் ஜெயலஷ்மி அம்மா என்று போற்றி வணங்கப்படும் ஒரு தெய்வீகத் தாய். அவர் கட்டி உள்ள அந்த ஆலய வரலாறு சுவையாக உள்ளது. புற்றுக்குள் நாகமாக அமர்ந்து இருந்த நாகதேவதையின் புற்றை இடித்து தரைமட்டமாக்கிய போது அதே இடத்தில் தனக்கு ஆலயம் அமைத்து வழிபடச் செய்தார் நாக தேவதை. தனக்கு அதே இடத்தில் ஆலயத்தை அமைத்துக் கொள்ள நாகம்மா எனும் நாக தேவதை தேர்தெடுத்த குடும்பமே ஜெயலஷ்மி அம்மாவின் குடும்பம். பூர்வக் கதை அப்போது இந்தியா ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்தது. திருச்சியில் ஆங்கிலேயப் படையினர் தங்கி இருந்தார்கள். அப்போது இந்த ஆலயம் உள்ள இடம் வெற்று இடமாக இருந்தது. அங்கு ஒரு புற்றுக்குள் வாழும் நாகம் வாழ்ந்து வந்தது. அந்தப் புற்றின் அருகில் சிறிய ஆலயத்தைக் கட்டி அந்த நாகதேவதையை அங்கிருந்த மக்கள் தெய்வமாகப் போற்றி வணங்கி வந்தார்கள். ஆங்கிலேய அதிக...