இடுகைகள்

செப்டம்பர், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Jayalashmi Amma -Nagamma Temple

படம்
நாகம்மா நாராயணசுவாமி  ஜெயலஷ்மி அம்மா குருஸ்தானம் சாந்திப்பிரியா ஆந்திரப்பிரதேசத்தின் செகந்திராபாத்தின் திருமலகிரியில் உள்ள ஸ்ரீலஸ்ரீ ஜெயலஷ்மி அம்மாள் குருஸ்தானம் என்பது நாக தேவதைக்காக அமைக்கப்பட்டு உள்ள ஆலயம். அந்த ஆலயத்தை அமைத்தவர் ஜெயலஷ்மி அம்மா என்று போற்றி வணங்கப்படும் ஒரு தெய்வீகத் தாய். அவர் கட்டி உள்ள அந்த ஆலய வரலாறு சுவையாக உள்ளது. புற்றுக்குள் நாகமாக அமர்ந்து இருந்த நாகதேவதையின் புற்றை இடித்து தரைமட்டமாக்கிய போது அதே இடத்தில் தனக்கு ஆலயம் அமைத்து வழிபடச் செய்தார் நாக தேவதை.   தனக்கு அதே இடத்தில் ஆலயத்தை அமைத்துக் கொள்ள நாகம்மா எனும் நாக தேவதை  தேர்தெடுத்த குடும்பமே ஜெயலஷ்மி அம்மாவின் குடும்பம். பூர்வக் கதை  அப்போது இந்தியா ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்தது. திருச்சியில் ஆங்கிலேயப் படையினர் தங்கி இருந்தார்கள். அப்போது இந்த ஆலயம் உள்ள இடம் வெற்று இடமாக இருந்தது. அங்கு ஒரு புற்றுக்குள் வாழும் நாகம் வாழ்ந்து வந்தது. அந்தப் புற்றின் அருகில்  சிறிய ஆலயத்தைக் கட்டி அந்த நாகதேவதையை அங்கிருந்த மக்கள் தெய்வமாகப் போற்றி வணங்கி வந்தார்கள். ஆங்கிலேய அதிக...

GORAVANAHALLI MAHALAKSHMI TEMPLE

படம்
கோரவனஹல்லி மஹாலஷ்மி ஆலயம் சாந்திப்பிரியா   பெங்களூரில் மகாலஷ்மி ஆலயங்கள் மிகக் குறைவாகவே உள்ளன. நகர மத்தியில் பனசங்கரிக்கு அருகில் சுமார் 8 அல்லது 10 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டு உள்ள மகாலஷ்மி ஆலயம் (ரிங் ரோடு சாலையில் JP நகரில் இருந்து மைசூர் செல்லும் பாதையை நோக்கி சென்றால் பெரிய Tax Payers  அலுவலகம் வரும். அதன் பக்கத்து சாலையின் கோடியில் ஆலயம் உள்ளது  ) மிக சிறப்பாக உள்ளது என்றாலும் தும்கூர் தாலுக்கா கோரவனஹல்லி  கிராமத்தில்  உள்ள மகாலஷ்மி தாயார் ஆலயம் மிகவும் பழமையானது. மகிமை வாய்ந்தது.  அந்த ஆலய வரலாறு இது. 1880 -90 ஆம் ஆண்டு வாக்கில்  கோரவனஹல்லி கிராமத்தில் அபையா என்ற பால் வியாபாரம் செய்பவர் இருந்தாராம். அவர் தினமும் தனது பசு மாட்டை வயல்வெளிக்கு கொண்டு சென்று புல் மேயவிட்டு வருவார். அருகில் இருந்த குளத்தருகில் அமர்ந்து உணவு அருந்துவார். ஒரு நாள் அவர் உணவு அருந்திக் கொண்டு இருந்தபோது  ஆசிரியாக ஒரு குரல் கேட்டது.' என்னையும் உன்னுடன் அழைத்துச் செல்கிறாயா'. எதோ மனப்பிரமை என உதாசீனப் படுத்திவிட்டு வீடு சென்று விட்டார். ஆ...

Temples built by Pandavas

படம்
பஞ்ச பாண்டவர்கள்  கட்டிய ஆலயங்கள் சாந்திப்பிரியா  படத்தை பெரிய அளவில் பார்க்க படத்தின் மீது  கிளிக் செய்யவும் படம் நன்றி:- http://www.flixya.com/blog/2145260/The-Pancha-Pandava-Temples-of-Kerala மகாபாரத யுத்தம் முடிந்தது. பாண்டவர்கள் மனதில் அமைதி இல்லை. நமது சந்ததியினரை அனியாயமாக கொன்று விட்டோமோ என்ற எண்ணம் தலைத் தூக்க மனதில் அமைதி இல்லாமல் தவித்தார்கள். அதனால் ராஜ்யத்தை தம்மால் திறமையாக ஆள முடியாது என்பதினால் தமது சந்ததியினரான பரிஷித் மன்னரிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு குருஷேத்திரத்தில் நடைபெற்ற யுத்தத்தில் தமது சந்ததியினரை கொன்ற பிரும்மஹத்தி தோஷம் என்ற பாபத்தைக் களைய சிவபெருமானையும் விஷ்ணுவையும் துதித்து பாப விமோசனம் பெற பாண்டவ சகோதரர்கள் ஐந்து  பேரும் தீர்த்த யாத்திரையை மேற்கொண்டார்கள். பஞ்ச பாண்டவர்களும் சேர்ந்து அமைத்த ஆலயம்  முதலில் அவர்கள் இன்றைய உத்திராஞ்சல் என்ற மாநிலத்தில் உள்ள கர்வால் என்ற இமயமலைப் பகுதியை அடைந்தார்கள். அங்கு அவர்கள் சென்று இமயமலை அடிவாரத்தில் சிவபெருமானை காணச் சென்றார்கள்.  ஆனால் அவர்களை சந்திக்க விரும்பாத ...

Kenopashad- Gajanan Magaraj Satsang

படம்
பரம் சத்குரு ஸ்ரீ கஜானன் மகராஜ்  கூறியவை 21 .08 .2011 அன்று ஸ்ரீ மோகன் ஜாதவ்  அவர்கள் ஆற்றிய சொற்பொழிவில் இருந்து.......... (Read original Version in English  www.agnihotrausa.net    /  www.fivefoldpathmission.info /  www.agnihotra.info )  ஸ்ரீ பரம் சத்குரு கஜானன் மகராஜ்   நாம் உண்மை எனும் ஆத்மாவை  தேடும்போது அது குறித்து நமது புத்தியும் மனமும் ஒரு  விளக்கத்தை நமக்கு தற்காலிகமாக  அளித்தாலும்   மெல்ல மெல்ல  ஆத்மா என்பது உண்மையில் என்ன என்ற உண்மை விளங்கத் துவங்கும்போது  நம்முடைய அறியாமை விலகத் துவங்குவதை உணரலாம்.  உதாரணமாக சுற்றிக் கிடக்கும் கயிற்றையும், பாம்பையும் தூரத்தில் இருந்து பார்க்கும்போது சிலர் அதை பாம்பு என பயந்து கொண்டு அதன் அருகில் செல்லாமல் அந்த பயத்திலேயே இருந்து விடுகிறார்கள்.  உண்மை என்பது என்ன என்று தெரியாத அப்பாவி மக்கள் பல பயங்களை மனதில் சுமந்து கொண்டு  வாழ்கிறார்கள். தான் பார்த்தது கயிரேதான், பாம்பு அல்ல என்ற உண்மை அவர்களுக்கு தெரிய வரும்போத...