Kattu Veera Anchaneya Temple, Krishnagiri
கிருஷ்ணகிரி ஸ்ரீ காட்டு வீர ஆஞ்சனேயர் ஆலயம் சாந்திப்பிரியா தமிழ்நாட்டில் உள்ள கிஷ்ணகிரி மாவட்டம் வரலாற்று சிறப்பு மிக்க இடம். இங்கு தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் நிறைய உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தருமபுரியுடன் இணைந்து இருந்தபோது அதாவது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அது கிருஷ்ண தேவராயர் ஆட்சியில் இருந்தது. கிருஷ்ண தேவராயர் ஆட்சியில்தான் ஹனுமான் பக்தி இயக்கம் பெரிய அளவில் இருந்தது. அவருடைய ஆட்சியில் தான் மலைகள் மீது இருந்த பாறைகளிலும், வேறு பெரிய பாறைகளிலும் கடவுளின் சிற்பங்கள் செதுக்கப்பட்டனவாம். முக்கியமாக ஹனுமாரின் சிற்பங்கள் பெரிய அளவில் செதுக்கப்பட்டு உள்ளன. அப்படிப்பட்ட நேரத்தில் உருவானதே தேவ சமுத்திரத்தில் உள்ள ஸ்ரீ காட்டு வீர ஆஞ்சநேயர் ஆலயம். இந்த ஆலயம் சென்னை மற்றும் பெங்களூருக்கு இடையிலான சாலையில் கிருஷ்ணகிரிக்கு அருகில் உள்ளது. முன்னர் தேவசமுத்திரத்தில் அந்த ஆலயம் இல்லை. அந்த இடத்தில் பெரிய விளை நிலமே இருந்தது. அருகில் சிறிய மலை. அந்த விளை நிலங்கள் திரு வெங்கட்ராம செட்டியார் என்பவருக்கு சொந்தமானது. அந்த நிலத்தில் இருந்த ஒரு ...