இடுகைகள்

ஜூன், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Kanaga Mahalashmi Temple

படம்
கனக மகாலஷ்மி ஆலயம்   சாந்திப்பிரியா    ஆந்திரப்பிரதேசத்தில் விசாகப்பட்டினம் என்பது மிகப் பெரிய நகரம். அந்த நகரத்தின் மத்தியப் பகுதியான புருஜுபெடா எனும் இடத்தில் உள்ளது  இந்த ஆலயம். சுஇந்த ஆலயத்தில் அம்மாவாறு என்று மக்களால் அழைக்கப்படும் கனகலஷ்மியின் சிலை நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு  முற்பட்டது என்கிறார்கள். இந்த ஆலய தேவியின் ஸ்தல புராணம் பற்றிய முழு விவரங்கள் கிடைக்கவில்லை. அனைத்தும் வாய்  மொழிக் கதையாகவே உள்ளன. ஆனால் இந்த ஆலயம் 1917 ஆம் ஆண்டுகளில்  இந்த இடத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த ஆலயத்தைப் பற்றிக் கூறப்படும் கதை இது. 1912 ஆம்  ஆண்டு வாக்கில் ஒரு கிணற்றில் இந்த தேவியின் சிலை கிடைத்ததாகவும் அங்கு வசித்து வந்த மக்கள் அதை வெளியில் எடுத்து அந்த சாலையிலேயே ஆலயம் அமைத்தார்களாம்.  ஆனால் சில  ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 1917 ஆண்டுவாக்கில் உள்ளூர் நகராட்சியினர்  அந்த சாலையை விஸ்தரித்துக் கொண்டு இருந்த போது சாலையின் நடுவில் இருந்த அந்த தேவியின் ஆலயத்தை அகற்றிவிட்டு அந்த சிலையை வேறு ஒரு இடத்தில் கொண்டு சென்று வைத்து விட்டார்களாம்....

Karnataka- Ganagapur Temple

படம்
 பேய் பிசாசுகளை விரட்டும்  புனித கனகாப்பூர்  ஆலயம்  சாந்திப்பிரியா    தத்தாத்திரேயரின் இரண்டாவது  அவதார புருஷரான  ந்ருசிம்ஹ ஸரஸ்வதி  ஸ்வாமிகள் கர்னாடகா மாநிலத்தில் உள்ளது கங்காபூர் எனும் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள தத்தாத்திரேயர் ஆலயம் மிகவும் புகழ் பெற்றது.  இதை தத்தாத்திரேயாரின் ஷேத்திரம் என்கிறார்கள். இங்குதான் இருபத்தி நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக  தத்தாத்திரேயரின் இரண்டாவது  அவதார புருஷரான  ந்ருசிம்ஹ ஸரஸ்வதி  ஸ்வாமிகள் (1378 AD−1458 AD) வசித்து வந்தாராம். தத்தாத்திரேயரின் முதலாவது  அவதார புருஷர் ஸ்ரீபத் ஸ்ரீ வல்லபா (1320 AD - 1350 AD) என்பவர். அவர்களுடைய  வரலாறு  குரு சரித்திரம் என்பதில் விவரமாக உள்ளது. பல ஆண்டுகளாக அவரைப் பற்றி ஒரு வரலாறு எழுத வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. விரைவில் எழுதுவேன் என நினைக்கின்றேன்.  ந்ருசிம்ஹ ஸரஸ்வதி  ஸ்வாமிகள் அங்கு வசித்து வந்தபோது பல மகிமைகளை செய்து உள்ளார். அங்கு உள்ள தத்தாத்திரேயர் ஆலயத்தில் அவருடைய நிர்குண பாதுகைகள் வைக்கப்பட்டு  உள்ளன. அ...

An American Sadhu

படம்
 ஒரு அமெரிக்க சாது  In English : 'An American Sadhu' by Dolf Hartsuiker ( http://www.adolphus.nl/sadhus/stories/rampriya.html ) In Tamil  :- சாந்திப்பிரியா  Part-1 முன்னுரை:- 1992 ஆம் ஆண்டு உஜ்ஜயினியில் நடந்த கும்பமேளாவிற்கு இந்தியாவுக்கு வந்த 'தோல்ப் ஹார்ட்சுயேகர்' (Dolf Hartsuiker) என்பவர் எழுதி உள்ள அனுபவக் கதை இது. அவர்  பல சாதுக்கள் மற்றும் சன்யாசிகலை சந்தித்தார் . அதில் முக்கியமானது  ஒரு அமெரிக்க சாதுவை சந்தித்த கதை. அவரை  எங்கெல்லாம்  சந்தித்தார்?  இப்போது அவருடைய கதி என்ன, அவர் எங்கே  உள்ளார் ? ஒரு வித்யாசமான  ஆன்மீக அனுபவம்.  உண்மைக் கதையை  படித்து மகிழவும். Introduction:- This is an article written by Dolf Hartsuiker . He came to India in the year 1992 to witness the Kumbamela held in Ujjain and during his visit he has interacted with several Sadhus and sanyasins. One such experience is- meeting with an American sadhu at Ujjain . When and where all did he meet him? Where is the American Sadhu now? Wh...

Life Story of Meher Baba

படம்
அவதார புருஷர் மெஹெர் பாபா , 1894 – 1969     Original in English  Meher Baba Information org Translated into Tamil by  சாந்திப்பிரியா      1  மெஹெர் பாபா என்றால் 'கருணை உள்ளம் படைத்தவர்' என்ற அர்த்தம் தரும் . 1920 ஆம் ஆண்டுகளில் அவருடைய தெய்வீகம் வெளியில் தெரியத் துவங்கிய காலத்தில் அவருடைய சில சீடர்களால் அவருக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது. மெஹெர் பாபாவின் வாழ்கை வரலாற்றை சுருக்கமாக எழுதுவது என்பது எளிதானது அல்ல. இந்த நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த அவரை அனைத்து மதங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களும் இயேசு கிறிஸ்து , வருங்காலத்தை முன்னறிவிப்பவர், ஆபத்தில் இருந்து விடுவிப்பவர் மற்றும் பாதுகாவலர் என்றே கூறி வந்தார்கள் . பல நல்ல தொண்டுகளையும் எண்ணற்ற செயல்களையும் வாய் திறந்து பேசாமல் மவுனமாக இருந்தபடி செய்து கொண்டு வந்தார். 1925 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டுவரை அவர் வாழ்ந்து வந்த சுமார் நாற்பத்தி நான்கு வருட காலத்தில் மவுனமாகவே அவர் இருந்து கொண்டு செய்து வந்த காரியங்கள் எண்ணற்றவை. ஏழை எளியவர்கள், தொழு நோயாளிகளுக்கு உதவி, கிர...

Shree Gondvale Magaraj

படம்
ஸ்ரீ கோண்ட்வாலே மகராஜ் ராம பக்தியை பரப்பிய துறவி  சாந்திப்பிரியா     படம் நன்றி: http://www.mandesh.com/english/mandesh_galleryalbum_details.php?albumId=2 மகாராஷ்டிரா மானிலத்தின் சத்தாரா எனும் மாவட்டதில் உள்ள கோண்ட்வாலே எனும் தாலுக்காவில் பிறந்தவரே ராம பக்தரான ஸ்ரீ பிரும்ம சைதன்ய மகராஜ் கோவிந்தவலேகர் என்பவர். 1845 ஆம் ஆண்டு பிறந்தவருடைய  தந்தை ராவாஜி மற்றும் தாயாரின் பெயர் கீதாமணி என்பதாகும். அவர்களுடைய  குடும்பத்தினர்  கடவுள் பக்தி அதிகம் மிகுந்தவர்கள்.  பிறந்த குழந்தைக்கு கணபதி எனப் பெயரிட்டார்கள்.  குழந்தை கணபதி நல்ல முறையில் வளர்ந்து வந்தது.  அவருக்கு சிறு வயதில் அவருடைய பாட்டனாரே  பாடம் கற்றுத் தந்தார். அவருடைய தத்தா பாண்டுரங்கனின் பக்தர். கணபதிக்கு நியாபக சக்தி மிகவும் அதிகமாக இருந்ததினால் பாடங்கள் அனைத்தையும் ஒரே நாளில் கற்றுக் கொண்டு விடுவாராம். அந்த வயதிலேயே  ஸ்ரீமத் பாகவதத்தை மனப்பாடம் செய்து வைத்துக் கொண்டு இருந்தார். அந்தக் குழந்தையை பாடச் சொல்லிவிட்டு அவருடைய பாட்டனார்  நடனம் ஆடுவாராம். அது முதல் எ...

Akka Mahadevi

படம்
அக்கா மகாதேவி சாந்திப்பிரியா  ''பிச்சைப் பாத்திரத்தில் உணவு போட கிராமங்களே உள்ளன , தாகம் எடுத்தால் குடிப்பதற்கு கிணறுகளும், குளங்களும் உள்ளன, படுத்து உறங்கவோ பாழடைந்த ஆலயங்களும் உள்ளன, ஆனால் என்னுடைய இதயத்துக்கு துணை இருக்க சென்னமல்லிகார்ஜுனா மட்டுமே இருக்கின்றார் '' இப்படியான பொருளில் கவிதையை இயற்றியவர் கர்நாடகத்தில் இருந்த ஒரு பெண் துறவியான அக்கா மகாதேவி என்பவர். 1150 ஆம் ஆண்டு முதல் 1175 வரை வாழ்ந்து இருந்த அவர் ஷிமகோடா மாவட்டத்தில் உள்ள பானவாசி நகரின் அருகில் இருந்த உடுதாடி எனும் கிராமத்தில் அன்னம்மா பிரபு மற்றும் கின்னாரி பொம்மையா என்பவர்களுக்கு மகளாகப் பிறந்தவர். பிறந்த குழந்தையின் வளர்ப்பு பற்றி அதிக செய்திகள் கிடைக்கவில்லை என்றாலும் அவர் தன்னுடைய தாயாரின் அரவணைப்பில்தான் வயதுக்கு வரும்வரை வளர்ந்ததாக தெரிகின்றது.  இளம் வயதிலேயே அவர் ஆன்மீக நாட்டம் கொண்டவராகவே இருந்திருக்கின்றார். சிவகாமாச்சாரியார் என்பவரிடம் கல்வி பயின்ற அந்த அம்மையார் அந்த வயதிலேயர் கவிதைகளை எழுதுவது உண்டாம். சிவலிங்கத்தை வணங்கித் துதிப்பாராம். சிவபெருமானின் இன்னொரு பெயரான சென்ன மல்லிகார்...

Agnihothra

படம்
நல்லதைப் படித்தேன் எழுதுகிறேன்     அக்னிஹோத்ரா  சாந்திப்பிரியா  அக்னிஹோத்ர  குரு  பரம்  பூஜ்ய  சத்குரு  ஸ்ரீ  கஜானன்  மகாராஜ்   பண்டைய காலத்தில் ஆன்மீகத்தின் மூலம் தனி மனிதரை தூய்மை படுத்துதல் மற்றும் மனதை இதமாக்குதல் (குணப்படுத்துவது என்பார்கள்) என்பது ஒரு ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. ஒவ்வொரு மனிதரும் தான் இறந்தப் பிறகு நல்ல கதி அடைய வேண்டும் என்றே நினைக்கின்றார்கள். நாம் ஒவ்வொருவரும் மோட்ஷம் பெற வேண்டும் என நினைப்பது தவறு இல்லை. பண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் மன அமைதியுடன், திருப்தியான மனதுடன் இருந்தார்கள். அவர்கள் கனவெல்லாம் நாம் இறந்தப் பின் மோட்ஷம் அடைய என்ன வழி என்பதே. அதற்காக அதற்கு என்ன வழி என்று தேடி அலைந்தார்கள். குருமார்களை தேடி அலைந்தார்கள். ஆலயங்களுக்குச் சென்று மனபூர்வமாக வழிபட்டார்கள். யாகங்களில், ஹோமங்களில் கலந்து கொண்டார்கள். புனித நதிகளில் நீராடினார்கள். ஆனால் மாறிவிட்ட இந்த காலங்களில் என்ன நடக்கின்றது ? அனைவருமே உயர்ந்த நிலை வாழ்கையை பெறவும் , சமூகத்த...