Kanaga Mahalashmi Temple

கனக மகாலஷ்மி ஆலயம் சாந்திப்பிரியா ஆந்திரப்பிரதேசத்தில் விசாகப்பட்டினம் என்பது மிகப் பெரிய நகரம். அந்த நகரத்தின் மத்தியப் பகுதியான புருஜுபெடா எனும் இடத்தில் உள்ளது இந்த ஆலயம். சுஇந்த ஆலயத்தில் அம்மாவாறு என்று மக்களால் அழைக்கப்படும் கனகலஷ்மியின் சிலை நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்டது என்கிறார்கள். இந்த ஆலய தேவியின் ஸ்தல புராணம் பற்றிய முழு விவரங்கள் கிடைக்கவில்லை. அனைத்தும் வாய் மொழிக் கதையாகவே உள்ளன. ஆனால் இந்த ஆலயம் 1917 ஆம் ஆண்டுகளில் இந்த இடத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த ஆலயத்தைப் பற்றிக் கூறப்படும் கதை இது. 1912 ஆம் ஆண்டு வாக்கில் ஒரு கிணற்றில் இந்த தேவியின் சிலை கிடைத்ததாகவும் அங்கு வசித்து வந்த மக்கள் அதை வெளியில் எடுத்து அந்த சாலையிலேயே ஆலயம் அமைத்தார்களாம். ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 1917 ஆண்டுவாக்கில் உள்ளூர் நகராட்சியினர் அந்த சாலையை விஸ்தரித்துக் கொண்டு இருந்த போது சாலையின் நடுவில் இருந்த அந்த தேவியின் ஆலயத்தை அகற்றிவிட்டு அந்த சிலையை வேறு ஒரு இடத்தில் கொண்டு சென்று வைத்து விட்டார்களாம்....