இடுகைகள்

அக்டோபர், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Ponnandal Ramanathan writes-1

படம்
பாட்டி பொன்னாண்டாள் ராமநாதன் எழுதிய  தெய்வீகத்தில் நான் படித்த மற்றும்  கேட்ட செய்திகள் சில -  பாகம் 1 (1) சத்குருனாதரின் காடாஷம் ஒருவர் மீது இருக்குமானால் அந்த அதிருஷ்டக்காரனின் வாழ்கை ஓடம் சலனமில்லாமல் அமைதியாக , நிம்மதியாக, பயமில்லாமல் சென்று கொண்டு இருக்க அந்த குருநாதனே ஓடத்தை ஏற்றிக் கரை சேர்ப்பார் என்பது சத்தியமான வாக்கு. ----------------------------- (2) சாதுக்களின் தரிசனம், அவர்கள் மீது நாம் வைக்கும் பக்தி மற்றும் தியானமுமே நமக்கு பல புண்ணிய பலன்களையும், புண்ணிய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்த பலனையும் தருகின்றது. -------------------------- (3) சத்சங்கம் கிடைப்பது அரிது. கிடைத்தாலும் அதில் கலந்து கொள்ள எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்காது, மனமும் வராது . ராவணன் சிறந்த சிவ பக்தன். ஆனால் அவனுக்கு சத்சங்கங்களில் கலந்து கொள்ள வாய்ப்பே கிடைக்கவில்லை. -------------------------- (4) ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் கருணை கடாஷம் எல்லை அற்றது. ஒரு பாபமும் செய்யாத சீதையை தன் மனைவி என்ற உரிமையில் உலக நியதியை எடுத்துக் காட்டும் பொறுப்பில் அக்னியில் புடம் போட்டு ஏற்றுக...

Salanpur Hanuman Temple- Gujarat

படம்
குஜராத் சலன்பூர் ஆஞ்சனேய  ஆலயம் சாந்திப்பிரியா சாமிநாராயணன் சம்பிரதாயத்தினர் நிறுவி உள்ள அற்புதமான ஒரு ஹனுமான் ஆலயம் குஜராத் மாநிலத்தின் சாலன்பூர் என்ற சிறு நகரில் உள்ளது. அந்த சிறு நகரம் அகமதாபாத்தில் இருந்து சுமார் அறுபது மைல் தொலைவில் உள்ளது. அதைவிட சிறந்தது, ராஜ்கோட் அல்லது பவனகருக்கு சென்று அங்கிருந்து சுமார் ஒன்றரை மணி நேர டாச்சி அல்லது பஸ்சில் பயணம் செய்து போதத் ( Botad ) எனும் இடத்தை அடைய வேண்டும். அங்கிருந்து ஆட்டோ பிடித்து ஆலயத்துக்கு செல்லக் கூறினால் சுமார் முப்பது நிமிட நேரத்தில் அந்த ஆலயத்துக்கு சென்று விடலாம். அந்த ஆலயத்தின் மகிமை என்ன என்றால் பேய் , பிசாசு பிடித்தவர்கள் அங்கு சென்று அங்குள்ள ஹனுமாரை வணங்கினால் அவை ஓடி விடும் என்பதே. அவரைப் பொதுவாக துன்பங்களைக் களையும் ஹனுமார் என அழைக்கின்றனர். முன்னூறு ஆண்டுகளுக்கும் முற்பட்டது எனப்படும் அந்த ஆலயத்தை நிறுவியவர் 1850 ஆம் ஆண்டு மறைந்துவிட்ட கோபால்நாத் ஸ்வாமிகள் என்பவரே. அவர் மிமிம்சா மற்றும் வேதாந்தங்களை நன்கு கற்றறிந்தவர். பலரது வாழ்விலும் ஏற்படும் இன்னல்களைக் களைய அவர் ஆன்மீக பாடங்களைப் போதித்தவர்...

Badrachalam Raamar Temple

படம்
பத்ராசலம் ராமர் ஆலயம் சாந்திப்பிரியா ஆந்திரப் பிரதேசத்தில் கம்மம் நகரின் அருகில் உள்ளது பத்ராசலம். அங்குள்ள ராமர் ஆலயம் மிகவும் பிரபலமானது. முன்னொரு காலத்தில் அந்த இடத்தில் இருந்த மலை உச்சியில் பத்ரா என்ற முனிவர் தவம் செய்து வந்தார். அவர் ராமரின் பக்தர். அவர் ராமபிரான் தனது தலை மீது வந்து அமர வேண்டும் என வேண்டிக் கொண்டு தவம் இருந்தார். அப்போது ராமன் சிதை மீட்க இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு இருந்த நேரம். திரும்பி வரும்போது உன்னுடைய ஆசையை நிறைவேற்றுவேன் என ராமர் கூறினார். ஆனால் அதை நிறைவேற்றும் முன் ராமர் மற்றொரு அவதாரமான மகா விஷ்ணு அவதாரத்தை எடுக்க வேண்டி வந்தது. ஆகவே அந்த முனிவரின் ஆசையை அப்போது நிறைவேற்ற முடியவில்லை. ஆனால் பின்னர் மகாவிஷ்ணு அவதாரத்தில் இருந்த ராமர் அங்கு வந்து அந்த முனிவருக்கு சீதா சமேத ராமபிரானாக காட்சி தந்தார் . அதனால்தான் அங்குள்ள ராமர் சிலையின் கையில் மகாவிஷ்ணுவின் சங்கு சக்கரம் உள்ளது. ஆனால் அந்த ஆலயம் வந்தது எப்படி? ராமரும் சிதை மற்றும் தனது தம்பி லஷ்மணருடன் அங்கு இருந்து மறைந்தனர். அப்போது அவர் தம்மை சிலையாக அங்கு விட்டுச் செ...

Tirumangalakudi Temple

படம்
திருமங்கலக்குடி ஆலயம்   (சூரியனார் ஆலயத்துக்குச் செல்லும் முன்  கண்டிப்பாக  வழிபடவேண்டிய  ஆலயம்) சாந்திப்பிரியா இந்த ஆலயம் கும்பகோணத்தில் இருந்து பதினைந்து கிலோ தொலைவிலும், ஆடுதுறையில் இருந்து இரண்டு கிலோ தொலைவிலும் உள்ளது.  அங்கிருந்து சூரியனார்  ஆலயம் ஒரு  கிலோ தொலைவில் உள்ளது.  இது  ஒரு முக்கியமான ஆலயம். அதன் பெயர் பிராணதீஸ்வரர் ஆலயம். நவகிரஹ தரிசனம் செய்யப் போகின்றவர்கள் சூரியனார் ஆலயம் செல்லும் முன்னால் முதலில் பிராணதீஸ்வரர் ஆலயத்துக்குச் சென்று தரிசனம் செய்தப் பின்னரே சூரியனார் ஆலயம் செல்ல வேண்டும். இல்லை என்றால் அதற்குப் பலன் இல்லை என்கிறார்கள். திருமங்கலக்குடி கும்பகோணத்தில் இருந்து சுமார் எட்டு கிலோ தொலைவில் உள்ளது. அந்த ஆலயத்தை மங்களாம்பிகை ஆலயம் என்றும் கூறுகிறார்கள் அந்த ஆலயம் வந்த வரலாறு சுவையானது. பதினோராம் நூற்றாண்டை சேர்ந்த குலோத்துங்க சோழ மன்னன் அந்த இடத்தின் மன்னனாக இருந்தபோது அவருடைய அமைச்சரான அலைவாணர் என்பவர் மன்னனிடம் கூறாமல் அரசாங்க நிதியை தவறாக பயன்படுத்தி திருமங்கலக்குடியில் ஒரு சிவன் ஆலயத்தைக் காட...

Thiruneelakkudi Temple

படம்
திருநீலக்குடி சிவன் ஆலயம் சாந்திப்பிரியா திருநீலக்குடி என்கின்ற பெருமை வாய்ந்த இடம் கும்பகோணத்தில் இருந்து சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கு உள்ள திருநீலக்குடி என்கின்ற ஆலயம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாம். ஆடுதுறைக்கு பஸ்சிலோ ரயிலிலோ சென்று விட்டால் அங்கிருந்து இரண்டு கிலோ தொலைவில் உள்ள ஆலயத்தை அடையலாம். ஆலயத்தில் இரண்டு நுழை வாயில்கள் உள்ளன. இரண்டு நுழை வாயில்களுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள பிரகாரத்தில் நந்தி மண்டபம், கொடிமரம் மற்றும் பலிபீடம் உள்ளது. சன்னதியில் இறைவன் மனோக்கியநாத சுவாமி சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். ஆலயத்தில் இரண்டு அம்மன் சன்னதிகள் உள்ளன. ஒரு அம்மனின் பெயர் பக்தபீஷ்டப்பிரதாயினி . அவள் தவக் கோலத்தில் காட்சி தருகிறாள். திருமணக்கோலத்தில் உள்ள இன்னொரு அம்மனின் பெயர் அனுபமஸ்திரி என்பதாகும். இங்குள்ள வில்வ மரத்தில் உள்ள இலையின் ஒரு தளம் ஐந்து இலைகள் கொண்டது என்பது விசேஷம். ஆலயத்தில் வந்து வழிபட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும், திருமணம் விரைவில் நடைபெறும், வியாதிகள் தீரும், ஆ...

Kol Theerththa Vinaayagar

படம்
கோள் தீர்த்த விநாயகர் கதை சாந்திப்பிரியா நவகிரக ஆலயங்களில் கும்பகோணத்தில் உள்ள சூரியனார் ஆலயம் செல்லும் முன் திருமங்கலக்குடி என்ற ஆலயத்துக்கே முதலில் சென்று பிரார்த்தனையை தொடர வேண்டும் என்பது ஒரு விதி. அந்த ஆலயத்தில் முக்கியமாக முதலில் ஆலயத்தில் உள்ள கோள் தீர்த்த விநாயகரை வணங்க வேண்டும். அந்த கோள் தீர்த்த விநாயகர் யார் ? அவர் கதை இது. முன்னொரு காலத்தில் பல ரிஷி முனிவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு ஹிமய மலையின் ஒரு மலைப் பிரதேசத்தில் தவத்தில் இருந்தார்கள். அவர்களில் கால முனிவர் என்பவரும் ஒருவர். அவர் கடந்த காலம், தற்காலம் மற்றும் வரும் காலத்தை பற்றி ஜோதிடம் கூறக் கூடிய தன்மை கொண்டவர். அப்போது அந்த முனிவர்களில் ஒருவர் அனைவரது வரும் காலத்தையும் தெரிவிக்கும் அவருடைய வரும் காலத்தைப் பற்றிக் நினைத்துப் பார்த்தது உண்டா எனக் கேட்டார். அதனால் அந்த கால முனிவர் வரும் காலத்தில் தன்னுடைய நிலை என்ன என பார்த்தார். அதைப் பார்த்தவர் துணுக்குற்றார். காரணம் அவர் பூர்வ ஜென்மத்தில் தவளையின் கால்களை சமைத்து உண்டு இருந்ததினால் அந்த தவளையின் மீது பரிதாபப்பட்ட பிரும்மா இந்தப் பிறவியி...

More Temples in Penang

பெனாங் நகரில் அற்புத  ஆலயங்கள்   சாந்திப்பிரியா மலேசியா மற்றும் பெனாங்கில் சீன மற்றும் மலாசியா, தாய் நாட்டு மக்கள் வணங்கும் அற்புத ஆலயங்கள் பல உள்ளன. அவற்றில் உயிருடன் உலவும் பாம்புகளுக்காக ஒரு ஆலயம் கட்டப்பட்டு உள்ளது. அங்கு சென்று அவற்றை பூஜித்து வணங்குகிறார்கள். அது மட்டும் அல்ல சூதாட்டங்களில் வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் வாழ்கையில் வளம் பெறவும் செல்வம் கிடைக்கவும் குபேரனை இன்னொரு பெயரில் அந்த ஆலயங்களில் வணங்குகிறார்கள். பறக்கும் பாம்புகள் அல்லது பறக்கும் விலங்கையும் வணங்கித் துதிக்கும் ஆலயங்களும் அவற்றின் புனிதக் கிணறுகளும் உள்ளன. அவற்றை எல்லாம் படித்து மகிழ  கீழுள்ள தளத்தில் கிளிக் செய்யவும்.      இங்கே   கிளிக்   செய்யவும்           CLICK   HERE

Sreekoormam - Temple for Vishnu

படம்
ஸ்ரீ கூர்மானந்தா எனும் விஷ்ணு ஆலயம்  சாந்திப்பிரியா ஆந்திரப் பிரதேசத்தில் ஸ்ரீகாகுளத்தில்  இருந்து சுமார் பன்னிரண்டு கிலோ தொலைவில் ஸ்ரீகூர்மம் என்ற இடத்தில் உள்ளது ஸ்ரீ கூர்மானந்தா என்ற விஷ்ணுவின் ஆலயம். அந்த ஆலயத்தில் உள்ள விஷ்ணு ஆமையின் உருவில் காட்சி தருகின்றார். அவர் எடுத்த தசாவதாரத்தில் கூர்ம அவதாரம் முக்கியமானது. அமிருதத்தைக்எடுக்க சமுத்திரத்தை தேவர்களும் அசுரர்களும் கடைந்த போது அதைக் கடைய தேவர்கள் பயன்படுத்திய மந்தாரா என்ற மலை சமுத்திரத்தில் முழுக இருந்தபோது விஷ்ணு ஆமை உருவில் சமுத்திரத்தின் அடியில் சென்று அந்த மலையை தன் முதுகின் மீது தாங்கி நிற்கும் வகையில் நூறு யோசனை தூர அளவு பெரிய ஆமையானார். விஷ்ணு  மந்தார மலையை தன் முதுகின் மீது சுமந்த காட்சி    அந்த அவதாரத்தைக் குறிக்கும் வகையில் விஷ்ணு  ஆமை வடிவில் இங்கு எழுந்து உள்ளார். மேலும் அத்தனைப் பெரிய மலையைத் தாங்கி நின்றது போல தன்னை அங்கு வந்து வணங்கி நிற்கும் அனைவரது அத்தனை கஷ்டங்களையும் தாம் சுமந்து கொண்டு அவர்களைக் காப்பேன் என்பதை விளக்கும் தத்துவமாம் அந்த ஆலயத...

Puthukottai Gokarnewara Brahathaambal Temple

படம்
புதுக்கோட்டை கோகர்னேஸ்வரர் பிரகதாம்பாள் ஆலயம் சாந்திப்பிரியா  பலரும்  கோகர்னேஸ்வரர் ஆலயம் என்றால் கர்நாடகத்தில் கோகர்ணம் என்ற இடத்தில் உள்ள விநாயகர் ஆலயம் என்றே நினைப்பார்கள். ஆனால் தமிழ்நாட்டில் புதுகோட்டையில் உள்ள குகை கோகர்ண ஆலயம் பற்றி பலருக்கும் தெரியாது. அந்த ஆலயம் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்டது. அங்கு செல்ல நிறைய வாகன வசதிகள் உண்டு. புதுகோட்டைக்கு மதுரை, திருச்சி மற்றும் ராமேஸ்வரத்தில் இருந்து செல்லலாம். திருச்சியில் இருந்து சுமார் ஐம்பது கிலோ தொலைவில் உள்ள புதுகோட்டையில் உள்ள கோகர்ண ஆலயத்தின் பெயர் கோகர்ண பிரகதாம்பாள் ஆலயம். அது காமதேனுப் பசுவினால் அப்படி புகழ் பெற்ற தலம். அதன் கதை இது. ஒரு முறை தேவலோகத்தில் இருந்த காமதேனுப் பசு இந்திரனின் சபைக்கு தாமதமாக வந்தது. தன் சபைக்கு தாமதமாக வருவதா என காமதேனு மீது கோபம் அடைந்தார் தேவேந்திரன்.ஆகவே காமதேனுவையும் இனி சாதாரணப் பசுவைப் போல பூமியில் சென்று பிறந்து வாழுமாறு சாபமிட்டார். அதனால் வருந்திய காமதேனு பார்வதியிடம் சென்று அழுதது. அதை தேற்றிய பார்வதியும் அதற்கு...

Tua Pek Kong and Bat Temples (Guberar Aalayam) - Penang

படம்
பினாங்கில்  'துவா பெக் காங் '' எனும்  இரண்டு செல்வம்  தரும் ஆலயங்கள் சாந்திப்பிரியா உள்நாட்டு ஆலயங்களைப் பற்றியே படிக்கும் நாம் மாறுதலாக சில வினோதமான வெளிநாட்டு ஆலயங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம் என்பதற்காக இங்கு சில ஆலயங்களைப் பற்றிய செய்திகளை அவ்வப்போது தருகிறேன். அதில் ஒன்றுதான் பினாங் நகரில் உள்ள ''துவா பெக் காங் ஆலயம்''. பற்றிய செய்தி .  அந்த ஆலயத்துக்குச் சென்று தமக்கு செல்வம் பெருக வேண்டும் என்பதற்காக  - நாம் செல்வம் வேண்டி குபேரன் மற்றும் லஷ்மி தேவியை வேண்டுவது போல - சீனர்கள்  வணங்குகிறார்கள்.  கிழக்கு மற்றும் மேற்கு மலேசிய , சிங்கப்பூர் போன்ற இடங்களில் உள்ள சீன தேசத்தினர்  பெருமளவில் வழிபடும் ஆலயம் அது. அந்த ஆலயம் செல்வம் தரும் (குபேரர்)  ஆலயம் போன்றது. செல்வம் பெருகவும், நிறைய பணம் கிடைக்கவும் அங்கு வந்து வேண்டுதல்களை செய்கிறார்கள்.  ஆலயத்தில் உள்ள துவா பெக் காங் சிலை பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த சாங் லீ என்ற சகோதரர்கள் குழப்பத்தில் இருந்த அன்றைய சீனாவை விட்டு தப்பி ஓடியபோது அவர்கள் சென்று கொண்டு இருந்த...

Shithikandapuram Mahadevar Temple

படம்
ஷிதிகண்டபுரம் மகாதேவர் ஆலயம் சாந்திப்பிரியா கேரளத்தில் திருச்சூரில் உள்ள கோரட்டியில் சிவபெருமானுக்கு ஒரு ஆலயம் உள்ளது. திருச்சூரில் இருந்து எர்ணாகுளம் செல்லும் பாதையில் எர்நாகுலத்திர்க்கு இரண்டு கிலோ தொலைவுக்கு முன்னரே இந்த இடம் வரும். ஆலகால விஷத்தை உண்ட சிவ பெருமான் உலக நன்மைக்காக அந்த இடத்தில் வந்து தமது குடும்பத்தினருடன் தங்கினாராம். 1984 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட அச்தமன்கல்யா பிரசன்னத்தில் அந்த ஆலயத்தில் உள்ள சிவ லிங்கம் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனத் தெரிய வந்தது. சுமார் ஏறநூட்ட்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் திப்பு சுல்தான் மலபாரில் இருந்தவர்களை துரத்தியபோது அங்கிருந்து வந்து இந்த ஆலயம் உள்ள இடத்தில் தங்கியவர்கள் நீலகண்ட மகாதேவரையே தமது குல தெய்வமாக வழிபட்டு வந்துள்ளனர். மலபாரில் இருந்து ஓடி வந்தவர்கள் அங்கிருந்த ஆலயத்தில் இருந்து பரமசிவனையும் பகவதி தேவியையும் தங்களுடன் கொண்டு வந்து இருந்தார்கள். பின்னர் பகவதியை புளிக்கடவு என்கின்ற நதிக் கரையில் பிரதிஷ்டை செய்து வணங்கினார்கள். அதுபோல மகாதேவரை மேலூர் பரமேல் என்ற இடத்தில் பிரதிஷ்டை செய்து வணங்கினார்கள். கோரட்டி ஸ்வரூப் என்பவர...

Kolangal for ensuing festival

படம்
வர இருக்கும் பண்டிகை தினங்களில் புள்ளி வைத்து போடும் சுலபமான கோலங்கள்  சாந்திப்பிரியா படங்களின் மீது கிளிக் செய்தால் பெரிய அளவிலான  படங்களைப் பார்க்கலாம்