இடுகைகள்

செப்டம்பர், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Route map for important Temples

படம்
தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், மற்றும் மாயவரம் பகுதியில் உள்ள சில ஆலயங்கள்,  அங்கு செல்லும் வழிதடம் சாந்திப்பிரியா   படத்தை பெரிய அளவில் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்   பலரும் இந்த ஆலயம் செல்லும் வழி எது, அந்த ஆலயம் செல்லும் வழி எது, முக்கியமான ஆலயங்களுக்குச் செல்லும் வழி என்ன எனக் கேட்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு உதவியாக இருக்க சென்னையில் இருந்து தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், மற்றும் மாயவரம் செல்லும் வழியையும் முக்கியமாக கும்பகோணத்தை சுற்றி உள்ள நவக்கிரக ஆலயங்கள் செல்லும் வழியையும் மேலே உள்ள படத்தில் தந்துள்ளேன். மேலும் நான் தந்துள்ளதைத் தவிர  வேறு பல ஆலயங்கள் வழியெங்கிலும் வரும். அவற்றில் பழமையான ஆலயங்களை அங்காங்கே வண்டியை நிறுத்திப் பார்க்கலாம்.  வெளியூரில் இருந்து எப்போதாவது செல்பவர்கள்  ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது இரண்டு நாளாவது ஹோடல்களில் தங்கி அனைத்து ஷேத்திரங்களையும்  ஒரு வாரத்தில் தரிசிக்கலாம். கும்பகோணத்தை சுற்றி மற்றும் கும்பகோணத்திலேயே காண வேண்டிய சில ஆலயங்கள் 1) திருவையாறு செல்லும் வழியில் ...

Thirumeeyachur- Sree Lalithambigai Temple

படம்
திருமீயச்சூர் லலிதாம்பிகை ஆலயம் சாந்திப்பிரியா   ஆலயம்  படம் நன்றி : -http://divinebrahmanda.blogspot.com மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் பாதையில் சுமார் இருபது கிலோ தொலைவில் உள்ளது திருமீயச்சூர் என்ற சிறிய கிராமம். மயிலாடுதுறைக்கு பக்கத்தில் உள்ள நன்னிலம் மற்றும் பேரளத்தில் இருந்து மிகவும் அருகில் உள்ளது. இந்த ஆலயமும் சோழர்கள் காலத்தில் ராஜேந்திர சோழன் என்பவரால் கட்டப்பட்டதுதான். ஆலயத்தில் மேகநாதர் சமேதமாக லலிதாம்பிகை உள்ளார். இந்த ஆலய வரலாறும் சுவையானது.  லலிதாம்பிகை  படம் நன்றி : -http://divinebrahmanda.blogspot.com ஒருமுறை காஷ்யப முனிவர் அங்கு இருந்தார். அவருக்கு இரண்டு மனைவிகள் உண்டு. சிவபெருமான் பிரசாதமாகத் தந்த முட்டையில் இருந்து அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர் . ஒருவளுக்கு கருடனும் மற்றவளுக்கு அருணனும் பிறந்தனர். ஆனால் ஒருநாள் மோகினி போல தன்னை உருமாற்றிக் கொண்டு திரிந்த அருணனை சூர்யா பகவான் கெடுத்து விட அருணன் சிவபெருமானிடம் சென்று முறையிட்டார். ஆகவே கோபமடைந்த சிவபெருமானும் சூரியனாரின் ஓளி மறையுமாறு சாபமிட பயந்து போன சூரியனா...

Navagraha Sthoththiram

படம்
நவக்ரஹ ஸ்தோத்திரம்  சாந்திப்பிரியா நவகிரகங்களை நாம் தினமும் துதித்து வணங்குவத்தின் மூலம் நமக்கு அந்தந்த நவகிரக  நாயகர்களினால் ஏற்படும் தொல்லைகள் குறையும். அந்த ஒன்பது நாயகர்களும் அவர்களுக்கு இட்ட வேலைகளையே செய்கின்றார்களே தவிர வேண்டும் என்றே எவருக்கும் கெடுதல்களைப் புரிவது இல்லை. நாம் பூர்வ ஜென்மத்திலும், இந்த ஜென்மத்திலும் செய்துள்ள, செய்து வரும் பாவக் காரியங்களுக்கு  ஏற்ப நமக்கு விதிக்கப்பட்டு உள்ள தண்டனையையே அவர்கள் தருகிறார்கள். நாம் செய்துள்ள பூர்வ ஜென்ம பாப, புண்ணியங்களின் கணக்கின்படி  நமக்கு ஒரு குறிப்பிட்ட பிறப்பு தரப்படுகின்றது.  நமக்கு கொடுக்கப்பட்டு உள்ள அப்படிப்பட்ட பிறப்பில்  இன்ன  காலத்தில் இன்ன  தண்டனை, கீர்த்தி, சோதனை, போன்றவற்றை பெற வேண்டும் என  முடிவு  எடுக்கப்படுகின்றது. அதைத்தான் ஜாதகமாக கணித்து நம் ஜாதகத்தில் அந்த கிரக தோஷம் உள்ளது, இந்த கிரக தோஷம் உள்ளது எனக் கூறுவார்கள்.  கிரக தோஷம் என்ன என்றால் குறிப்பிட்ட  தண்டனையை  தரக்கூடிய நவகிரக நாயகர்கள் தரும் தண்டனை காலத்தையே கிரக தோஷம் என கூறப்படுகின்றத...

Tirupparaaithurai Siva Temple (Tiruchi )

படம்
திருப்பராய்துறை சிவன் ஆலயம் சாந்திப்பிரியா திருப்பராய்த்துறை என்ற சிறு கிராமம் திருச்சியில் இருந்து  கரூர்   செல்லும் வழித் தடத்தில் இருபது கிலோ தொலைவில் உள்ளது.  குளித்தலையில் இருந்தும் அந்த ஆலயம் செல்லலாம்.  அந்த கிராமத்தில் உள்ள மிகப் பெரிய சிவன் ஆலயம் சோழ மன்னர்கள் ஆண்ட ஏழாம் நூற்றாண்டை சேர்ந்தது. ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் ஸ்வயம்பு லிங்கமாகும். முன்னொரு காலத்தில் இந்த தலத்தில் தம்மைப் பொறுத்தவரை கற்பில் சிறந்து விளங்கி வாழ்ந்து வந்து கொண்டு இருந்த தாருகாவன முனிவர்கள் என்பவர்கள் தான் என்ற அகந்தை கொண்டு அலைந்தனர். பல வரங்களையும் பல சக்திகளையும் பெற்று இருந்தவர்கள் தாம் பெற்ற அனைத்துமே தாம் செய்த வேள்விகள், யாகங்கள் மற்றும் தவத்தினால்தான் என்ற எண்ணத்தில் தம்மையே கடவுளுக்கு இணையாகக் கருதி வாழத் துவங்கினார்கள். அவர்கள் ஆலயங்களை மதிக்காமல் தாம் உள்ள இடங்களே ஆலயங்கள் எனக் கருதி வாழத் துவங்க அதைக் கண்ட மற்ற ரிஷி முனிவர்கள் சிவ பெருமானிடம் முறை இட்டனர். ஆகவே அவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க நினைத்த சிவ பெருமான் விஷ்ணுவை அழைத்து அந்த தாருகாவன முனிவர்க...

Lakshmi Varaha Swami Temple - Kallidaikurichi (29)

படம்
தெரிந்த ஆலயம் , பலரும் அறிந்திடாத வரலாறு   - 29  இலஷ்மி  வராஹஸ்வாமி   ஆலயம் சாந்திப்பிரியா திருநெல்வேலி மற்றும் பாளயம்கோட்டைக்கு இடையில் தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ளதே கல்லிடைக்குறிச்சி என்ற சிறு கிராமம். கிராமம் சிறியது என்றாலும் அங்கு பல புராதானமான ஆலயங்கள் உள்ளன. அதில் முக்கியமான ஆலயம் லஷ்மி வராஹா ஆலயம். அங்குள்ள விஷ்ணு, வராஹா அவதாரத்தில் லஷ்மி தேவியை மடியில் அமர்த்தி வைத்தவாறு காட்சி தருகின்றார். ஆலயம் 1478 ஆம் ஆண்டை சேர்ந்தது என்கிறார்கள். ஆலய வரலாறு என்ன? அங்கு கூறப்படும் கதை இது. அந்த புராணக் கதையின்படி இந்த ஆலயம் உள்ள இடத்தில் ஆட்சி செய்து கொண்டு இருந்தவர் கிருஷ்ண பகவானின் தேவலோகத்து பக்தர். அந்த தேவலோகத்து மன்னன் அடிக்கடி பல யாகங்களையும் வேள்விகளையும் செய்து வந்தானாம். அப்போது அவன் ஒரு முறை அஸ்வமேத யாகம் செய்தான். அந்த யாகத்தைப் பார்க்க சிவன், பிரும்மா மற்றும் குபேரன் போன்ற பலரும் வந்தனர். அவர்களைத் தவிர பல தேவர்களும் தேவேந்திரனுடன் வந்தனர். ஆனால் விஷ்ணு மட்டும் வரவில்லை. ஆகவே அந்த யாகத்தில் பங்கேற்ற ரிஷி முனிவர்கள் அந்தக் குறையைத் தீர...

Kathaayee enum Valli's marriage with Murugan

படம்
காத்தாயி அம்மன் எனும்  வள்ளி தேவி முருகனை   மணந்த   கதை சாந்திப்பிரியா வள்ளி மற்றும் தெய்வயானையுடன் முருகன் வள்ளி வளர்ந்து பெரியவளாகத் துவங்கினாள். அவளுக்கு வயல்வெளிகளில் பாதுகாக்கும் வேலையை அந்த வேடுவர்கள் தந்தனர். அவள் வயலில் உள்ள பரண் மீது அமர்ந்து கொண்டு அங்கு தானியங்களை தின்ன வந்த பறவைகளையும் மிருகங்களையும் விரட்டி அடித்தாள். இப்படியாக அவள் அப்படிப்பட்ட வாழ்கையில் இருந்தபோது அந்த இடங்களில் சுற்றித் திரிந்து கொண்டு இருந்த முருகப் பெருமான் தற்செயலாக ஒருநாள் அவளை பார்த்தார். அவளுடைய அழகில் அவர் மயங்கினார். அவள் மீது தான் ஒருதலை பட்சமாக காதல் கொண்டு அங்கு ஒரு வேடன் போன்ற உருவில் அடிக்கடி வரத் துவங்கினார். அப்போது ஒரு நாள் ஒரு பிராணியை துரத்திக் கொண்டு வந்ததைப் போல வள்ளியிடம் சென்றார். முன்பின் அறியாதவர் வந்துவிட்டாரே என திகைப்புற்று அவரை யார் எனக் கேட்டாள் வள்ளி. அவர் தான் ஒரு வேடன் எனவும் அங்கு வேட்டை ஆட வந்தவர் எனவும் கூறிக் கொண்டார். இப்படியாக வேட்டை ஆடும் சாக்கில் அவர் தினமும் அங்கு வந்து ஏதாவது பேச்சுக் கொடுக்க இருவரும் நண்பர்கள் ஆய...

Birth of Siththaadi Kaththaayee Amman

படம்
காத்தாயி அம்மன் எனும்  வள்ளி தேவி பிறந்த கதை சாந்திப்பிரியா     வள்ளிமலை ஆலயத்தில் வள்ளி தேவி  முன்னொரு காலத்தில் தொண்டை மண்டலத்தில் வள்ளி மலை எனப்படும்  இடத்தில் இருந்த மலை அடிவாரத்தில் நம்பி  என்ற ஒரு வேடன் இருந்தான். ( அது இப்போது உள்ள வள்ளி மலை அல்ல) அவனுக்கு வெகு காலம் குழந்தையே பிறக்கவில்லை என்பதினால் கடவுளை தனக்கு  குழந்தை பாக்கியம் தருமாறு வேண்டிக் கொண்டே இருந்தான். ஆனாலும் வெகு காலம் அவனுக்குக் குழந்தை பிறக்கவில்லை. இப்படி இருக்கையில் அதே மலை அடிவாரத்தில் தவத்தில் இருந்த ஒரு முனிவர் ஒரு நாள் அந்தப் பகுதியில்  தன் கணவனுடன் சல்லாபித்துக் கொண்டு  இருந்த ஒரு பெண் மானைக் கண்டு அதன் அழகில் மயங்கினார். அது தன்னுடைய கணவனுடன் சல்லாபிப்பதைக் கண்ட முனிவரின் மனதில் காம இச்சை மனதில் தோன்றியது.  அந்த மானை ஒரு அழகான பெண்ணாக நினைத்தார். அதனால் அவருடைய மானசீகமான காம எண்ணக் கற்பனைகளினால்  ஈர்க்கப்பட்ட  அந்தப் பெண் மானும் கர்ப்பம் அடைந்து ஒரு அழகான பெண் குழந்தையை பெற்று விட்டது. முனிவர் மானிடர் என்பதினால் அந்த மானுக்கும்...

Rinavimochana Lingeswarar Temple- Kumbakonam

படம்
கடன் தொல்லைகளை தீர்க்கும் தலம் சாந்திப்பிரியா   ஞானாம்பிகை சமேத ரினவிமோச்னீஸ்வரர்  திருவாரூர், கும்பகோணம் செல்லும் சாலையில், கும்பகோணத்தில் இருந்து பதினைத்து கிலோ தொலைவில் உள்ளது  ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு சிவன் ஆலயம். அதை கடன்களை நிவர்த்தி செய்து தரும் ஆலயம் என்றே அழைகின்றார்கள். அந்த ஆலயம் உள்ள இடம் திருச்சேரி என்ற கிராமம். அந்த ஆலயத்தை ஒருவருக்கு ஏற்பட்டுள்ள கடன்களை நிவர்த்தி செய்து கொள்ள வந்து வணங்கும் ஆலயம் என்று கூறுகிறார்கள். ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஜென்மத்திலும் பிறக்கும்போதே அவரவர் பித்ருக்கள், சில ரிஷி முனிவர்கள், மற்றும் சில தெய்வங்களுக்கும் ஏதாவது ஒரு விதத்தில் கடன்பட்டு உள்ளார்கள் . அவற்றினால் ஏற்படும் தோஷங்கள் களைந்தால்தான் மறு ஜென்மம் ஏற்படாது என்பது மட்டும் அல்ல இந்த ஜென்மத்திலும் வாழ்கை சுமைகள் குறைந்து மன நலத்தோடு வாழ முடியும் என்பதே உண்மை. அந்த தெய்வ மற்றும் ரிஷி முனிவரின் கடன் பாக்கிகளே  நமக்கு பல விதங்களிலும் தொல்லை தருகின்றது. அவற்றில் ஒன்றே வறுமை, கடன் போன்றவை. ஆகவே இந்த ஆலயத்தில் சென்று ரினவிமோச்னீஸ்வரர் எனும்...

Aiswarya Kolam

படம்
ஐஸ்வர்ய கோலம் சாந்திப்பிரியா கீழே வெளியாகி உள்ள கட்டுரையையும், ஐஸ்வர்ய கோலம் செய்யும் முறையையும்  நான் 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கனடா நாட்டில் இருந்து வெளியாகும்  அருள் மிகு துர்கா தேவி இந்து சொசைட்டியின் - http://www.durkadevi.com/default.html -   என்ற இணையதளத்தில் வெளியிட்டேன். அவர்கள் என்னுடைய கட்டுரையை சாந்திப்பிரியாவின் கட்டுரைகள் என்ற தலைப்பில் வெளியிட்டு வருகிறார்கள். அந்த கோலத்தை என்னுடைய வலை தளத்திலும் வெளியிடுவதின் மூலம் மேலும் பலர் அதன் பலனை அடைவார்கள் என்று நம்புகிறேன். இந்த கோலத்துக்கான பொருட்களை பத்து  அல்லது பதினைந்து  மகளிகராக ஒன்று சேர்ந்து வாங்கி வந்து செய்தால் செலவு குறையும். இனி ஐஸ்வர்ய கோலத்தைப் பற்றியும், அதை செய்யும் முறையையும் படியுங்கள். படங்களையும், பக்கங்களையும்  பெரியதாகப் பார்க்க அந்தந்த  பக்கங்களின் மீது கிளிக் செய்யவும்.