Sri Amritananda Natha Saraswati (Guruji)

தேவிபுர ஸ்ரீ குருஜி

சாந்திப்பிரியா

ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் ஸ்ரீ சக்கரம் என்பது மகிமை வாய்ந்த சக்கரம். அதை பூஜித்து வணங்கி வந்தால் வாழ்வில் செல்வம், இன்பம், மற்றும் ஆரோக்கியம் போன்ற அனைத்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆனால் அதை யந்திரமாக வைத்து தவறான முறையில் பூஜிக்கக் கூடாது. நமக்கு நல்ல பலன் கிடைக்க குருவின் உதவில் இல்லாமல் யந்திர உபயோகம் செய்வதை விட சிறந்ததுதும் சுலபமானதும் என்ன என்றால் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் அதை பூஜை அறையில் அரிசி கோலமாகப் போட்டு மஞ்சள் மற்றும் குங்குமத்தினால் ஆன வண்ண பொடிகளைத் தூவி, நெய் விளக்கு ஏற்றி பூஜை செய்து ஆராதிக்கலாம்.
ஸ்ரீ சக்கிரம் போடுவது எப்படி?  அது மிகவும் கஷ்டமான கோலம் ஆயிற்றே என யோசிக்க வேண்டாம். அது போடும் முறையை நாம் புரிந்து கொண்டு விட்டால் அதை போடுவது சுலபம்.














டாக்டர் பிரஹலாத சாஸ்த்ரி என்பவர் ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்தவர். இளம் வயது முதலேயே ஆன்மீக ஈடுபாடு அதிகம் கொண்டவர். அணு ஆராய்ச்சியில் பௌதீகத்தில் பாடம் படித்தவர். மும்பை பல்கலை கழகத்தில் டாக்டரேடு பட்டம் பெற்றவர். டாடா பாண்டமெண்டல் ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றியவர். அவர் ஆத்மாவின் உண்மை என்பது என்ன என்பதை அறிய முனைந்தவர். 1977 ஆம் ஆண்டு ஹைதிராபாத்தில் பாலாஜி ஆலயம் சென்றவருக்கு தன்னை அறியாமல் ஏதோ ஆன்மீக உணர்வு ஏற்பட்டது. அன்னை பால திருபுர சுந்தரியிடம் இருந்தே முதல் பாடம் அவருக்குக் கிடைக்க அவர் ஆன்மீக வாழ்வை மேற்கொண்டார். அவர் அனகப்பள்ளியை சேர்ந்த ஸ்ரீ ஸ்வப்ரகாஷானந்த நாத தீர்த்த அவதூதரிடம் தீட்ஷை பெற்றார். ஜாம்பியா நாட்டுக்குச் சென்று இரண்டு ஆண்டுகள் வேலை செய்தார். 1981 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு மீண்டும் திரும்பி வந்தார். வந்தவருக்கு ஆன்மீக ஈடுபாடு அதிகம் வர  ஸ்ரீ வித்யா உபாசனை செய்து வரலானார்.
தேவிபுர ஆலயத்தின் தோற்றம்
மெல்ல மெல்ல அவர் பலருக்கும் செய்து வந்த உதவியின் காரணமாக ஒரு குடும்பம் அவருக்கு இலவசமாக நிலம் தந்து ஒரு ஆலயத்தைக் கட்டுமாறு வேண்டிக்கொள்ள அவர் தேவியின்  ஆலயத்தைக் கட்ட முயன்றார். தேவிபுரம் ஆலயம் உள்ள அதே இடத்தின் அருகில் இருந்த ஒரு மழைக் குன்றில் அமர்ந்து த்யானம் செய்து வந்தவர் ஒரு நாள் தன் மீது நான்குபேர் அமர்ந்து கொண்டு தீ மூட்டி ஹோமம் செய்வது போலவும் அது முடிந்ததும் தன்னுடைய மார்பில் ஏதோ ஒரு கனமான பொருள் ஆகாயத்தில் இருந்து வந்து வைத்ததைப் போல இருந்ததை உணர்ந்தார். திடுக்கிட்டு எழுந்தவர் அந்த இடத்தைத் தோண்டிப் பார்க்க அங்கு பஞ்சலோகத்திலான ஒரு மேருவின் சிலை இருந்ததைக் கண்டார். அது சுமார் இருநூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதைக் தெரிந்து கொண்டார். அவருக்கு அன்னை காமாஷி பதினாறு வயதான பெண்ணாகவே காட்சி தந்தாள். 
மெல்ல மெல்ல காமாஷி அம்மன், சிவபெருமான் போன்ற இருவருக்கும் ஆலயம் அமைத்தவர் தேவிபுரத்தில் ஸ்ரீ மேரு நிலையத்தை துவக்கினார். சுமார் ஐம்பத்து நாலு அடி உயரமான ஸ்ரீ மேரு ஆலயம் மூன்று அடுக்குகளானது. தேவி கடகமாலா ஸ்தோத்திரத்தில் உள்ளதைப் போல மூன்று தேவிகளின் உருவச் சிலை அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. அந்த ஆலயத்தில் ஜாதி பேதம் இன்றி அனைவரும் தாமே ஸ்ரீ சக்கர பூஜை செய்யும் விதத்தில் அனைத்தும் அமைக்கப்பட்டு உள்ளன. ஆலயத்தை ஆகாசத்தில் இருந்து பார்த்தால் ஸ்ரீ சக்கர வடிவிலேயே உள்ளதை காணலாம். அவர் மனைவியான ஸ்ரீமதி அன்னபூர்ணாம்பாவுடன் சேர்ந்து பக்தர்களுக்கு ஆசிர்வதித்துக் கொண்டு உள்ள அவர்களை ''குருஜி'' மற்றும் ''குருஜி அம்மா'' என  அன்புடன்  மக்கள் அழைக்கின்றனர்.
அவர் ஸ்ரீ சக்கர கோலம் போடும் முறையை எளிய முறையில் தந்து உள்ளார். அதை மாதிரியாகக் கொண்டு அனைவரும் பூஜை அறைகளில் வெள்ளிக் கிழமைகளில் ஸ்ரீ சக்கர கோலம் போட்டு ஆராதிக்கும் முறையில் தமிழில் கோல முறையை தனியாக கீழே தந்து உள்ளேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Nagachandreswar (E)

Vasanthapura Temple ( E)

Kudai Swamigal -E