Kabalamma Temple -T

பார்வதி தேவியின் அவதாரமே தேவி கபாலம்மா ஆவார். அந்த தேவிக்கு பெங்களூரில் இருந்து எழுபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள கபாலு எனும் ஒரு கிராமத்தில் ஆலயம் உள்ளது. கர்நாடகத்தின் ராம்நகர மாவட்டத்தில் கனகபுரா தாலுக்காவில் உள்ளது அந்த கிராமம். அந்த கிராமத்தில் உள்ள மலை மீது காணப்படும் ஆலயமே கபாலம்மாவின் மூல ஆலயம் என்பதாக கிராமியக் கதை உள்ளது. கிராமியக் கதையின்படி கும்பேஸ்வரனை வதம் செய்த பின் தேவி கபாலம்மா இந்த கிராமத்துக்கு வந்து கபாலு மலை மீது ஒரு ஆலயத்தில் அமர்ந்து கொண்டாளாம். மலை மீது ஆலயம் இருந்ததினால் வயதானவர்கள் மற்றும் நோயாளிகள் மலைமீது ஏறிச் சென்று அந்த ஆலயத்தில் வழிபட முடியாமல் இருந்தது. அந்த ஆலயமோ சுற்றி உள்ள இருபத்தி எட்டு கிராமங்களுக்கும் இருந்த ஒரே ஆலயமாக இருந்தது. ஆகவே இவற்றை மனதில் கொண்ட தேவி கபாலம்மா நந்தி தேவரான பசுவேஸ்வராவிடம் கலந்து ஆலோசனை செய்த பின் தனக்கு மலையின் கீழ் பகுதியில் ஆலயம் அமைத்தால் தான் அங்கு வந்து பக்தர்களின் வேண்டுகோட்களை நிறைவேற்றி அருள் புரிவேன் என சில பக்தர்களின் கனவில் தோன்றிக் கூறியதினால், ஊர் மக்கள் ஒன்று கூடி ஜோதிடர்களின் ஆலோஜனைப்படி தற்போது ...