Vanmutti Peruman (T)

எந்த ஒரு ஆலயத்திலும் மரத்தின் வேர் காயாமல் உள்ள பெரிய மரத்தில் வடிவமைக்கப்பட்ட மூலவரின் சிலையை காண முடியாது. அப்படி இருந்தால் அது தெய்வ மகிமையாக இருக்கும். பூரி ஜகந்நாதர் ஆலயத்திலும் கூட மூலவர் சிலைகளை மரங்களை வெட்டி எடுத்த மரத்தின் கட்டையில்தான் வடிவமைக்கின்றார்கள். ஆனால் 14 அடி உயர விஷ்ணு பகவானின் மூலவர் சிலை மிகப் பெரிய அத்தி மரத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளதை மாயவரத்தில் கும்பகோணம் செல்லும் பாதையில் உள்ள மாப்படுகை எனும் கிராம ஆலயத்தில் உள்ள வான்முட்டி ஆலயத்தில் மட்டுமே காண முடியும். இப்படி ஒரு அதிசயத்தை வேறு எந்த ஆலயத்திலும் காண இயலாது. பூமியில் இருந்து ஆகாயத்தை தொடும் அளவுக்கு காட்சி தரும் விஷ்ணு பகவானை இங்கு வான்முட்டி பெருமாள் என அழைக்கின்றார்கள். அந்த மூலவர் சிலை வடிவமைக்கப்பட்ட அத்தி மரத்தின் வேர்கள் கூட இன்னும் காயாமல் உள்ளது இன்னொரு அதிசயமாம். இந்த ஆலயம் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. 12 ஆம் நூற்றாண்டில் இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்ட ஆலயம் என்றும், ஆனால் தேவலோகத்தை சேர்ந்த அந்த தெய்வீக அத்தி மரம் 5000 ஆண்டுகளுக்கு ம...