Shri Azhagu Siddhar (T)

புதுச்சேரியில் உள்ள தென்னம்பாக்கம் கிராமத்தில் அழகு முத்து ஐயனார் ஆலயம் உள்ளது. புதுச்சேரியில் இருந்து ஏம்பலம் வழியாகவும், வில்லியனூர் வழியாகவும் இந்த ஆலயத்துக்கு செல்லலாம். இந்த ஆலயத்துக்குள் நுழைந்தாலே மண் மற்றும் சிமெண்ட் கலவையினால் செய்யப்பட்ட குழந்தை, கார், வீடு, கை, கால், மனித உருவம் போன்ற சிலைகளும், பொம்மைகளையும் காணலாம். அவற்றை முதலில் வணங்கிய பிறகே மூல சன்னதிக்கு சென்று வணங்க வேண்டும் என்பது ஐதீகம் ஆகும். இந்த ஆலயத்தின் பின்புறத்தில் கிணற்றின் மீது கட்டப்பட்ட ஸ்ரீ அழகர் சித்தர் சமாதி ஆலயம் உள்ளது. அந்த சித்தர் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னால் அந்த கிராமத்துக்கு வந்ததாக அங்குள்ளவர்கள் கூறுகிறார்கள். இன்னும் சிலரோ அவர் காலம் கி.பி 18 00 முதல் கி. பி. 1840 வரை ஆகும் என்றும் கூறுகிறார்கள். அந்த சித்தர் அங்கிருந்தபோது தமது பக்தர்களின் பல்வேறு நோய்களை தமது மந்திர சக்தியினால் குணமாக்கி இருக்கிறார். அங்குள்ள ஆலயத்தில் உள்ள அவரது சிலையில் காணப்படும் வாளில் பக்தர்கள் தமது வேண்டுகோட்களை எழுதி வைத்த காகிதத்தைக் கட்டி வைத்து தமது துன்பங்...