Saptha Kanniga (T)

பல ஆலயங்களிலும் நாம் சப்த அல்லது அஷ்ட கன்னிகைகள் அதாவது ஏழு அல்லது எட்டு எனும் அளவில் தெய்வ கன்னிகளின் சிலைகள் இருப்பதைப் பார்த்து இருக்கலாம். ஆலயங்களில் சென்று அங்குள்ள தெய்வங்களை துதித்தப் பின் அங்குள்ள தெய்வ கன்னிகைகளையும் துதித்துவிட்டு வந்தால் பல நன்மைகள் கிடைக்கும் என்கிறார்கள். அதற்குக் காரணம் அசுரர்களையும், அரக்கர்களையும் அழிப்பதற்கு அவர்களுடன் நடைபெற்ற யுத்தங்களில் தமக்கு உதவுவதற்கு சிவன், பார்வதி, விஷ்ணு போன்ற கடவுட்களே அந்த தேவதைகளை படைத்துள்ளனர் என்று நம்பப்படுவதே. இன்னும் சிலர் அவர்களை பிரும்ம தேவரே படைத்ததாகவும் கூறுகிறார்கள். அந்த தேவதைகளை ஆராதிக்க த்யான ஸ்லோகங்கள் உள்ளன. ஆகவே அவர்களை ஆராதித்துத் துதித்தால் நமக்குள்ள எதிரிகள் ஓடி விடுவார்கள். தீமைகள் அண்டாது. பயம் விலகும் என்பது பரவலான நம்பிக்கை. சப்த கன்னிகைகள் யார்? அந்த கன்னிகைகளை பற்றி தேவி மகாத்மியம், லிங்க புராணம், மத்சைய புராணம், வராக புராணம் போன்ற புராணங்களில் குறிப்புகள் உள்ளன. வராஹ புராணத்தின்படி சப்த கன்னிகைகள் ஏழு பெண் தெய்வங்கள் அல்ல, அவர்கள் அஷ்ட கன்னிகா எனப்படு...