Kaligambal (T)

மிகப் பழமை வாய்ந்த பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய தேவியின் ஒரு ஆலயம் சென்னையின் நெரிச்சலான ஒரு சாலையில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் வரலாறு குறித்தோ அல்லது மகிமைக் குறித்தோ பலருக்கும் தெரிந்து இருக்கவில்லை. காளிகாம்பாள் ஆலயம் எனப்படும் இந்த ஆலயத்தின் மூல தேவியான பரப்பிரும்ம சொரூபிணி காளிகாம்பாள் சென்னையின் கடற்கரையில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுந்தருளி தற்போது ஆலயம் உள்ள இடத்தில் வந்து அமர்ந்துள்ளாள். ஆலயம் 400 வருடங்களுக்கு முற்பட்டது என கூறுகின்றனர். ஆனால் வேறு சிலர் அது தவறு ஆலயம் 400 ஆண்டுகளுக்கு உள்ளாகவே எழுப்பப்பட்டதாக இருந்தாலும் அந்த ஆலயத்தின் தேவி 2000 வருடங்களுக்கு முற்பட்டவள் எனக் கூறுகிறார்கள். அதற்குக் காரணம் 2000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்ததாக நம்பப்படும் ஆதி சங்கரர் அந்த தேவியின் உக்ரஹத்தைப் பார்த்துவிட்டு, பின்னாளில் அந்த தேவியை வணங்கி துதிக்க வர உள்ள பக்தர்களுக்கு அவளது கோபம் எந்த விதத்திலும் துன்பத்தைக் கொடுக்கக் கூடாது என்பதற்காக அந்த தேவியின் உக்ரஹத்தைக் குறைக்க அவள் காலடியில் அர்த்த மேரு யந்திரத்தை பிரதிஷ்டை செய்து உள்ளார் என்பதே. 1640 ஆம் ஆண...