Chamunda and Tulja Devi- Tamil

kiy Nfhtpy; rhKz;lh kw;Wk; Jy;[h Njtp எழுதியவர் : சாந்திப்பிரியா மத்தியப் பிரதேசத்தில் உள்ள பல ஆலயங்கள் அவற்றின் கட்டுமானம் மற்றும் வரலாற்றின் பின்னணியினால் பெரும் புகழ்பெற்று விளங்குகின்றன. அதில் ஒன்றுதான் தேவாஸ் எனும் சிற்றூரில் உள்ள மலை மீது காணப்படும் சாமுண்டா மற்றும் துல்ஜா பவானி ஆலயங்கள். தேவாஸ் என்பது இந்தூர், உஜ்ஜயினி மற்றும் போபால் போன்ற மூன்று முக்கிய நகரங்களுக்கு மத்தியில் உள்ள சிற்றூர் ஆகும். இந்தியாவின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேசத்தில் தேவாஸ், இந்தூர், உஜ்ஜயினி, நாக்தா மற்றும் போபால் போன்றவற்றை உள்ளடக்கிய பிராந்தியத்தை அந்த காலத்தில் மால்வா மண்டலம் அல்லது மால்வா பிராந்தியம் என்ற பெயரில் அழைத்திருந்தார்கள். அந்த மால்வா பிராந்தியத்தில் மத்தியப் பிரதேசத்து தலைநகரான போபாலில் இருந்து சுமார் 143 கிலோ தொலைவில் உள்ளதே தேவாஸ் எனும் சிற்றூர் ஆகும். அந்த ஊரில் உள்ள மலை மீது தேவி வாசம் செய்கின்றாள் எனப் பொருள்படும் வகையில் இந்தி மொழியில் தேவி வாசஸ்தலம் என அழைக்கப்பட்ட இடம் காலப்போக்கில் மருவி தேவாஸ் என ஆயிற்று. கடல் மட்டத...