இடுகைகள்

ஜூன், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Raghuvamsam - 14

படம்
ரகுவம்சம்-14 - சாந்திப்பிரியா -  ரகுவம்ச அழிவின் துவக்கம் இப்படியாக நாக மன்னனின் சகோதரி குமுதவதியும் அவளை மணந்து கொண்ட ராமனின் மகன் குசனும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டு இருக்கையில் அவர்களுக்குப் பிறந்த மகனுக்கு அதீதி என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள். குசன் பல இடங்களுக்கும் திக்விஜயம் செய்து பல நாடுகளைக் கைப்பற்றி ராஜ்யத்தை விரிவுபடுத்திக் கொண்டார். அவர் ராஜ்யத்தில் மக்களும் மன மகிழ்வோடு வாழ்ந்து வந்தார்கள். எந்தக் குறையும் அவர்களுக்கு இருந்திடவில்லை. அப்படிப்பட்ட நேரத்திலே ஒருமுறை இந்திரன் தைத்தியாக்கள் என்பவர்களுடன் போருக்கு சென்றபோது அவர் தனக்கு துணையாக குசனையும் அழைத்துச் சென்றார்.  அந்த யுத்தத்தில் தைத்தியாக்கள் கடுமையான தோல்வி கண்டு ஓடினார்கள். கடுமையாக நடந்த யுத்தத்தில் தைத்தியா மன்னன் துர்ஜயா  மரணம் அடைந்தார். ஆனால் அது போலவே அந்த  கடுமையான யுத்தத்தில் துர்ஜயாவினால் குசனும் கொல்லப்பட்டு மரணம் அடைந்தார். குசன் மரணம் அடைந்த சில காலத்திலேயே அந்த மன வருத்தத்தினால் உந்தப்பட்ட குமுதவதியும் மரணம் அடைந்தாள். தந்தை குசாவின் மரணத்துக்குப் பின...

Raghuvamsam - 13

படம்
ரகுவம்சம்-13 - சாந்திப்பிரியா -  குசன் நாக கன்னிகையை  மணந்த கதை   இப்படியாக ராமனும் தனது அவதாரத்தை முடித்துக் கொண்ட பின்னர் ராம லஷ்மண, பரத மற்றும்  சத்ருக்னனின் பிள்ளைகள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து  கொண்டு அந்த எட்டு  சகோதரர்களில் அனைத்திலும் மேன்மையாக இருந்த குசனின் தலைமையின் கீழ்  ஏழுபேரும் ஆட்சி செய்து  கொண்டு வந்த வேளையில் ஒருநாள் குசன் தனது மந்திரிமார்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தபோது 'அரசனே, உனக்கு மங்களம் உண்டாகட்டும்' என்று கூறியபடி அந்த அறைக்குள்  ஒரு பெண் திடீர் என நுழைந்தாள்.  அவளைக் கண்டு திடுக்கிட்ட குசனும் அவளிடம் கேட்டார் 'பெண்மணி, நீங்கள் யார்?, உங்கள் கணவர் யார்?  அனைத்து காவலையும் மீறி என் அறைக்குள் எங்ஙனம் நுழைந்தீர்கள்?. உங்களுக்கு என்ன வேண்டும்? ' என அதிசயப்பட்டுக் கேட்டார்.  அதைக் கேட்ட பரதேசி போல தோற்றம் தந்த அந்தப் பெண்மணியோ 'அரசனே, உன்னுடைய தந்தையார் பூத உடலைத் துறந்து வைகுண்டம் போய் விட்டப் பின் தக்க தலைவன் இன்றி அவதிப்பட்டு சீரழிந்து கொண்டிருக்கும் அயோத்தியா பட்ட...

Raghuvamsam - 12

படம்
ரகுவம்சம்-12 - சாந்திப்பிரியா -  ராமர், லஷ்மணர் மற்றும் சீதையின் மறைவும் ரகுவம்சத்தினர் ஆட்சி தொடரவும் இப்படியாக பல்வேறு விதங்களிலும் இடையூறுகள் ஏற்பட்டு வந்தாலும் திறமையுடன் தனது வம்சத்தினர் ஆட்சியை தொடர்ந்து கொண்டு இருந்த ராமருடைய ராஜ்ய எல்லைகளும் விரிவடைந்து கொண்டே சென்றன. ஒரு நாள் யாத்திரையில் இருந்த ராமனை வழியிலே அகஸ்திய முனிவர் சந்தித்தார். அவருடைய ஆலோசனையின் பேரில் தனது ராஜ்ஜியம் ஸ்திரமாக அமைந்திருக்க ராமரும் அஸ்வமேத யாகம் ஒன்றை செய்ய முடிவு செய்தார். பல திசைகளில் இருந்தும் மன்னர்கள் பொன்னும் பொருளும் அனுப்பி யாகத்துக்கு பெருமை சூட்ட,  யாக முறைப்படி தனது ராஜ்ய குதிரையை திக் விஜயம் செய்ய அனுப்பி வைத்தார். அந்த யாக  குதிரையை வால்மீகி  ஆஸ்ரமத்தில் இருந்த லவ குசர்கள் அடக்கி வைத்துக் கொண்டார்கள். அஸ்வமேத யாகத்தைச் செய்யும் மன்னர்கள்  தமது சார்பிலே ஒரு குதிரையைப் பெரும் படையோடு அண்டை நாடுகளுக்கு அனுப்புவார்கள். மன்னனது படையினருடன் போரிட பலமில்லாத அரசர்கள் அந்த யாகக் குதிரையைத் தமது நாட்டின் வழியே இடையூறு இன்றி செல்ல  அனுமதிப்பதின் ம...

Raghuvamsam - 11

படம்
ரகுவம்சம்-11 - சாந்திப்பிரியா -  லவ குசர் பிறப்பும்  ராமருக்கு வந்த சோதனையும் ராவணனை வதம் செய்த பின் ராமரும் தனது மனைவி சீதையோடு புஷ்பக விமானத்தில் ஏறி  அயோத்திக்கு திரும்பலானார். வழி எங்கும் தான் எப்படி இலங்கையை அடைந்தேன் என்ற விவரங்களை சீதைக்கு ஆனந்தமாக கூறிக் கொண்டே வந்தார். வனத்தில்  தாம் வசித்த இடம், சீதையை ராவணன் கடத்திய இடம், மாய மான் உருவில் இருந்த மாரீசன் கொல்லப்பட்ட இடம், ஜடாயு  யுத்தம் செய்து மடிந்த இடம், சுக்ரீவரின் நட்பைப் பெற்ற இடம், வாலியை வதம் புரிந்த இடம், ஹனுமான் தன்னிடம் வந்து சரண் அடைந்த இடம்,  கங்கை, சரஸ்வதி, சராயு போன்ற நதிகள் என அனைத்தையும் குறித்து கூறிக் கொண்டே வந்தவர் அயோத்தியாவை அடைந்ததும்  பட்டாபிஷேகம் செய்து கொண்டு நாட்டின் அரச பதவியை தனது  சகோதரன் பரதனிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.  ராஜ்யத்தை ஆளத் துவங்கிய ராமரின் மனைவி சீதையும் கர்பவதியானாள். அனைவரும் ஆனந்தத்துடன் அந்த செய்தியைக் கொண்டாடினார்கள்.  நாட்கள் ஓடின.  நாடும் நல்லபடியாக ராமரின் ஆட்சியில் அமைந்து இருந்தது.  ஒருநாள் ...

Raghuvamsam - 10

படம்
ரகுவம்சம்-10 - சாந்திப்பிரியா -  ராமரின் வனவாசம்  ஜடாயுவின் மரணம் மற்றும் ராவண வதம்  பரசுராமருடன்  ஏற்பட்ட நிகழ்வுகள் அனைத்தையும் கேட்டறிந்த  அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்து ராம லஷ்மணர்களை வரவேற்று உபசரித்தார்கள். அவர்களது வீர, தீர மற்றும் பெருமையை எடுத்துக் காட்டிய சம்பவங்களை நிகழ்த்தியதற்கும்,  சீதையை ராமன் திருமணம்  செய்து கொள்ளக் காரணமாக இருந்தவருமான   விஸ்வாமித்திர  முனிவருக்கும்  பெரிய வரவேற்பு அளித்து, அவரை பல விதமாக கௌரவித்து,  வணங்கித் துதித்து தமது ஆனந்ததை வெளிப்படுத்தினார்கள். அடுத்து நிகழ்ச்சிகள் மீண்டும் வேக வேகமாக நடந்தேறின. தசரதன் தனக்கு வயதாகி விட்டதை உணர்ந்தவுடன் ராமனை பட்டதில் அமர்த்தி விட்டு தான் ஆன்மீக வாழ்வை மேற்கொள்ள முடிவு செய்தபோது, மீண்டும் ஒரு சங்கடம் கூனியின்  உருவிலே வந்தது.  கூனியின் போதனையினால் ஈர்க்கப்பட்ட கைகேயி தசரதனிடம் இருந்து முன்னொரு காலத்தில் தான் பெற்று இருந்த வாரத்தை நினைவூட்டி  ராமனை தனது மனைவியுடன் பதினான்கு வருட காலம் வனவாசம் செல்லவும்,  பரதனை ...

Raghuvamsam - 9

படம்
ரகுவம்சம்-9 - சாந்திப்பிரியா -  ராமர் சீதையை மணந்ததும்  பரசுராமர் கர்வ பங்கத்தை அடக்கிய கதையும்   சீதையை மணக்க வேண்டும் என மனதார விரும்பி ஆசை ஆசையாக அங்கு வந்திருந்த அனைத்து ராஜ குமாரர்களும் நான் முந்தி, நீ முந்தி என அடுத்தடுத்து சபை நடுவே வந்து வில்லையும், அம்பையும் தூக்க முயன்று தோல்வி அடைந்து முகம் சோர்ந்து போய் அவரவர் ஆசனங்களில் சென்று அமர்ந்தார்கள். நடந்தவற்றைக் கண்ட ஜனகரும் சோர்ந்து போய் அமர்ந்து கொண்டார். சீதைக்கு இனி மணமாகாது என்றே நினைத்து வேதனையில் ஆழ்ந்தார். அப்போது விஸ்வாமித்திரர் ராமனை நோக்கி 'நீ சென்று முயன்று பார்' என்று கூறி ராமனை அனுப்ப ராமனும் விஸ்வாமித்திரரை வணங்கி விட்டு அந்த வில்லையும் அம்பையும் தூக்க எழுந்து சென்றார். இத்தனைப் பேர் முயன்றும், அனைவரும் தோற்றுப் போய் விட்ட நிலையில் அவர்களை விட இளம் வயதினராக தோன்றும் இந்த ராமன் எங்கே இதை தூக்கி வெற்றி கொள்ளப் போகிறான் என முகத்தில் எந்த சலனமே இன்றி அமர்ந்திருந்த ஜனகருக்கு ராமர் வணக்கத்தை தெரிவித்தப் பின்  எளிதாக அந்த வில்லைத் தூக்கி வளைத்து உடைத்தார். அனைவரும் அதைக் கண்டு மகிழ்ச்...

Raghuvamsam - 8

படம்
ரகுவம்சம்-8 - சாந்திப்பிரியா -  விஸ்வாமித்திர முனிவர் நடத்திய யாகமும்   சீதையின் ஸ்வயம்வர மும் நால்வரும் வளர்ந்து பெரியவர்களானவுடன் ஒருநாள் ராஜகுரு விஸ்வாமித்திரர் தசரதரின் அரண்மனைக்கு வந்து தசரதனிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். தான் செய்யும் ஒருயாகம் அசுரர்களால் இடையூறு செய்யப்பட்டு தடுக்கப்பட்டுக் கொண்டே இருப்பதினால் தன்னால் யாகத்தை சரிவர செய்ய இயலவில்லை என்றும், அதனால் யாகம் நடந்து முடியும்வரை யாகத்துக்கு காவலாக இருக்க ராமனையும் லஷ்மணரையும் தன்னுடன் அனுப்புமாறு கேட்க தசரதர் தயங்கினார். தனக்கே வெகு காலத்துக்குப் பிறகே புத்திர பாக்கியம் கிடைத்திருக்கையில் யாகத்துக்கு காவலாக இருக்கும் நேரத்தில் அந்த அசுரர்களின் மூலம் அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது என பயந்து போன தசரதன் விஸ்வாமித்திரர் வேண்டுகோளை ஏற்கத் தயங்கினார். ஆனாலும் சற்றே சுதாகரித்துக் கொண்டு ராம லஷ்மணர்களுக்கு பதில் தனது படைகளை யாகத்துக்கு  காவலாக இருக்க அனுப்புவதாக கூற,  அதை ஏற்க விஸ்வாமித்திரர் மறுத்து விட்டதுடன், தான் கேட்டபடி ராம லஷ்மணரை தனது யாகத்துக்கு கா...

Raghuvamsam - 7

படம்
ரகுவம்சம்-7 - சாந்திப்பிரியா -  மன்ன ன் தசரதன்  பெற்ற சாபம்    அயன் மரணம் அடைந்த பிறகு ராஜ்ய பரிபாலனத்தை ஏற்றுக் கொண்ட தசரதனும் தன் தந்தையைப் போலவே நல்லாட்சி நடத்தி வந்தார். தீய செயல்களோ அல்லது தீய குணங்களோ அவரிடம் சிறிதும் காணப்படவில்லை. அவரும் தனது தந்தையைப் போல பல நாடுகள் மீதும் படையெடுத்து சென்று தனது நாட்டை விரிவுபடுத்திக் கொண்டிருந்தார். ஜனங்கள் அவர் மீது பெரும்  மதிப்பு வைத்து இருந்தார்கள். பல விஷயங்களிலும் அவர்  சிறந்து விளங்கினார். அமைதியாக வாழ்க்கை ஓடிக் கொண்டு இருக்கையில் அவர் கோசலநாட்டு மன்னனின் மகளான கௌசல்யயையும், கேயதேசத்து அரசனின் மகளான கைகேயி மற்றும் மகர தேசத்து மன்னனின் மகளான சுமித்திரையும் மணந்து கொண்டார்.  இப்படியாக மூன்று மனைவிகளுடனும் ஆனந்தமான வாழ்க்கை நடத்திக் கொண்டு இருக்கையில் அவருக்கும் ஒரு சோதனை வந்தது. வசந்த காலத்தில் பொதுவாக மன்னர்கள் வன வேட்டைக்குச் செல்வார்கள். அப்போதுதான் காட்டில்  வனவிலங்குகள் ஓடியாடித் திரியும். உணவுக்கு இறை தேடி அங்கும் இங்கும் அலையும். செடி கொடிகள் அற்புத பச்சை நிறத்தில் மனத...

Raghuvamsam - 6

படம்
ரகுவம்சம்-6 - சாந்திப்பிரியா -  அயன்  மரணமும்,  தசரதன் பதவி ஏற்றதும்  அயன் பல விஷயங்களிலும் சிறந்து விளங்கினான்.  பெரும் பலமும் வீரமும் மிக்கவனாக இருந்தார். எந்த நாட்டு அரசனுக்கும் எந்த விதமான தொல்லையும் கொடுத்ததில்லை.  அமைதியாக வாழ்க்கை ஓடிக் கொண்டு இருக்கையில் ஒருநாள் அவன் தனது மனைவி  இந்துமதியுடன் சோலையில் அமர்ந்திருந்தபடி பூக்களைப் பறித்தபடி ஓடியாடிக் கொண்டு விளையாடிக் கொண்டு இருந்தார். இருவரும் ஒரு மரத்தடியில் படுத்திருந்தவாறு பேசிக் கொண்டு இருக்கையில் வானத்து வழியே சென்று கொண்டு இருந்த நாரத முனிவருடைய வீணையில் இருந்து ஒரு மாலை கீழே விழுந்தது. விழுந்த மாலை இந்துமதியின் மார் மீது வந்து விழ அவள் ஒரு கணம் பரவசம் அடைந்து மகிழ்ந்த பின் அப்படியே பூமியிலே வீழ்ந்து மாண்டாள். அதைக் கண்ட அயனும் அப்படியே மூர்ச்சை அடைந்து விழுந்தார். அவருடைய பரிவாரங்கள் அனைவரும் அழுது புலம்பினார்கள். அன்னமும், ஆகாயத்திலே பறந்து சென்ற கிளிகளும் கூட அழுது புலம்பின. சற்று நேரத்தில் அயன் மட்டும் கண் விழித்தார். இறந்து கிடந்த தனது மனைவியின் உடலைக் கண்டு ...

Raghuvamsam - 5

படம்
ரகுவம்சம்-5 - சாந்திப்பிரியா -  அயனுடன் இந்துமதியின் ஸ்யம்வரம்  ஸ்வயம்வரம் துவங்கியது. விதர்ப நாட்டு மன்னனின் அழகிய மகளான இந்துமதியும்  தனது கையில் மாலையுடன் ஒவ்வொரு வரிசையாக சென்று அங்கிருந்த மன்னர்களையும், ராஜகுமார்களையும் தனது உடலையும், முகத்தையும் முழுமையாக மூடி இருந்த  சேலை வழியே பார்த்துக் கொண்டே நடந்து செல்கையில் அவள் கூட இருந்த அவளது தோழியோ அந்தந்த மன்னர்களையும், ராஜகுமார்களையும் குறித்த அருமைப் பெருமைகளைக் கூறியவாறு அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தபடி ஆவலுடன் கூடவே சென்றவண்ணம் இருந்தாள்.  அந்த மன்னர்களும், ராஜ குமாரர்களும்   இந்துமதி தம் அருகில் வரும்போது தமக்கே உரிய தோரணைகளை  வெளிப்படுத்தியவாறு இருந்து கொண்டு அவள் கவனத்தைக் கவர முயற்சி செய்தார்கள். ஒரு அரசன் தனது கையில் வைத்திருந்த ரோஜா மலரை சுற்றி சுற்றி சுயற்றியவண்ணம் அழகு சேட்டை செய்தபடி இருக்க, இன்னொருவன் தான் எத்தனை செல்வந்தன் என்பதைக் காட்ட தங்க இழைகளினால் நெய்யப்பட்ட தனது அங்கவஸ்திரத்தை   (ஒரு பக்க சட்டை மீது போர்த்திக்  கொள்ளும் துணி)   அவ்வபோது கை...

Raguvamsam - 4

படம்
ரகுவம்சம் - 4 - சாந்திப்பிரியா -  கெளட்ச முனிவர் யாசகம்  கேட்டு வந்த  கதை வரதந்து எனும் மாமுனிவரின் சிஷ்யர் கௌட்ச முனிவர் ஆவார். அவருக்கு அவரது குருவிடம் இருந்து கிடைத்த கல்வி அறிவுக்கு ஈடாக குரு தட்க்ஷணை  கொடுக்க வேண்டும் என்ற நிலை தோன்றியபோது  கௌட்ச முனிவர் அதற்குத் தேவையான செல்வத்தை மன்னனிடம் இருந்து யாசகமாக பெற்றுக் கொண்டு செல்லலாம் என வந்திருந்தார். ஆனால் அனைத்து செல்வத்தையும் தானங்களைத் தந்தே இழந்து விட்டு, இனி யார் வந்து தானம் கேட்டாலும் கொடுக்க கையில் எந்த செல்வமும் இல்லாமல் நின்றிருந்த வேளையில்  முனிவர் மன்னனிடம் யாசகம் பெற வந்தார். அந்த முனிவர் வந்த நேரத்திலோ ரகுராமனிடம் மண் பாண்டத்தைத் தவிர வேறு எதுவுமே கொடுப்பதற்கு இல்லை. இருந்த அனைத்து தங்கக் குடங்களையும் தானமாக தந்தாகி விட்டது.  இவருக்கு எதைக் கொடுப்பது என மனம் தடுமாறினாலும், தன்னிடம் யாசகம் கேட்டு வந்தவருக்கு ஒன்றும் கொடுக்காமல் அனுப்ப விருப்பம் இன்றி அவரை அமரச் சொல்லி அர்கியம் கொடுத்து அன்புடன் நலம் விசாரிக்கலானார். 'முனிவர் பெருமானே, தங்களுடைய குருநாதர்...

Raghuvamsam - 3

படம்
ரகுவம்சம் - 3 - சாந்திப்பிரியா -  ரகுவின்பிறப்பும் ,  இந்திரனுடன் யுத்தமும் அடுத்த சில நாட்களிலேயே சுடாக்ஷிணா கர்பமுற்று நல்ல மகனைப் பெற்றெடுத்தாள். நாடே அந்த நல்ல செய்தியைக் கேட்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியது. அனைவருக்கும் மன்னன் தாராளமாக நன்கொடைகளை தந்து தானங்களும் செய்து அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடினார்.  புத்திரன்  பிறந்ததும் நடைபெறும் அனைத்து சடங்குகளும் நடந்து முடிந்த பல காலத்துக்குப் பிறகு பிறந்த பிள்ளைக்கு ரகு என்ற பெயரை சூட்டினார்கள். வயதுக்கு வந்த பிள்ளைக்கு சடங்குகள் முறைப்படி நடந்தேறியன. ரகுவும் கடலைப் போல கல்வி ஆற்றலையும் அறிவையும்  பெற்றுக் கொண்டான். தக்ஷனின்  மகள்கள் எப்படி சந்திரனை மணந்தனவோ அதைப் போல அழகும் ஆற்றலும் பெற்றிருந்த மணப் பெண்களை தனது மகனுக்கு மனைவியாக்கி அழகு பார்த்தார். தன்னைப் போலவே அறிவையும் ஆற்றலையும்  பெற்ற மகனிடம் ராஜ்ய பரிபாலனத்தை தருவதற்கு முன்னர் அஸ்வமேத யாகம் செய்யுமாறு வசிஷ்டர் திலீபனுக்கு  அறிவுறுத்தினார். அஸ்வமேத யாகமும் துவங்கியது.  அஸ்வமேத யாகக் குதிரைக்குக் ...