இடுகைகள்

மே, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Krishna worship

படம்
கி ரு ஷ் ண   வ ழி பா டு சா ந் தி ப் பி ரி யா கிருஷ்ணர் இந்து சமயத்தில் முக்கியமான ஒரு கடவுளாக கருதப்படுபவர். இவர் பத்து அவதாரங்களை அதாவது தசாவதாரம் எடுத்த விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாக கருதப்படுகிறார். கிருஷ்ண அவதாரத்தை எடுக்க அவர் பூமியிலே வாசுதேவருக்கும் தேவகிக்கும் குழந்தையாக பிறக்க வேண்டி இருந்தது. கிருஷ்ணா என்ற சமஸ்கிருத சொல்லிற்கு கருமை அல்லது அடர்ந்த நிறம் என்ற அர்த்தம் தரும். அதனால்தான் கரும் நீல நிறத்தவரான கிருஷ்ணரை கருநீல தெய்வம் என்று கூறுவார்கள். கிருஷ்ணரின் காலம் குறித்து பல சர்ச்சைகள் உள்ளன என்றாலும் புராண நூல்கள் மற்றும் ஜோதிட கணிப்புக்களின்  அடிப்படையில் கிருஷ்ணரின் பிறப்பில் இருந்து இறப்பின் காலம் கி.மு 3228 ஆம் முதல் கி.மு. 3102 வரையிலும் இருக்கலாம் என்பதாக பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.  5222 ஆண்டுகளுக்கு முன்பு பகுளாஷ்டமி, தேய்பிறை திதியில் ரிஷப லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணாவதாரம் நிகழ்ந்ததாக சாஸ்திர அளவியல் கணக்குகள் மூலம் தெரிய வருகிறது.  வேதங்கள் இயற்றப்பட்டது அதற்கும் முற்பட்ட காலத்தில், அதாவது கி....

Neelamadhava-Puri Jagannathar - 6

படம்
6 காலம் ஓடியது. பூரி ஜகன்னாதர் ஆலயத்தில் மூலவர்களின் சிலைகளை மாற்ற வேண்டிய காலம் வந்தபோது, அந்த சிலைகளை அமைக்க தேவையான தெய்வீக வேப்ப மரம் உள்ள இடத்தை எப்படிக் கண்டு பிடிப்பது என ஆலயத்தினர் குழப்பத்தில் ஆழ்ந்தபோது அவர்களில் மூத்த வயதானவர் கனவில் தோன்றிய மங்களா தேவி, திருவிழாவை துவக்கியதும், தெய்வீக வேப்ப மரத்தை தேடப் போகும் குழுவினர் தன் ஆலயத்தில் வந்து தங்கி தன்னை வழிபட்டால் தான் அந்த மரத்தை தேடிக் கண்டு பிடித்து அவர்களுக்குக் கூறுவதாக வாக்குறுதி தந்தாள். அது முதல் நபகலேபரா திருவிழா துவங்கியதும், சிலைகளுக்கான மரத்தை தேடும் குழுவினர் முதலில் மங்களா தேவியின் ஆலயத்துக்குச் சென்று அங்கு சில நாட்கள் தங்கி இருந்து அவளை ஆராதிப்பார்கள். அவர்கள் அங்கு சென்றதும், ஒரு சில நாட்களிலேயே அவர்களுக்குத் தேவையான மரங்கள் உள்ள இடங்களை மங்களா தேவி கண்டுபிடித்து, அந்தக் குழுவின் தலைவரிடமும், வேறு சிலரிடமும் அவர்கள் கனவில் தோன்றி அந்த மரங்கள் உள்ள இடத்துக்கு செல்லும் வழியை மங்களா தேவி கூறுவாளாம்.  ஒரே மரத்திலேயே ஜகன்னாதர், சுபத்ரை மற்றும் பாலபத்திரரின் சிலைகளை செய்ய மாட்டார்கள். ஒவ...

Neelamadhava-Puri Jagannathar - 5

படம்
5 மரங்களில்  வேப்ப மரம் ஆண் வர்கத்தை சார்ந்தது என்றாலும் வேப்ப மரமே பல பெண் தெய்வங்களுக்கு விசேஷமான மரமும் ஆகும்  என்பதினால் வேப்ப மரத்தை ஜாதி பேதம் இல்லாமல், ஆண்களும் பெண்களும் வணங்குகிறார்கள்.  அதனால்தான் ஆணான  பூரி ஜகன்னாதரும், பெண்ணான சுபத்ரையின் உருவமும் இந்த மரத்தில் வடிவமைக்கப்படுகிறது. அந்த வேப்ப மரமும் சில தனித் தன்மைகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். அப்படி தேடப்படும் வேப்ப மரத்தின் தன்மைகள் என்ன ? 1) கருமையான நிறத்துடன் காட்சி தர வேண்டிய வேப்ப மரத்தில் அது வளர்ந்தது முதல் எந்த பறவையின் கூடும் கட்டப்பட்டு இருக்கக் கூடாது. 2) அந்த வேப்ப மரத்தின் பக்கத்தில் ஒரு புளிய மரம் இருக்க வேண்டும் 3) அந்த மரத்தின் அருகில் சுடுகாடு இருக்க வேண்டும் 4) அந்த மரத்தின் அடியில் பாம்புப் புற்று அல்லது பாம்புப் பொந்து இருக்க வேண்டும். 5) அந்த அடிப்பகுதியில் உள்ள பொந்தில் கொடுமையான விஷ நாகம் வாழ்ந்து கொண்டு இருக்க வேண்டும். 6) மரத்தின் அடிப்பகுதி வளைந்திருக்காமல், வேர் பகுதியில் இருந்து பத்து அல்லது பன்னிரண்டு அடி உயர அளவு வரை, நேராக வளர்ந்து இருக்க வேண்டும் ...

Neelamadhava-Puri Jagannathar - 4

படம்
4 தவறோ நடந்து விட்டது. ஆனால் என்ன்ன செய்வது ? அதுவும் நீல மாதவரின் சித்தமே என எண்ணியவாறு சிலைகளை ஆலயத்தில் வைத்து அவற்றை பிரதிஷ்டை செய்ய தேவலோகம் சென்று பிரும்மாவை அழைத்து வருமாறு நாரத முனிவர் கூறியதினால் இந்ரதைய்யுமா பிரும்மலோகத்துக்கு கிளம்பிச் சென்றார். இந்ரதைய்யுமா பிரும்மலோகத்துக்கு சென்று இருந்தபோது கண்களை மூடியபடி பிரும்மா தவத்தில் அமர்ந்து இருந்தார். அவர் கண் முழிப்பதற்கு பல நூற்றாண்டு காலம் பிடித்ததினால் இந்ரதைய்யுமாவினால் திரும்பி வரமுடியவில்லை. பிரும்மலோகத்திலேயே காத்திருக்க வேண்டியதாயிற்று.  ஆகவே பல நூற்றாண்டுகள் கழிந்து விட்டதினால் அவர் பூமியிலே கட்டி இருந்த ஆலயம் திறக்கப்படாமல் இருக்க அது  அப்படியே  பூமியிலே மெல்ல மெல்ல புதைந்து போகத் துவங்கியது. இந்ரதைய்யுமா தேவ லோகத்துக்கும் சென்று இருந்த அதே நேரத்தில் அவர் ஆண்டு வந்திருந்த ராஜ்யமும் மன்னன் இல்லாத ராஜ்யமாகி விட, ஆண்டுகளும் பலநூற்றாண்டுகளைக் கடந்து விட, அந்த ராஜ்யத்தை இந்ரதைய்யுமாவிற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த இரண்டு மன்னர்கள் ஆண்டார்கள். அவர்களுக்கு நடந்தவை எதுவுமே தெரியாது. அதில் இரண்டாமதாக ஆட...

Neelamadhava-Puri Jagannathar - 3

படம்
3 அடுத்த கணம் அங்கிருந்த நாரத முனிவரும் மறைந்து விட்டார். அந்த கண்ட இந்ரதைய்யுமாவும் சற்றே அதிர்ந்து போனாலும் தனக்கு அசீரி மூலம் கொடுக்கப்பட்ட கட்டளையின்படியே ஒரு ஆலயம் அமைத்து அதை சக்தியூட்ட  பிரும்மாவை வேண்டி அழைத்தார். ஆனால் பிரும்மாவோ அந்த ஸ்ரீ ஷேத்திரம் விஷ்ணு பகவான் தானே அவதரிக்கும் இடம் என்பதினால் தன்னால் அந்த காரியத்தை அங்கு செய்ய இயலாது என்றும், ஆலயம் கட்டி முடிக்கப்பட்டப் பின்னரே தான் வந்து ஆலயத்தின் மீது  ஒரு ஆலயக் கொடியை ஸ்தாபிப்பதாகவும், தூரத்தில் இருந்தே அதை எவர் தரிசித்தாலும், அவர்களுக்கு மோட்ஷம் கிட்டும் என்றும் கூறி விட்டார். ஆகவே ஆலயம் அமைக்க பிரும்மா வருவார் என நாரத முனிவர் கூறியது வெறும் பேச்சோ எனக் குழம்பிய மன்னன் தான் எப்போது ஆலயம் அமைப்பது,  அதில் எப்போது விஷ்ணு பகவான் வந்து அமர்வார், அவர் உருவை வடிவமைக்க தேவையான மரத்தை எங்கு போய் தேடுவது என மேலும் மேலும் குழம்பியவாறு மனம் உடைந்து போன இந்ரதைய்யுமாவும் மீண்டும் உண்ணாவிரதம் இருந்து தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றார். அன்று இரவே விஷ்ணு பகவானும் மீண்டும் இந்ரதைய்யுமாவின் கனவ...