இடுகைகள்

ஏப்ரல், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கூந்தலூர் முருகன்

படம்
சாந்திப்பிரியா   சென்னையில் இருந்து மாயவரம் மற்றும் கும்பகோணம் செல்லும் வழியில் உள்ளது பூந்தோட்டம்.  அதன் அருகில் உள்ளதே கூந்தலூர் எனும் சிறு கிராமம். கும்பகோணத்துக்கு தென் கிழக்கே சுமார் 10 அல்லது 12 கிலோ தொலைவில் அரிசிலாற்றின் தென் கரையில் உள்ளது கூந்தலூர் ஆலயம். நாச்சியார் கோவில், எரவாஞ்சேரி, பூந்தோட்டம் சாலையில் சென்றோ அல்லது நாச்சியார் கோவிலில் இருந்து 10 கி.மீ தொலைவு பயணித்தோ இங்கு செல்லலாம். சென்னையில் இருந்து மாயவரம் செல்லும் பல பேருந்துகள் கூந்தலூர் வழியே செல்கின்றன. கூந்தலூரில் உள்ள ஆயிரம் ஆண்டுக்கும் மேற்பட்ட பழமையான முருகன் ஆலயம் இது ஆகும்.  சனி மற்றும் செவ்வாய் கிரக தோஷங்களை நிவர்த்திக் கொள்ளும் பரிகாரத் தலம் இது. அருணகிரிணாதர் பாடியது போல 'சிலம்பு ஏந்தி, காலிலும் கையிலும் சலங்கையும் தண்டையும் கட்டி, வலிமையான தோளுடன் காட்சி தரும் முருகப் பெருமான் என் முன்  நின்றிருந்தால், நாளோ, பூர்வ ஜென்ம வினையோ அல்லது  கோளின் (கிரஹம்) தாக்கமோ, எதுதான் என்னை என்ன செய்ய முடியும்' என்று கூறியதைப் போல சனி பகவானின் கிரக தோஷங்களும்...

கீழ்சூரியமூலை- சூர்யகோடீஸ்வரர்

படம்
-சாந்திப்பிரியா- கும்பகோணத்தின் அருகில் உள்ள கஞ்சனூருக்கு அருகில் உள்ளது கீழச்சூரியமூலை என்றொரு சிற்றூர். அங்குள்ள சூர்ய கோடீஸ்வரர் ஆலயம் சுமார் 2000 ஆண்டுக்கு முற்பட்ட காலத்தை சேர்ந்த ஆலயம் என்கிறார்கள். இந்த ஆலயத்தில் சூரிய பகவான் தினமும் காலை முதல் மாலைவரை சிவபெருமானை வணங்கித் துதிப்பதாக ஐதீகம் உள்ளது.  அப்படி துதிப்பதின் மூலமே சூரிய  ஒளிக்கதிர் சக்தி குறையாமல் கிடைப்பதாகவும் ஐதீகமுள்ளதாம். இந்த ஆலயத்தின் புராணக் கதை என்ன? உலகில் உள்ள அனைவரும் பிரதோஷ காலத்தில் சிவபெருமானை தரிசனம் செய்து பல பயன்களை அடைகிறார்களே, ஆனால் தன்னால் மட்டும் பிரதோஷ காலத்தில் சிவபெருமானை தரிசிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் சூரிய பகவானுக்கு ஏற்பட அவர் தன்னுடைய சீடரும் மாமுனிவருமான யாக்கியவல்லவரிடம் தனது மன வருத்தத்தையும் வேதனையையும் எடுத்துரைத்தார்.  அதைக் கேட்டு வேதனை அடைந்த அந்த மாமுனிவரும், அவருக்கு ஆறுதல் கூறி விட்டு, சூரிய பகவானுக்காக தானே சிவபெருமானை வழிபட்டு அதன் மூலம் சூரியனுக்கு   தன்னால் ஆன உதவியை செய்வதாக வாக்குறுதி கொடுத்தப் பின் தினமும் சிவபெருமானின் சன்...