Nallattoor Veera Anjaneyar Temple

திருத்தணியில் இருந்து திருப்பதிக்கு செல்லும் சாலையில் திருத்தணியை அடுத்த நல்லாட்டூர் கிராமத்தின் அருகில் உள்ள கொற்றலை ஆற்றின் கிளை நதிக்கரையில் அமைந்துள்ளது குசஸ்தலை ஸ்ரீ வீரமங்கள ஆஞ்சனேயர் ஆலயம். சென்னையில் இருந்து சென்றால் சுமார் இரண்டு மணி நேரத்தில் நல்லாட்டூரை அடையலாம். ஆந்திரவின் கிருஷ்ணாவரம் கிருஷ்ணா நீர்தேக்கத்தில் இருந்து வெளியேறும் தண்ணீர், பள்ளிப்பட்டு மற்றும் குமாரராஜபேட்டை எனும் கிராமத்தில் லவா மற்றும் குசா எனும் பெயர்களில் உள்ள ஆறுகளுடன் இணைந்து குசஸ்தலை எனும் சிறு ஆறாக மாறி இதன் வழியே ஓடுகிறது. சில இடங்களில் காணப்படும் கல்வெட்டு செய்திகளின்படி பதினைந்தாம் நூற்றாண்டுகளில் இந்தப் பகுதியும் கர்னாடகா மற்றும் ஆந்திராவை ஆண்டு வந்திருந்த ஸ்ரீ கிருஷ்ண தேவராயரின் ஆட்சியில் இருந்ததாகவும் அந்த காலத்தில் எழுப்பப்பட்டு இருந்த வழிபாட்டுத் தலமாக இருந்திருக்க வேண்டும் என்கிறார்கள். கிருஷ்ண தேவராயரின் ஆட்சிக் காலத்தில் அவருடைய ராஜகுருவாக இருந்தவரும் 1460 முதல் 1539 ஆம் ஆண்டு காலத்தில் வாழ்ந்திருந்தவருமான வியாசராயர் எனும் ராஜகுருவினால் பல இடங்களிலும் ஆஞ்சநேயர் ஆலயங்கள...