இடுகைகள்

மார்ச், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Nallattoor Veera Anjaneyar Temple

படம்
திருத்தணியில் இருந்து திருப்பதிக்கு செல்லும் சாலையில் திருத்தணியை அடுத்த நல்லாட்டூர் கிராமத்தின் அருகில் உள்ள கொற்றலை ஆற்றின் கிளை நதிக்கரையில் அமைந்துள்ளது குசஸ்தலை ஸ்ரீ வீரமங்கள ஆஞ்சனேயர் ஆலயம். சென்னையில் இருந்து சென்றால் சுமார் இரண்டு மணி நேரத்தில் நல்லாட்டூரை அடையலாம். ஆந்திரவின் கிருஷ்ணாவரம் கிருஷ்ணா நீர்தேக்கத்தில் இருந்து வெளியேறும் தண்ணீர், பள்ளிப்பட்டு மற்றும் குமாரராஜபேட்டை எனும் கிராமத்தில் லவா மற்றும் குசா எனும் பெயர்களில் உள்ள ஆறுகளுடன் இணைந்து குசஸ்தலை எனும் சிறு ஆறாக மாறி இதன் வழியே ஓடுகிறது. சில இடங்களில் காணப்படும் கல்வெட்டு செய்திகளின்படி பதினைந்தாம் நூற்றாண்டுகளில் இந்தப் பகுதியும் கர்னாடகா மற்றும் ஆந்திராவை ஆண்டு வந்திருந்த ஸ்ரீ கிருஷ்ண தேவராயரின் ஆட்சியில் இருந்ததாகவும் அந்த காலத்தில் எழுப்பப்பட்டு இருந்த வழிபாட்டுத் தலமாக இருந்திருக்க வேண்டும் என்கிறார்கள். கிருஷ்ண தேவராயரின் ஆட்சிக் காலத்தில் அவருடைய ராஜகுருவாக இருந்தவரும் 1460 முதல் 1539 ஆம் ஆண்டு காலத்தில் வாழ்ந்திருந்தவருமான வியாசராயர் எனும் ராஜகுருவினால் பல இடங்களிலும் ஆஞ்சநேயர் ஆலயங்கள...

Shri Maha Shethra Bala Bairavar Temple - 4

படம்
- 4 -   ஸ்ரீ பைரவ சித்தாந்த ஸ்வாமிகள்  மற்ற எந்த ஆலயத்திலும் காணப்படாத ஒரு வழிபாட்டு முறை இந்த ஆலயத்தில் காணப்படுகிறது. அதுவே இந்த ஆலயத்தின் அதிசயம் ஆகும். இந்த ஆலயத்துக்கு செல்பவர்கள் தமது வீட்டில் எத்தனை நபர்கள் உள்ளனரோ அவர்கள் கையினால் வீட்டில் சமைக்க வைத்துள்ள அரிசி பாத்திரத்தில் இருந்து ஒவ்வொரு பிடி அரிசியை வாங்கி ஒரு பாத்திரத்திலோ அல்லது மூட்டையாக  கட்டியோ கொண்டு வர வேண்டும். அதைக் கையில் வைத்துக் கொண்டு காலபைரவர் முன் நமக்கு தேவையான வேண்டுதலை வைத்து அவரை வணங்கிய பின் அதை அந்த அரிசியை கொடுக்க வேண்டிய அறைக்கு எடுத்துச் சென்று அங்கு அதை சமர்பிக்க வேண்டும். அதை அங்குள்ள ஒரு பீப்பாயில் கொட்ட வேண்டும். அதைக் கொண்டு அவர்கள் உணவு தயாரித்து அன்னதானம் செய்கிறார்கள். இந்த அரிசியைதான் வாய்க்கரிசி என்கிறார்கள். அதன் தாத்பர்யம் பாகம் -1 ல் தரப்பட்டு உள்ளது. இதில் உள்ள முக்கியமான விதியே வீட்டில் வைத்து உள்ள அரிசியைத்தான் கொண்டு வர வேண்டும். வீட்டில் அரிசி இல்லை என்றால் கடையில் இருந்து அரிசியை வாங்கிச் சென்று வீட்டில் வைத்து அதில் இருந்து ஒரு கவ...

Shri Maha Shethra Bala Bairavar Temple - 3

படம்
- 3 - அவர் மேலும் தொடர்ந்து கூறிய பிற விவரங்கள் :- ''கால பைரவரின் பிரதான எட்டு பைரவர்களையும், அவர்களை வணங்கித் துதித்த ரிஷி முனிவர்களையும் ஸ்ரீ மஹா ஷேத்திர ருத்ர பால பைரவர் மூல சன்னதியின் கீழ் சன்னதியில் வைத்து உள்ளார்கள். இந்த ஆலயத்தில் அவர்களையும் பிரதர்ஷணமாக வலம் வந்து வணங்க வேண்டும். அது போலவே தேவிக்கு யுத்த கன்னிகைகளாக இருந்த அஷ்ட  கன்னிகைகளும் அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளார்கள். அது மட்டும் அல்ல இந்த ஆலயத்தின் சன்னதி சிவபெருமானின் ஹிமயமலையின் சூழ்நிலையை பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காக வாயிலில் மலையின் மீது ஓடும் நதியுடன் கூடிய சிலைகளையும் மந்திரங்களை ஓதி பிரதிஷ்டை செய்து உள்ளார்கள். மண்டபத்தின் உட்புற மேல் கூறையில்  மின் மினுக்கும் நட்ஷத்திரங்களை காட்டும் வகையில் அமைப்பு உள்ளது.  இந்த அமைப்புக்கள் அனைத்துமே  பைரவ சித்தாந்த ஸ்வாமிக்கு  ஸ்ரீ மஹா ஷேத்திர பால பைரவரே நேரில் கூறியவை ஆகும். ஆகவேதான் இந்த ஆலயத்தை கட்டிடக் கலைஞர்களின்  மாதிரிப் படங்களை கொண்டு வடிவமைக்காமல் நேரடியாக ஷேத்திர பால பைரவரே குறிப்பிட்டதைப் போல நிர்மாணித்து உள்...

Shri Maha Shethra Bala Bairavar Temple - 2

படம்
- 2 - நாங்கள் அங்கு சென்று இருந்தபோது இந்த ஆலயத்தை நிர்மாணித்தவர்களில் ஒருவர் எங்களுக்கு இந்த ஆலயத்தின் விவரத்தைக் கூறினார். அவர் பெயரைக் கேட்க மறந்து விட்டேன், ஆனால் அவருடைய புகைப்படத்தைக் கீழே காணலாம்.  ஆலயம் எப்படி கட்டப்பட்டது என்கின்ற விவரம் குறித்து அவர் கூறிய வியப்பான விவரங்களை கீழே தந்துள்ளேன்: ''அவர்கள் அனைவருமே தென் நாட்டின் கன்யாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள், பைரவரின் பக்தர்கள். அவர்கள் பைரவ சித்தாந்த ஸ்வாமிகளுடன் உடன் இருந்தவர்கள். பைரவரின் முழு அருளாசி பெற்ற அந்த பைரவ சித்தாந்த ஸ்வாமிகள் இவர்களை வழி நடத்தி வந்தவர். அவரை இவர்கள் அனைவருமே பைரவ சித்தாந்த ஸ்வாமிகள் என்றே அழைப்பார்களாம் ( பைரவ சுவாமிகளின் இயற்கைப் பெயர் சுப்பிரமணியப் பிள்ளை என்பதாக அறிந்தேன் ). பைரவ சித்தாந்த ஸ்வாமிகள் தம்மை அவர்கள் அனைவரும் ஸ்வாமிகள் என அழைப்பதை விரும்பவில்லை. தாம் பைரவரின் தூதுவர் என்றே அவர் தம்மைக் குறித்துக் கூறி வந்தாலும் அதை அவர்கள் ஏற்கவில்லை. அவர்கள் அவரை பைரவரின் அம்சமாகவே கருதினார்கள். அவர்கள் அனைவருக்குமே ஒரு ஏக்கம் இருந்தது. பைரவரின் பக்தர்கள் ...

Shri Maha shethra Bala Bairavar Rudra Temple

படம்
-1- தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் திருக்கழுக்குன்றத்தை அடுத்த ஈச்சங்கரணை எனும் சிறிய கிராமத்தில் திருவடிசூலம் எனும் மலையின் அடிவாரத்தில், சுற்றிலும் இயற்கை எழில் மிகுந்த பகுதியில், அமைதியான சூழ்நிலையில் அமைக்கப்பட்டு உள்ளது அதிசயமான ஸ்ரீ மஹா ஷேத்திர ருத்ர பால பைரவர் ஆலயம். சுற்றிலும் காணப்படுவது மலை முகட்டும், மரங்களுமே. ஈச்சங்கரணை கிராமம் சென்னையில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பைரவருக்கு எனத் தனி ஆலயத்தைக் காண்பது அரிதானது. எனக்குத் தெரிந்தவரை காசியில் உள்ள கால பைரவர் ஆலயத்தை தவிர மாயவரத்தின் அருகில் ஷேத்ரபாலா எனும் இடத்தில் மட்டுமே கால பைரவருக்கு எனத் தனியான ஆலயம் உள்ளது. அதற்கு அடுத்து ஈச்சங்கரணையில்தான் பைரவருக்கு என்றே தனியான அமைக்கப்பட்டு உள்ள ஆலயத்தைக் காண நேரிட்டது. பல ஆலயங்களிலும் பைரவர் சன்னதி இருக்கும். ஆனால் பைரவருக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து அவரையே பிரதான தெய்வமாக வைத்து பூஜிக்கப்படும் ஆலயம் இவை இரண்டு மட்டுமே என்றே நினைக்கிறேன்.   ஆலயத்தை சுற்றி  உள்ள இடம்  மற்றும்  ஆலயம்  செ...

Thenkasi Viswanathar

படம்
சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னால் மதுரையை ஆண்டு வந்தவர் பராக்கிரம பாண்டியன் என்பவர். அவர் சிவபக்தர். அவர் தினமும் மதுரையில் இருந்த சொக்கநாதர் ஆலயத்துக்கு சென்றுவிட்டு வருவதுண்டு. ஒருமுறை அவர் காசிக்குச் சென்று காசி விஸ்வனாதரை தரிசித்து விட்டு வந்தார். அங்கிருந்த போது அவர் தினமும் காசி விஸ்வனாதரை தரிசனம் செய்த பின்னரே உணவு அருந்துவார். சில காலம் காசியில் தங்கி விட்டு வந்தவர் நாடு திரும்பினார். திரும்பி வந்த சில நாட்களிலேயே அவருக்கு மீண்டும் காசிக்கு செல்ல வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. ஆனால் போக முடியாத சூழ்நிலையில் இருந்தார்.   மனம் வருந்தி சொக்கநாதர் ஆலயத்துக்கு சென்றுவிட்டு வந்தவர் கனவில் அன்று இரவு சொக்கநாதர் தோன்றிக் கூறினார் ' மன்னனே, நீ ஏன் காசிக்கு செல்ல முடியவில்லை என்று வருத்தப்படுகிறாய்? கவலைப்படாதே. நாளைக் காலை உன் அரண்மனை வாயிலில் எறும்புக் கூட்டத்தை காண்பாய். அவை வரிசையாக செல்லும். அவற்றைக் கொல்லாமல் அவற்றை தொடர்ந்து சென்றால் அவை எங்கு சென்று நிற்குமோ அங்கு நான் காசி விஸ்வனாதராக காட்சி தருவேன். நீ அங்கு ஒரு ஆலயம் எழுப்பி என்னை வழிபடு. காசிக்கு செல்ல முடி...

Kaleeswarar Temple, Sivagangai

படம்
காளையார் கோவில் என்பது காளீஸ்வரர் கோவில் என்ற பெயரிலிருந்து மருவி வந்ததாகும். சிவகங்கை மாவட்டத் தலைநகரிலிருந்து 18 கி.மீ. தொலைவில், மற்றும் மதுரையில் இருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள கானப்பேரூர்  என்று அழைக்கப்பட்ட இடத்தில்  காளையார் கோவில் அமைந்துள்ளது. சிவகங்கையின் புகழ் பெற்ற கோயிலாக காளையார் கோயில் விளங்குகிறது. முன் ஒரு காலத்தில், ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்டு வந்திருந்தபோது காளையார் கோவில் பெரிய வனப்பகுதியாகவே இருந்துள்ளது. அங்கிருந்த பகுதிகள் பாளயக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்துள்ளன.   இந்த ஊருக்கு காளையர் கோவில் என்ற பெயர் வந்ததின் காரணமும் உண்டு. ஒருமுறை சுந்தரமூர்த்தி நாயனார் விருதுநகர் அருகில் உள்ள திருச்சுழி எனும் ஊரில் ஆலய தரிசனம் செய்தப் பின் காளையார் கோயிலுக்கு சென்றார். அப்போது அதன் பெயர் காளையார் கோவில் என்பதாக இல்லை. அந்த ஊருடைய எல்லைக்கு வந்தவுடன் வழி எங்கும் சிவலிங்கமே நிறைந்துள்ளதைக் கண்டவர் சிவலிங்கத்தின் மீது நடந்தா ஊருக்குள் இறைவனைக் காணச் செல்ல வேண்டும் என மனம் வருந்தி திரும்பிச் செல்ல முயன்றபோது எதிர்புறத்தில் இருந்து...

Curse for Moon

படம்
ஒருமுறை கைலாயத்திலே சுக்ல சதுர்தியில் சிவபெருமானை துதி பாடிக் கொண்டிருந்த பெரிய விழா நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அனைத்து தேவர்களும் முனிவர்களும் கூடி இருந்தார்கள். சிவபெருமான் என்றால் சிவபெருமானும் முருகனும் இல்லாமலா விழா நடக்கும். ஒவ்வொருவரும் தமக்கே தெரிந்தவகையில் ஆடிப்பாடி சிவபெருமானை மகிழ்வித்த வண்ணம் இருக்க வினாயகருக்கும் தானும் நடனமாட வேண்டும் என்ற ஆசை எழுந்தது. ஆகவே அவரும் எழுந்து சபை நடுவே சென்று நடனம் ஆடத் துவங்கினார். என்ன இருந்தாலும் வினாயகர் குட்டையானவர், தொப்பை உள்ளவர், சிறிய கால்களும், சிறிய கைகளையும் கொண்டவர் என்பதினால் அவர் ஆடிய ஆட்டம் விநோதமாக இருந்தது. ஆகவே அவர் தொந்தியும் தொப்பையுமாக குலுங்கிக் குலுங்கி ஆடத் துவங்கியதும் அனைவருக்கும் சிரிப்பு வந்தது. அனைவரும் சிரிப்பை அடக்கிக் கொண்டார்கள் என்றாலும் சந்திரபகவானால் சிரிப்பை அடக்கிக் கொள்ள முடியவில்லை, சிரித்து விட்டார்.  மற்றவர்களும் அதை கண்டு சிரித்தார்கள். அதைக் கண்ட வினாயகர் அவமானம் அடைந்து நாட்டியத்தை நிறுத்திக் கொண்டாலும் வினாயகருக்கு கோபம் வந்துவிட அவர் சந்திரனை சபித்தார். சந்திரன் சிரி...