Grama Devatha

பெங்களூர் மத்திய பகுதியில் காவல் தெய்வங்கள் மற்றும் கிராம தேவதை ஆலயங்கள் சாந்திப்பிரியா தெற்கு பெங்களூரில் உள்ள சில முக்கியமான பகுதிகளே பிலகஹல்லி, ஹுலிமாவு, அரிக்கரே, பொம்மனஹல்லி மற்றும் பேகூர் போன்ற பகுதிகள் ஆகும். இவை அனைத்துமே சுமார் ஐந்து கிலோ மீட்டர் பரப்பளவில் ஒன்றுடன் ஒன்று இணைந்து உள்ளன. முன் ஒரு காலத்தில் இவை அனைத்துமே கிராமமாக இருந்துள்ளன. அதற்கு பல காலத்துக்கும் முன்னால் இவை அனைத்துமே பெரிய வனப் பிரதேசமாகவே இருந்துள்ளது என்கிறார்கள். பின்னர் காடுகள் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு கிராமங்கள் ஆயின. தற்போது கடந்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்குள் இந்தப் கிராமப் பகுதிகள் பிரபலமாகி நகரத்துடன் இணைந்துள்ளன. இந்தப் பகுதிகள் கிராமமாக இருந்தபோது அந்த கிராமத்து மக்கள் குடும்பம் குடும்பங்களாக வழிபட்டு வந்துள்ள பல கிராம தேவதை மற்றும் காவல் தெய்வங்களின் வழிபாட்டுத் தலங்கள் அங்குமிங்குமாக இருந்துள்ளன. இப்படியாக சுமார் இருபது முதல் முப்பதுக்கும் மேற்பட்ட கிராம தேவதை மற்றும் காவல் தெய்வங்களின் வழிபாட்டுத் தலங்கள் இன்றும் அழியாமல் காப்பாற்றப்பட்டு வந்துள்ளது மட்...