மரணம் - ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் - 13

--சாந்திப்பிரியா -- 13 (-37) ஒருவருடைய தந்தை மரணம் அடைந்து விட்டார். அதனால் அவரது மகன்களுக்கும் மகளுக்கும் பத்து நாள் தீட்டு வந்துள்ளது. அப்போது பத்து நாட்களுக்குள் அவர்களது தாயாரும் மரணம் அடைந்து விட்டால் அவர்களுக்கு மொத்தம் எத்தனை நாள் தீட்டு உண்டு? சாதாரணமாக தந்தை இறந்து பத்து நாட்களுக்குள் தாயார் இறந்து விட்டால் தந்தைக்காக அனுஷ்டிக்கும் தீட்டுக் காலமான பத்து நாட்களுக்கு மேல் தாயார் மரணத்துக்காக ஒன்றரை நாள் தீட்டு உண்டு. அதாவது தாயார் இரவில் இறந்து விட்டால் பத்து நாட்களுக்கு மேல் இரண்டு இரவு மற்றும் ஒரு பகல் அல்லது தாயார் பகலில் இறந்து விட்டால் இரண்டு பகல் மற்றும் ஒரு இரவு தீட்டு உண்டு. அதாவது 13 ஆம் நாள் சுபஸ்வீகாரத்தோடு இரண்டு தீட்டும் போய் விடும். இது பொது முறை என்றாலும் இது குறித்து வீட்டில் சடங்கு செய்யும் சாஸ்திரிகளிடம் கேட்டு அவர் கூறுவது போல செய்ய வேண்டும். ஆனால் தாயார் இறந்து பத்து நாட்களுக்குள் தந்தை இறந்து விட்டால் சாதாரணமாக தாயாருக்காக அனுஷ்டிக்கும் தீட்டுக...