இடுகைகள்

ஜனவரி, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மரணம் - ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் - 13

படம்
  --சாந்திப்பிரியா -- 13 (-37)   ஒருவருடைய தந்தை மரணம் அடைந்து விட்டார். அதனால் அவரது மகன்களுக்கும் மகளுக்கும்  பத்து நாள் தீட்டு வந்துள்ளது. அப்போது பத்து நாட்களுக்குள் அவர்களது தாயாரும் மரணம் அடைந்து விட்டால்  அவர்களுக்கு மொத்தம் எத்தனை நாள் தீட்டு உண்டு? சாதாரணமாக தந்தை இறந்து பத்து நாட்களுக்குள் தாயார் இறந்து விட்டால் தந்தைக்காக அனுஷ்டிக்கும் தீட்டுக் காலமான பத்து நாட்களுக்கு மேல் தாயார் மரணத்துக்காக ஒன்றரை நாள் தீட்டு உண்டு. அதாவது தாயார் இரவில் இறந்து விட்டால் பத்து நாட்களுக்கு மேல் இரண்டு இரவு மற்றும் ஒரு பகல் அல்லது  தாயார் பகலில் இறந்து விட்டால்  இரண்டு பகல் மற்றும் ஒரு இரவு தீட்டு உண்டு. அதாவது 13 ஆம் நாள் சுபஸ்வீகாரத்தோடு இரண்டு தீட்டும் போய் விடும். இது பொது முறை என்றாலும் இது குறித்து  வீட்டில்  சடங்கு செய்யும் சாஸ்திரிகளிடம் கேட்டு அவர் கூறுவது போல செய்ய வேண்டும். ஆனால் தாயார்  இறந்து பத்து நாட்களுக்குள் தந்தை  இறந்து விட்டால் சாதாரணமாக தாயாருக்காக  அனுஷ்டிக்கும் தீட்டுக...

மரணம் - ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் - 12

படம்
  --சாந்திப்பிரியா -- 12 (-23) அடுத்த கேள்வி, இரவு நேரத்தில் ஒருவர் இறந்து விட்டால் அந்த குடும்பத்தினருக்கு தீட்டுக் காலம் எப்போது துவங்கும் என்பதாகும்? சாஸ்திரங்களின்படி சூரியோதாயத்துக்கு பதினொன்றே கால் நாழிகைகளுக்கு முன்னர் ஒருவர் இறந்து விட்டால் அவர் இறந்தது முதல் நாள் கணக்கில் அடங்கும். சூரியோதாயத்துக்கு பதினொன்றே கால் நாழிகை என்பது பூமியில்  இரவு 1 மணி 30 நிமிடத்தைக் குறிக்குமாம். ஆகவே ஒரு குடும்பத்தில் இரவு 1.30 மணி வரை நேரத்தில் யாராவது இறந்து விட்டால் அவரது மரணம் முதல் நாளைய கணக்கில் சேரும். 1.30 மணிக்கு மேல் இறந்தால் மறுநாள் கணக்கில் சேருமாம். பூமியில் மறுநாள் விடியற்காலை என்பது இரவு 12 மணிக்கு  பிறப்பதாக நாம் கணக்கிடுகிறோம் என்றாலும், சாஸ்திரங்களின்படி பூமியில் இரவு 12 மணி ஆகும்போது தேவலோகத்தில் அப்போதைய நேரம் இரவு 11.50 ஆக இருக்குமாம். ஆகவே தேவலோகத்தில் இரவு 12 மணியாக இருக்கும்போது பூமியில் அப்பொழுதைய நேரம் 1.30 மணியாகும். தேவலோகக் கணக்கின்படி காலை ஆறு மணி என்பது தேவலோகத்தில் விடியற்காலை 4 மணி 30 நிமிடமாகுமாம். அப்போது அங...

மரணம் - ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் - 11

படம்
  --சாந்திப்பிரியா -- 11   (-19) எந்த ஒரு தீட்டுக் காலமும் காலை 8 மணி 24 நிமிடங்களில் இருந்துதான் விலகும் என்கிறது சாஸ்திரம். அதற்கு மேல்தான் தீட்டு விலகும் என்பதினால் தீட்டை விலக்கிக் கொள்ள காலையில் 8 மணி 24 நிமிடங்களுக்குப் பிறகுதான் குளிக்க வேண்டும், அதற்கு முன்னால் குளித்தால் தீட்டு விலகியதாக எடுத்துக் கொள்ள முடியாது, அது தொடரும் என்கிறார்கள். ஆனால் தற்காலத்தில் இதை நடைமுறையில் வைத்திருக்க முடியவில்லை என்பதினால் விடியற்காலை ஐந்து மணிக்கு மேல் குளிப்பதில் தோஷம் இல்லை என்பதாக பண்டிதர்கள் கூறுவார்கள். ஆகவே இது விஞ்ஞான அடிப்படையில் எழுந்துள்ள நியதி அல்ல, ஓரளவிற்கு ஆன்மிகம் மற்றும் தர்ம நெறி முறைகளின் அடிப்படையில் அமைந்ததே என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். (-20)  அது சரி, 8 மணி 24 நிமிடங்கள் என்பது என்ன கணக்கு என்ற கேள்வி எழலாம்?  இந்த நேரம் மிக முக்கியமானது. அதை புரிந்து  கொள்ள முதலில் இவற்றை படியுங்கள்.  சாஸ்திரங்களின்படி ஒரு நாள் என்பது அறுபது நாழிகை ஆகும். அதில் பகல் நேரம் 30 நாழிகை கொண்டதாகவும், இரவு நேரம் 30 நாழிகையையும் கொண்டதா...

மரணம் - ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் - 10

படம்
  --சாந்திப்பிரியா -- 10   139) தீட்டு என்பது என்ன என்பதை ஏற்கனவே முந்தைய பாகங்களில் விளக்கி உள்ளேன். ஆகவே தீட்டு என்பதை விஞ்ஞான ரீதியிலும் சரி, ஆன்மீக ரீதியிலும் சரி, விலக்கி வைத்துக் கொள்ள வேண்டிய காலம் என்பதாக வைத்துக் கொள்ளலாம். காலம் காலமாக தொடரப்பட்டு வரும் நம்பிக்கையின் அடிப்படையில் யாருக்கு விருப்பமோ அவர்கள் அவற்றைக் கடைபிடிக்கலாம். ஏன் எனில் இவை எதற்காக ஏற்படுத்தப்பட்டவை என்பதற்கு சாஸ்திர ரீதியிலான விளக்கம் கிடையாது. பெரும்பாலும் கருட புராணமே இந்த நியதிகளுக்கு ஆதாரமாக காட்டப்படுகிறது. ஆகவே இவற்றைக் கடை பிடிப்பது  அவரவர் விருப்பம் ஆகும். யாருக்கெல்லாம் தீட்டு உண்டு?  தீட்டுக் காலம் என்பவை எத்தனை? தீட்டுக் காலத்தை ஸ்நானத் தீட்டு, பக்ஷிணீ   தீட்டு,   ஒரு நாள் தீட்டு, 1 1/2 நாள் தீட்டு, மூன்று நாட்கள் தீட்டு மற்றும் பத்து நாட்கள் தீட்டு எனப் பிரித்து உள்ளார்கள்.  தீட்டிலும் பிரசவ தீட்டு மற்றும்  மரணத் தீட்டு என இரு வகை உண்டு.  இங்கு நாம் மரண தீட்டை மட்டும் பார்க்கலாம். மரண தீட்டைப் பற்றிய பொது விதிமுறைகள...

மரணம் - ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் - 9

படம்
  --சாந்திப்பிரியா -- 9 கருட  புராணக்  கதை  தொடர்கிறது  124) அப்போது யமதூதர்கள் அவன் கன்னத்தில் அறைந்து 'மனைவி மக்களே அழிவற்றவர்கள்  என்று  நீ  நடத்திய அதர்ம வாழ்க்கை என்ன ஆயிற்று? நீ செய்த புண்ணிய பாவமே உனக்கு இவ்வுலகில் இன்பம் அல்லது துன்பத்தைத் தரவல்லது. பிறர் பொருளை அபகரித்தல் போன்ற அதர்மங்களை செய்யாமல் தர்மம் செய்து வாழ்ந்திருந்தால் இப்போது இக்கேடு வராதல்லவா?'  என்று பலவாறு இடித்துக் கூறி, அந்த ஜீவனை வழி நெடுக நையப் புடைத்துக் கொண்டே செல்வார்கள். சூறாவளி வீசும் காற்று நிறைந்த வழியில், அடர்ந்த காட்டின் நடுவே கடும் புலிகள் நிறைந்த பாதையில் யமகிங்கரர்களுடன் சென்று ஓரிடத்தில் தங்கி, இறந்தவரின் கர்த்தாவால் இருபத்தெட்டாம் நாளில் செய்யப்படும் ஊனமாச சிரார்த்த பிண்டத்தை உண்டு முப்பதாம் நாளன்று யாமியம் என்ற நகரத்தை அடைவார்கள். 125) அங்கு இன்னும் அதிகமாக பிரேதக் கூட்டங்கள் இருக்கும். வழியில்  பத்திரை என்ற நதியும், வட விருக்ஷமும் உள்ளன. சிறிது நேரச் சிரம பரிகாரத்துக்காக யமகிங்கரர்களுக்கு அஞ்சி அவ்யாமியம் என்ற நக...

மரணம் - ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் - 8

படம்
  --சாந்திப்பிரியா -- 8 108) கிரேக்கியத்தின் அன்று பண்டிதர்களினால் கூறப்படும்  பொதுவான கதை கருடபுராணத்தில் கருடாழ்வாருக்கு திருமால் கூறியதான கதையின் அடிப்படையில் அமைந்து  உள்ளது.  அந்தக் கதை இது : - 109) பிரபஞ்சம் படைக்கப்பட்டபோது பல ஜீவன்கள் படைக்கப்பட்டது. அதில் ஒன்றாக மானிட பிறவியும் படைக்கப்பட்டது. பல்வேறு பிறவிகள் பூச்சி, புழு, மரம், செடி, கொடி, மிருகங்கள் என படைக்கப்பட்ட அனைத்திலும் சிறந்தது மானிடப் பிறவியே ஆகும். எல்லா உயிரினங்களுக்கும் உணவு, உறக்கம், அச்சம், புணர்ச்சி என்ற அனைத்து இயக்கமும் இருந்தது. ஆனால் மானிடர்களுக்கு மட்டுமே ஞானம் என்கின்ற இன்னொரு இயக்கமும் தரப்பட்டது. இந்த பூமியிலே மானிடப் பிறவி எடுத்தவர்கள் மட்டுமே  சொர்கத்தையும் மோட்ஷத்தையும் அடைய இயலும். மற்ற பிறவிகள் அனைத்துமே முன் பிறவிகளில் அவரவர்கள் செய்திருந்த  பாவங்களினால் அந்த பிறவி  எடுத்திருந்தவர்கள் ஆவர்.  பூச்சி, புழு, மரம், செடி, கொடிகள், மிருகங்கள் என்ற அந்த பிறவிகளுக்கு சொர்க்கம் மோட்ஷம் என்பதெல்லாம் கிடையாது.  அந்தப் பிறவிகள் எடுத்திருந்த அவ...