இடுகைகள்

நவம்பர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ரத்னகிரீஸ்வரர் ஆலயம் - 4

படம்
-4- பன்னிரண்டாம் செட்டியார் கதை என்ன?  இதுவும் செவி வழிக் கதைதான். காவிரி பூம்பட்டினத்தை ஆண்ட சோழ மன்னன் ஒருவன் செட்டியார் சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்ணை மணக்க விரும்பினான். ஆனால்  காவிரி பூம்பட்டினத்து வணிகர்கள் தம்முடைய பெண்ணை வேறு இனத்தவருக்கு மணமுடித்துக் கொடுக்க உடன்படவில்லை.  மன்னன் எத்தனையோ முறைக் கேட்டும் அவர்கள் அதற்க்கு உடன்படவில்லை என்பதினால் கோபம் கொண்ட மன்னன் அவர்கள் வசித்த நகருக்குத் தீயிட்டான். அங்கிருந்த பலரும் தீயினால் மரணம் அடைய,  அவர்களில் வணிகர் குலத்தைச் சேர்ந்த பதினோரு பேர் தீயிலிருந்து தப்பி பல பொருட்களையும் எடுத்துக் கொண்டு அந்த நகரை விட்டு வெளியேறி தாம் தங்கி இருக்க நாட்டின் பல இடங்களுக்குச் சென்றனர். ஆனால் எந்த இடமும் சரிவர அமையவில்லை என்பதினால் அந்த பதினோரு வணிகர்களும் தங்கள் பொருட்களுடன் ஐயர் மலைக்கு வந்து சேர்ந்தார்கள். வந்தவர்கள்  தாம் கொண்டு வந்திருந்த பொருட்களை பாகம் பிரித்துக் கொண்டார்கள். எப்படி பாகம் பிரித்தாளும் அதை மீண்டும் எண்ணும்போது அது பன்னிரண்டு பாகங்களாக இருந்ததைக் கண்டார்கள். ஆகவே சலித்துப் போனவர்கள் சரி நம...

ரத்னகிரீஸ்வரர் ஆலயம் - 3

படம்
-3- இந்த மலைக்கு வந்து வாயுபகவான் சாபவிமோசனம் பெற்றதை அறிந்திட்ட ஆதிசேஷனும் மகாவிஷ்ணுவிடம் சென்று தனக்கு  முன்னொரு ஜென்மத்தில் சகோதரர்களைக் கொன்றதினால் ஏற்பட்ட தோஷத்தையும், மேரு மலையை உடைத்ததற்கு காரணமாக தானும் இருந்ததினால் அதனால் பெற்ற சாபத்துக்கும்  விமோசனம் பெற என்ன செய்ய வேண்டும் எனக் கேட்க அவரும் அதே மலைக்குச் சென்று சிவபெருமானை வேண்டித் தவம் இருக்குமாறும் அப்படி செய்து சிவபெருமானின் அருளைப் பெற்றால் மட்டுமே சாபவிமோசனம் பெற முடியும் என்றதும், ஆதிசேஷனும் அங்கு சென்று ஒரு தீர்த்தம் அமைத்து,  அதில் தினமும் நீராடி சிவபெருமானை துதித்து பல காலம் தவமிருந்து சாப விமோசனம் அடைந்தார். ஆதிசேஷனின் இந்த நிலைக்குக் ஒரு பின்னணிக் காரணம் உண்டு. கிருஷ்ண பகவானின் முடிவு காலம் நெருங்கியபோது யாதவர்கள் தமக்குள்  தாமே சண்டை இட்டுக் கொண்டு யாதவ வம்சத்தை அழித்துக் கொண்டபோது அதில்  கிருஷ்ணருடைய சகோதரரான பலராமர்  பங்கேற்று பல யாதவர்களை  கொல்ல நேரிட்டது.  ஆகவே சகோதரர்களைக் கொன்ற தோஷம் ஏற்பட்டு இருந்தது.  ஆகவே அவர் வாழ்க்கையில் வெறுப்புற்று...

ரத்னகிரீஸ்வரர் ஆலயம் - 2

படம்
-2- ஆரிய   நாட்டு  மன்னர்கள்  மனு வழி மன்னனைப் போலவே ஆரிய வம்சத்தை சேர்ந்த இன்னொரு மன்னன் ஆரிய நாட்டில் ** இன்னொரு காலத்தில் வாழ்ந்திருந்தான். அவன் பெயர் ஆர்யராஜா என்பதாகும்.  அவன் நாடும் ரத்னகிரீஸ்வரர் மலையின் அருகில்தான் இருந்தது.  அவனும்  சிவபக்தி நிறைந்தவனே. அந்த மன்னனிடம் அபூர்வமான நவரத்தினக்கல் பதித்த மணிமுடி இருந்தது.  அந்த மணிமுடி அந்த மன்னனுக்கு  மிக முக்கியமானது.  வாழ்க்கையில் பல நன்மைகளை பெற வேண்டும், தான் பலமிக்க அரசனாக இருக்க வேண்டும் என்பதற்காக ராஜகுருக்களின் ஆலோசனைப்படி விசேஷ பூஜைகளை செய்து அதை செய்திருந்தான். தினமும்   அந்த மணிமுடியை அணிந்து கொண்டுதான் அரச சபைக்கும்  செல்வான். ஒருமுறை அவனது பக்தியை சோதிக்க எண்ணிய சிவபெருமான் அவனுடைய நவரத்தினம் பதித்த மணி முடியை காணாமல் போகச் செய்தார். காலை எழுந்து குளித்தப் பின் மன்னன்   அரச சபைக்கு கிளம்பினான். மணிமுடியை தேடினான். அதைக் காணாமல் திகைத்து நின்றான். மணிமுடி எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அரண்மனையில்  யார் வந்து அதை திருடிச் ச...

ரத்னகிரீஸ்வரர் ஆலயம் - 1

படம்
-1- தமிழ்நாட்டின் கரூர் மற்றும்  திருச்சி மாவட்டத்தில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குளித்தலை எனும் சிற்றூருக்கு அருகில் உள்ள ஐயர் மலை எனும் இடத்துக்கு சென்றால் காவேரி கரைப் பகுதியில் உள்ள மலை மீது உள்ள ரத்னகிரீஸ்வறரை தரிசிக்கலாம். இந்த ஆலயம்  இரண்டாம் குலோதுங்க சோழனால் கட்டப்பட்டுள்ளது.  இந்த ஆலயத்துக்கு  இரதினகிரி என்ற பெயரைத் தவிர மாணிக்க மலை, சிவாய மலை, ஐயர்மலை என்று வேறு பெயர்களும் உண்டு.  தற்போது மக்கள் வழக்கில் இந்த மலைப் பகுதி ஐயர்மலை என்று வழங்கப்படுகிறது.  பாண்டவ சகோதரர்கள்  ஐந்துபேரும் தமது வனவாசத்தின்போது இந்த மலையில் வந்து தங்கியதினால்  இந்த மலைக்கு ஐவர் மலை அதாவது  ஐந்து சகோதரர்கள் என்ற பெயர் வந்ததாம்.  அதுவே காலப்போக்கில் ஐயர் மலை என்றாயிற்று. மலை உச்சியில் அமைந்துள்ள ரத்னகிரீஸ்வரர் ஆலயத்துக்கு செல்ல வேண்டும் எனில் சுமார் 1017 படிகளில் ஏறிச் செல்ல வேண்டும். ரத்னகிரீஸ்வரர் ஆலயம் பல கதைகளை உள்ளடக்கிக் கொண்டது.  புராணப் பெருமை பெற்றுள்ள ஸ்தலமாகும். 'காலைக் கடம்பர், ம...

தோஷங்களை அழிக்கும் பூஷணிக்காய்

படம்
இந்த ஓவியத்தை கட்டுரைக்காக தந்து உதவியவர்  Ranjani Ramesh   தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்தைக் கடைந்தெடுத்தப் பின் அசுரர்கள் ஏமாற்றப்பட்டு அமிர்தம் அவர்களுக்குக் கிடைக்காமல் போயிற்று. ஆகவே அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் பகை தொடர்ந்து கொண்டே இருந்தது. அவ்வப்போது சிவபெருமான் மற்றும் விஷ்ணு போன்ற கடவுட்களிடம் இருந்து பல அறிய வரங்களைப் பெற்றுக் கொண்டிருந்த சில அசுரர்கள் தமது பகை உணர்வைக் காட்ட அவ்வப்போது தேவர்களுக்கு தொல்லைத் தந்தவண்ணம் இருந்தார்கள். ஆனால் அவர்கள் பெற்றிருந்த வரங்களின் காரணமாக அவர்களை தேவர்களால் வெற்றிக் கொள்ள முடியாமல் போனதினால் அந்த வரம் பெற்றிருந்த அசுரர்கள் தங்கி இருத்த சில இடங்களுக்கு , அது தேவ லோகமாகவே இருந்தாலும் தேவர்களினால் செல்ல முடியாமல் போயிற்று. தேவர்கள் மற்றும் அசுரர்கள் என்ற பிரிவினை சில இயற்கைக் காரணங்களுக்காக ஏற்படுத்தப்பட்டு இருந்தது. அதாவது இந்த உலகில் தீமை மற்றும் நன்மைகளைக் குறிக்கும் விதத்திலேயே தீய குணங்களை அசுரர்கள் என்றும், நல்ல குணங்களை தேவர்கள் என்றும் கூறப்பட்டு எப்பொழுதுமே நன்மைக்கு எதிராக தீமைகள் உள்ளதாகவும், அ...