இடுகைகள்

ஆகஸ்ட், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குல தெய்வ வழிபாடு / Kula Theiva Worship -12

படம்
12 குல தெய்வ வழிபாடு என்பது எத்தனை முக்கியமானது என்பதை வலியுறுத்தும் இன்னொரு முக்கியமான கதையையும் சமாதியாகி விட்ட காஞ்சி மகாபெரியவா வாழ்க்கை சரித்திரத்தில் இருந்து அறிய முடிகிறது. ............ ''பெரியவர் ஊர் ஊராகச் சென்று சாதுர்மாஸ்ய விரதம் இருந்துவந்த ஒருநாள் அது. அப்படி ஒரு கிராமத்தில் அவர் தங்கியிருந்தபோது, ஒரு விவசாயி பெரியவரை வந்து சந்தித்தார். அவரிடம் துளியும் உற்சாகமில்லை. முகமும் இருளடைந்து போயிருந்தது. வாயைத் திறந்து தன் துன்பங்களைக் கூற அவசியமே இல்லாதபடி, பார்த்த மாத்திரத்தில் அவரின் துன்பம் பெரியவருக்கு விளங்கி விட்டது. இருந்தும் அந்த விவசாயி, ''சாமி… ஏண்டா உயிரோட இருக்கோம்னு இருக்கு. பேசாம குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலா மான்னுகூட தோணுது. ஒரு மனுஷனுக்கு வாழ்க்கைல போராட்டம் இருக்கும். ஆனா, என் வரைல போராட்டமே வாழ்க்கையா இருக்கு” என்று துயரத்தைச் சொல்லி அழுதார். பெரியவர் அவரிடம், குலதெய்வத்துக்கு ஒழுங்கா பூஜை செய்யறியா?” என்று கேட்டார். குலதெய்வமா… அப்படின்னா?” – திருப்பிக் கேட்டார் அவர். சரிதான்… உங்க குலதெய்வம் எதுன்னே தெரியாதா?” சாமி… வியாபார வி...

குல தெய்வ வழிபாடு / Kula Theiva Worship - 11

படம்
11 குலதெய்வத்தைக் குறித்த சந்தேகத்துக்கான விடையை திரேதா யுகத்தில் ஏகலவ்யனகரா என்ற ராஜ்யத்தை ஆண்டு வந்த ஸ்ருதாதாரா என்ற கந்தர்வ புருஷனுக்கு சிவபெருமானே கூறியதான கதை உண்டு. திரேதா யுகத்தில் ஏகலவ்யனகரா என்ற ராஜ்யத்தை ஸ்ருதாதாரா என்ற கந்தர்வ புருஷன் ஆண்டு வந்தான். அவன் பரம்பரையினர் சிவபெருமானின் பக்தர்கள். வம்சவம்சமாக சிவபெருமானை வழிபட்டு வந்தார்கள். பெரும் கொடையாளிகளாகவும் இருந்தார்கள். பூமியை ஆண்டாலும் அவர்களால் கந்தர்வ லோகத்திலும் இருக்க முடிந்தது. ஒரு கட்டத்தில் அவனுடைய பாட்டனார் காலத்தில் அவர்கள் சிவ வழிபாட்டை மறந்து தாமே கந்தர்வ புருஷர்கள், இனி அவர்கள் யாரையும் வழிபடத் தேவை இல்லை, தாங்கள் செய்யும் தர்மமும், தானமும் தங்களைக் காப்பாற்றும் என்ற எண்ணத்தில் பல காலம் சிவபெருமானின் நினைவே இல்லாமல் இருந்து விட்டார்கள். அவருக்கு செய்ய வேண்டிய பாராம்பரிய வழிபாடுகளை மறந்தனர்.  இப்படியாக இருந்த பரம்பரையில் அவர்களின் பின் வழியில் வந்த வம்சத்தை சேர்ந்தவனே ஏகலவ்யனகரா ராஜ்யத்தை ஆண்டு வந்த ஸ்ருதாதாரா எனும் இன்னொரு கந்தர்வ புருஷன். அவனுக்கு சத்யதாரா மற்றும் சீலாதாரா என்ற இரண்டு மகன்...

குல தெய்வ வழிபாடு / Kula Theiva Worship - 10

படம்
10 அப்படி என்றால் பிற ஆலயங்களில் சென்று வழிபடும் பக்தர்களுடைய பாபங்கள் அகலுவதில்லையா?    நான் அப்படிக் கூறவில்லை. எந்த ஒரு ஆலயத்திலும் சென்று வழிபட வேண்டியதில்லை என்பது அர்த்தம் அல்ல.  மானிடர்களாகப்  பிறந்த அனைவருக்கும் குல தெய்வம் உள்ளது என்பதும் அர்த்தம் அல்ல. பல பரம்பரைகள் குல தெய்வங்கள் இல்லாதவை. அவர்கள் எந்த தெய்வத்தை வேண்டுமானாலும் அல்லது எந்த ஆலயத்திலும் சென்று வழிபடலாம். அவர்களுடைய பூர்வ ஜென்ம கர்மாக்களின் தாக்கத்தை ஓரளவுக்கு அந்தந்த தெய்வங்கள் நிவர்த்தி செய்யலாம். ஆனால் அவற்றையும் அந்த தெய்வங்களினால் முழுமையாக நிவர்த்தி செய்ய இயலாது என்பதின் காரணம் அவரவர் செய்துள்ள பூர்வ ஜென்ம பாவ புண்ணியங்களுக்கேற்ப அவற்றின் பலனை அவரவர் அனுபவித்தே தீர வேண்டும் என்பது நியதி.   அந்த காலத்தில் எந்த ஒரு பரம்பரையிலும் முதல் ஐந்து  பரம்பரையினர்  எந்த தெய்வத்தை வழிபட்டு வந்துள்ளார்களோ அந்த தெய்வமே அந்த பரம்பரையின் குல தெய்வம் ஆகும் என்பதை ஏற்றுக் கொண்டு இருந்தார்கள். ஐந்து என்பதின் காரணம் ஐந்து விரல்களைக் கொண்டதே ஒரு முழுமையான கை ஆகும். அருள் பொழியும்...

குல தெய்வ வழிபாடு / Kula Theiva Worship - 9

படம்
9 குலதெய்வங்கள் நகர மற்றும் கிராமப்புறங்களில் ஆலயங்கள் பல்வேறு பெயர்களில் அதாவது கோவில்கள், வழிபாட்டுத் தலங்கள், சிறு ஆலயங்கள் போன்றவை மரத்தின் அடிகளில், நதி மற்றும் ஆற்றுப் பகுதி போன்ற இடங்களில் இருந்தன என்றாலும் அந்த தெய்வங்களும், தேவதைகளும் ஒரே தெய்வத்தில் இருந்து அனுப்பப்பட்டவையே. அவை சில குறிப்பிட்ட காரணங்களுக்காக சில இடங்களுக்கு அனுப்பப்பட்டவை. அவை அனைத்தும் ஒரே அளவிலான சக்திகளைக் கொண்டவை. அவை அனைத்துமே தம்மை ஆராதிக்கும் பக்தர்களின் வேண்டுகோட்களை மூல இடத்துக்கு அனுப்பி வைத்து அங்கிருந்து அவர்களுக்கு அருள் கிடைக்க வழி செய்பவை என்பதையெல்லாம் முன் பாகங்களில் விளக்கி உள்ளேன். ஒரு விதத்தில் பார்த்தால் அவை அனைத்துமே குறிப்பிட்ட தெய்வங்களின் நாடி நரம்புகள் என்று கூடக் கூறலாம். எப்படி ஒரு மனித உடம்பில் நரம்புகள் ஒன்றுடன் ஒன்று கலந்து ரத்தத்தை செலுத்தி உயிர் தருகிறதோ, எப்படி மனித உடலில் உள்ள எலும்புகள் இணைந்து செயல் திறனை தருகின்றனவோ அப்படித்தான் தெய்வங்களின் பல்வேறு அவதாரங்களும், கணங்களும் ஒன்று சேர்ந்து உள்ள அமைப்பே தெய்வ அமைப்பாகும். அது போலவேதான் மூலக் கடவுள் தன்னுடைய ...

குல தெய்வ வழிபாடு / Kula Theiva Worship - 8

படம்
8 குலதெய்வ வழிபாடு  என்பது இன்று நேற்றல்ல, மகாபாரத  மற்றும் இராமாயண  காலங்களில் இருந்தே நடைமுறையில்  இருந்துள்ளது என்பதும்,  தெய்வங்கள் எப்படி தம்மை தானாகவே வெளிப்படுத்திக்  கொள்ளும் என்பதற்கும் பல புராணக் கதைகள் உள்ளன. மகாபாரத யுத்தம் முடிந்து தர்மர் ஆட்சியில் அமர்ந்தார்.  அவர் சுமார் 36 ஆண்டுகள் நாட்டை  ஆண்டு வந்தார். அவர்கள் ஆட்சியில் அமர்ந்ததும் கிருஷ்ணர் துவாரகைக்கு சென்று விட்டார். அப்படி இருக்கையில் ஒருநாள் தர்மர் ஆட்சியில் இருந்தபோது அவர்கள் கிருஷ்ணர் இவ்வுலகை விட்டு தன்னை நீக்கிக் கொண்டார் என்ற செய்தியைக் கேட்டு துயர் அடைந்தார்கள். கிருஷ்ணர் இன்றி  இனி தமக்கும் இந்த உலகில் வாழ அருகதி இல்லை என துயரம் கொண்டவர்கள் அவர்களது ராஜ்யத்தை அர்ஜுனனின் பேரனான பரிஷித்திடம் ஒப்படைத்து விட்டு தாங்களும் சிவபெருமானின் பாதங்களுடன் கலந்து சிவலோகப் பிராப்தி அடைந்து விட வேண்டும் என்ற நோக்கத்தோடு தமது வாழ்க்கையை முடித்துக் கொள்ள இமயமலையை நோக்கி பயணம் செல்லத் துவங்கினார்கள். அவர்கள் அனைவருமே  ஆராதித்து வழிபாட்டு வந்திருந்தது சிவபெருமானே ...