இடுகைகள்

ஜூலை, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Ice and Ruthraksha Lingam/ அற்புத அமைப்பில் சிவலிங்கங்கள்

படம்
சாந்திப்பிரியா வடநாட்டில் ஸ்ராவன் மாதங்களில் ஸ்ராவன் சோம வாரம் எனும் தினத்தில் (திங்கள் கிழமை) அமர்நாத் சிவலிங்கத்தை குறிக்கும் வகையில் மிகப்பெரிய அளவில் சிவலிங்க உருவங்களைமுழுமையான ஐஸ் கட்டிகளினால் செய்து வைத்து இருப்பார்கள். அன்று இரவு முழுவதும் அங்கு வந்து பூஜைகளை செய்து பக்தர்கள் ஆராதிப்பார்கள். இந்த ஐஸ் லிங்கங்கள் மால்வா எனும் பகுதிகளான இந்தூர், தேவாஸ், உஜ்ஜயினி, போபால் போன்ற  நகரங்களில் பெருமளவில் நடைபெறும். சிவபெருமான் ஆலயங்களில் ஐந்து  முதல் பத்தடி உயரங்களில் கூட இப்படிப்பட்ட சிவலிங்கங்களை உருவாக்கி வைத்து வழிபடுகிறார்கள்.  இப்போது குஜராத்திலும்  இந்த பழக்கம் உள்ளதாக தெரிகிறது.  இதற்கான விசேஷ காரணங்களோ இல்லை பரம்பரைப் பழக்கமோ இல்லை என்றாலும் இது பரவலாக ஷ்ரவன் சோம வாரங்களில் கொண்டாடப்படுகிறது.  அவற்றின் சில படங்களைக் கீழே தந்துள்ளேன்.   குஜராத்தில்  ஐஸ் லிங்கம்  ஐஸ் லிங்கம்   ஐஸ் லிங்கம்   ஐஸ் லிங்கம் குஜராத் கடற்கரையில் மணலில் செய்த  லிங்கம் தேவாஸ் நகரில் ஐஸ் லிங்கம் ...

Wonderful Dream - விசித்திரக் கனவு

படம்
என்னுடைய தாயாரும் தந்தையும் இன்று என்னுடைய தந்தையின் வருடாந்திர திவசம். அதி காலையில்  எனக்கு ஒரு விசித்திரக் கனவு. விடியல் காலை சுமார் 3.10 மணி இருக்கும். அதில் முன்னர் எனக்கு தெளிவில்லாத சில விஷயங்களுக்கு பதில் அளிக்கும் வகையில்  என்னுடைய தாயார் எனக்கு சில செய்திகளைக் கூறினார். இந்தக் கனவு  இன்று ஏன் வந்தது என்பதையும், அல்லது எதற்காக வந்தது  என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.  ஆனால் இது என்னுடைய குடும்பத்தின் முக்கியமான செய்தி என்பதினால் உடனடியாக  எழுதி உள்ளேன்.  என்னுடைய தந்தை காலத்தில் இருந்தே எங்களுடைய குல தெய்வம் யார் என்பதையை அறியாமல் நாங்கள்  வைதீஸ்வரன் கோவில்தான் எங்களுடைய குல தெய்வம் என்று எண்ணிக் கொண்டு  அங்கு மொட்டை அடித்தல் மற்றும் எங்களுடைய பிரார்த்தனைகளை செய்து கொண்டு இருந்தோம். அதற்கு இடையில் என்னுடைய தந்தையின் காலத்தில் இருந்தே  வேறு ஒருவர் நட்பினால் திருச்சி அகிலாண்டேஸ்வரி ஆலய வழிபாட்டை தொடரத் துவங்கி அதையே எங்கள் குல தெய்வமாக ஏற்றுக் கொண்டு வழிபடத் துவங்கினோம். எங்கள் வீட்டு அனைத்து விசேஷங்கள...

Harishchandragad - ஹரிஸ்சந்திர காட்

படம்
நான்காவது தூண்   விழுந்தால்     உலகம் அழியுமா ?     தற்போதைய குஜராத் மானிலத்தின் அஹமதாபாத்தில் (முன்னர் மகாராஷ்டிரத்துடன் இணைந்து இருந்த ஊர்)  கோதாலே எனும்  கிராமத்தில் உள்ள சாயாத்ரீ எனும் மலை உச்சி மீது ஒரு கோட்டை உள்ளது. அதன் பெயர் ஹரிஸ்சந்திர காட் என்பதாகும். அது அதை சுற்றி இருந்த ஊர்களுக்கு காவலாக இருந்த கோட்டையாம் அது.  அங்கு ஹரிஸ்சந்திரேஸ்வரர் என்ற ஆலயம் உள்ளது. ஹரிஸ்சந்திர ஆலயத்தை சுற்றி பல குளங்களும், குகைகளும் உள்ளன. அவற்றில் ஒன்றான கேதாரீஸ்வர் என்ற குகையில் ஐந்து அடி உயர சிவ லிங்கம் உள்ளது. அது கழுத்தளவு நீரின் நடுவில் வைக்கப்பட்டு உள்ளதாம். அந்த சிவலிங்கத்தை சுற்றி உள்ள தண்ணீர் ஐஸ் கட்டியைப் போல குளிராக இருப்பதினால் அதன் அருகில் சென்று பூஜிக்க முடிவது இல்லை என்கிறார்கள். ஆனால் சமீப காலமாக அந்த சிவலிங்கத்தின் அருகில் சென்று பார்க்கும் வகையில் அந்த தண்ணீர் மீது நடைபாதை அமைக்கப்பட்டு இருந்தாலும் அந்த பாதையும் நீரில் மூழ்கி இருப்பதினால் சிவலிங்கத்தின் அருகில் சென்று யாராலும் பார்க்க இயலவில்லையாம். ...

Kanwar Yathra or கான்வா விரதம்

படம்
கான்வா  விரதம்  சாந்திப்பிரியா  தென் பகுதிகளில் காவடி எடுக்கும் விழாவைப் போல வடநாட்டில் ஷ்ராவன் (ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களின் மத்தியில் வருவது) எனும் மாதத்தில் கன்வா எனும் பெயரில் காவடி எடுத்து அதில் உள்ள குடங்களில் கங்கை நீரை சுமந்து கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வது சிவ பக்தர்களின் பழக்கம். இதை கான்வா விரதம் என்பார்கள். அந்த பத்து நாட்களிலும்  அதை செய்பவர்கள்  கடுமையான விரதம் இருந்து கான்வா  எனும் காவடியை சுமந்து செல்வார்கள். ஷ்ராவன் என்பது இந்து  மாதங்களில் வரும்   ஐந்தாவது மாதம் ஆகும்.  பிற மாதங்கள் இவை : சைத்ரா  வைஷாக்  ஜைஸ்த்தா ஆஷாதா  ஸ்ராவனா  பாத்ரா  அஷ்வின்  கார்த்திக்  மார்கஷீர்ஷா பௌஷ  மாக்  கன்வா என்றால் நீண்ட மூங்கில் கட்டையின் இரு புறத்திலும் கட்டி வைக்கப்பட்டு உள்ள குடங்களை சுமக்கும் மூங்கில் கழி ( காவடி )  ஆகும். அதை சுமப்பவர்களை கன்வாரியா என்று அழைப்பார்கள். கன்வாரியா என்றால் சிவ பக்தர்கள் என்று பொருள்படும். அந்த விரத விழா மிகப் ...

Margasahayeswarar Temple, Mayavaram

படம்
மாயவரம் அருகில் சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மூவலூர் எனும் தலத்தில் உள்ளதே மார்க்கசஹாயேஸ்வரர் எனும் சிவன் ஆலயம். இந்த ஆலயம் பத்தாம் நூற்றாண்டை சேர்ந்தது என்பதாக தெரிகிறது. இருதய நோயினால் அவதிப்படுபவர்கள் இங்கு வந்து வழிபட்டால் நோயின் தாக்கம் குறைவதாகக் கூறுகிறார்கள்.  இங்குள்ள சிவபெருமான் ஸ்வயம்புவாக அவதரித்தவராம். இந்த ஆலயத்தின் இன்னொரு அற்புதம்  சன்னதியின் நுழை வாயிலில் நான்கு பக்கங்களையும்  நோக்கி நான்கு நந்தி தேவர்கள் அமர்ந்து உள்ளார்கள்.  மகிஷாசுரமர்த்தினி எனும் துர்கா தேவி, அந்த அசுரனை வதம் செய்த பின் தனது அழகிய கோலத்தை இழந்து கோபக்கனலான உருவை பெற்றாள். ஆகவே அவள் தனக்கு மீண்டும் அழகிய வதனம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இங்கு வந்து சிவபெருமானை வேண்டி பூஜித்து தனது பழைய அழகிய உருவை பெற்றுக் கொண்டதாக இந்த ஆலயத்தின் ஒரு வரலாறு கூறுகிறது. அவள் இங்கு வந்து தங்கி இருந்தபோது அங்கிருந்த ஒரு தீர்த்தத்தில் தினமும் ஸ்நானம் செய்து வழிபாட்டு வந்ததினால் புனிதம் அடைந்த தீர்த்தத்தின் பெயரை துர்கா புஷ்கரணி என அழைக்கிறார்கள். துர்கையும் பார்வதியே என...