இடுகைகள்

ஜூன், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Varivaneswarar temple, sri Lanka

படம்
- சாந்திப்பிரியா - ஒரு காலத்தில் இந்தியாவும் ஸ்ரீ லங்காவும் ஒரே நிலப்பரப்பாக இணைந்து இருந்தன. அதனால் இந்துக்களின் பல பிரசித்தி பெற்ற ஆலயங்களைப் போல ஸ்ரீ லங்கா பகுதியிலும் பல புகழ் பெற்ற ஆலயங்கள் இருந்துள்ளன. முக்கியமாக பல சக்தி வாய்ந்த சிவாலயங்களும், முருகன் ஆலயங்களும் அந்த நாட்டில் பலவும் உண்டு. அதன் காரணம் ஸ்ரீ லங்கா ராமாயணக் காலத்துடன், அதன் கதையுடன் சம்மந்தப்பட்ட இடமாகும். சிவ வழிபாடு அதிகம் இருந்த பூமியும் ஆகும். ஸ்ரீ லங்காவை ஆண்ட பெரும் சிவபக்தனான ராவணன் சிவாலயங்களில் சென்று வணங்கி பூஜித்து உள்ளார். அதனால் அவர் மூலமும் பல சிவாலயங்கள் பெருமளவில் புகழ்பெற்று இருந்துள்ளது. வாரிவனேஸ்வரர் எனும் ஒரு புகழ்பெற்ற ஆலயம் இன்றைய ஸ்ரீலங்கா நாட்டின் யாழ் பகுதியில் உள்ள சாவக்கச்சேரி எனும் இடத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டு இருந்துள்ள ஆலயம் ஆகும். உள்நாட்டு யுத்தத்தினால் சற்றே சேதம் அடைந்து இருந்தாலும் அந்த ஆலயம் அந்த காலத்தில் மகத்தானதாக கருதப்பட்டு வந்திருந்தது. அந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் சக்தி வாய்ந்த சுயம்பு லிங்கம் என்பதாகக் கூறுகிறார்கள். போர்த்துக...

Siva Poojai

படம்
சிவபூஜை செய்பவர்கள் சாதாரணமாக அவரை லிங்க உருவில்தான் பூஜை செய்வார்கள். ஆலயங்களில் கூட சிவ லிங்கத்தையே சிவபெருமானாக பாவித்து பூஜை செய்வார்கள். சிவபெருமானை சிவன் உருவில் பூஜை செய்யாமல் ஏன் அவரை லிங்க உருவில் பூஜிக்கிறார்கள்?   சிவனும் சக்தியும் இணைந்ததே சிவலிங்க உருவம் ஆகும். சிவன் இன்றி சக்தி இல்லை, அது போலவேதான் சக்தி இல்லாமல் சிவனும் இல்லை. ஆகவே பிரபஞ்சத்தைப் படைத்த சிவபெருமான் எனும் பரப்பிரும்மன் என்பது சிவனும் சக்தியும் இணைந்துள்ள சிவசக்தி ரூபமே என்பதினால் சிவனை தனியான உருவிலே பூஜிக்காமல் சிவசக்தியான லிங்க உருவிலே பூஜிக்கிறார்கள். என்றுமே பார்வதி மற்றும்  சிவனுக்கு தனி உருவம் கிடையாது.  அவர் உடலில் பாதி பார்வதியாக உள்ளது.  சிவ லிங்கங்கள் நான்கு வகைப்படும். அவற்றில் முதலாவதானது  ஆலயங்களில் வைத்து பூஜிக்கப்படும் 'அசல லிங்கம்' என்பதாகும். ஆலயங்களுக்குள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள சிவலிங்கத்தை 'பரார்த்த லிங்கம்' என்றும் கூறுவார்கள். அது சுயம்பு லிங்கம், காண லிங்கம், தைவிக லிங்கம், ஆரிட லிங்கம், மானுடலிங்கம் என ஐந்து வகைப்படும். அவற்றுள், சுயம்பு லி...