இடுகைகள்

மார்ச், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குலதெய்வம்

படம்
     இந்த வருடம் ஜனவரி மாதக் கடைசியில் திரு கே.வீ. பதி என்பவர் 'What is 'Kula Deivam'? How is it different from other Deivams?' என்ற கேள்வியை என்னிடம் எழுப்பி இருந்தார். அவருக்கு உடனடியாக நான் கீழ் கண்ட பதிலை அனுப்பி இருந்தேன். ''ஐயா, ஒவ்வொரு குடும்பத்தினரும் ஒவ்வொரு தெய்வத்தை தமது குல தெய்வமாக ஏற்றுக் கொண்டு இருப்பார்கள். அதாவது நம்முடைய ஐம்பது தலைமுறைக்கு முன்னர் இருந்த நம்முடைய தாத்தாவுக்குத் தாத்தா என நீண்டு கொண்டு போகும் பெரும் பெரும் பெரிய தாத்தா (இருபது தலைமுறையின் தாத்தா) வணங்கி வழிபாட்டு வந்திருந்த தெய்வத்தையே அவர் வழி வருபவர்கள் குல தெய்வமாக ஏற்றுக் கொண்டு உள்ளார்கள். அவர் குடும்பத்தில் பிறக்கும் ஆண் மகன்கள் மூலம் பெருகும் ஆண் வழி குடும்பத்தினர் அனைவருமே அதே தெய்வத்தைத்தான் வணங்கி வருவார்கள். எந்த ஒரு குடும்பத்தில் ஆண் மகனே இல்லையோ அதோடு அந்த குடும்பத்தின் வம்சம் பெருகுவது இல்லை என்பதினால் குலதெய்வம் முடிந்து விடும் என்பார்கள். ஏன் என்றால் பெண்கள் புகுந்த வீட்டுக்குச் சென்றதும் அவர்கள் அந்தக் குடும்பத்தின் குல தெய்வத்தையே ஏற்...