இடுகைகள்

பிப்ரவரி, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Guru Charithram -Some information

படம்
  குரு பரம்பரை   குரு சரித்திரம் - சில விவரங்கள்  சாந்திப்பிரியா குரு பரம்பரை என்பது  தத்தாத்திரேயரின் அவதாரத்துக்குப் பிறகே தோன்றின. அவரே குரு பரம்பரை என்பது துவங்க வழி வகுத்தார். திருமூர்த்திகளின் அவதாரமான அவரே குருக்களுக்கு எல்லாம் குருவான சத்குரு ஆவார்.  இந்த பூமியில் குரு மற்றும் சிஷ்யர்களுக்கு இடையே எப்படிப்பட்ட உறவு இருக்க வேண்டும், ஒரு குருவின் மூலமே மக்களின் மன நிலையை ஆன்மீக வழியில் செலுத்தி கலிகாலத்தில் கலியின் தாக்கத்தினால் விளையும் தீமையை எப்படி அழிக்க வேண்டும் போன்றவற்றை  நடைமுறையில் எடுத்துக் காட்டவே தத்தாத்திரேயர் தாமே ஒரு குருவாகவும் அவருடைய சிஷ்யராகவும் பல அவதாரங்களை எடுத்துக் காட்டி உள்ளார். அதன் விளைவாகவே தத்தாத்திரேய குரு பரம்பரை உருவாகி மேலும் பல குரு பரம்பரைகள் துவங்குவதற்குக் காரணம் ஆயிற்று.  தத்தாத்திரேயரே தத்தாத்திரேயராகவும், ஸ்ரீ வல்லபாவாகவும், ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளாகவும், ஸமர்த்த ஸ்வாமிகளாகவும், ஷீரடி சாயிபாபா, மானிக் பிரபு போன்ற பல ரூபங்களில் தோன்றி முதல் குரு பரம்பரையை உருவாக்கினார். இவர்களி...

Guru Charithram - 61

படம்
  அத்தியாயம் - 52 இப்படியாக சித்த முனிவர் ஸ்ரீ நருசிம்ம  ஸரஸ்வதி ஸ்வாமிகளைப்  பற்றிய  கதைகளை கூறியதைக் கேட்டுக் கொண்டு இருந்த நமத்ஹரகா ஸ்ரீ நருசிம்ம  ஸரஸ்வதி  ஸ்வாமிகள்  மறைந்து போனக் கதையைக்  கேட்டதும் அப்படியே தன்  நிலை மறந்து  சமாதி நிலைக்குச் சென்றுவிட்டார். உடல் முழுதும் வியர்வையினால் நனைந்தது.  கண்களில்  இருந்து கண்ணீர் தாரை தாரையாக கொட்டியபடி இருந்தது. அப்படியே சமாதி நிலையில் அமர்ந்து இருந்த  நமத்ஹரகாவை தட்டி எழுப்பினார் சித்த முனிவர். ''மகனே, நீ மேன்மையான  தியான நிலையை அடைந்து  ஞான வழிக்கு செல்லத் துவங்கி விட்டாய். ஆகவே இனி நிச்சயமாக உனக்கு முக்தி கிடைக்கும். தத்தாத்திரேயரின்  அவதாரமான  ஸ்ரீ நருசிம்ம  ஸரஸ்வதி  ஸ்வாமிகளின் மகிமைகளைக் குறித்து நான் கூறிய அனைத்தையும் நீ ஆழ்ந்த கவனத்துடன் கேட்டாய். அது உன்னோடு நின்று விடக் கூடாது. என்னுடைய குருநாதரின் அமிர்தம் போன்ற மேலான மகிமைக் கதையை நான் எப்படி உனக்குக் கூறினேனோ அது போலவே நீயும் இந்த மண்ணில் வாழ்ந்து வரும்வரை உன்னை குருவாக ஏற்று...

Guru Charithram - 60

படம்
  அத்தியாயம் - 5 1 சித்தமுனிவர் தொடர்ந்து கூறலானார் ''நமத்ஹரகா, தன்னுடைய வாழ்கையை முடித்துக் கொள்ள முடிவு செய்து விட்ட ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஸ்ரீசைலத்துக்கு  கிளம்பிச் சென்றபோது அவர் தங்களை தவிக்க விட்டு செல்லக் கூடாது என்றும், அப்படி அவர் சென்று விட்டால் தாம் அனைவருமே தாய் தந்தை அற்ற குழந்தைகளைப் போல அநாதைகளாகி விடுவோமா   என்று கதறிக் கொண்டு அவர் போவதை தடுத்தார்கள். ஆனால் அவரை அங்கிருந்து செல்லக் கூடாது என்று நிர்பந்தம் செய்தவர்களிடம் கூறினார் 'பக்தர்களே, நீங்கள் யாரும் துக்கப்படத் தேவை இல்லை. நான் இங்கிருந்து ஒரேடியாக சென்று விடப் போகிறேன் என்று நான் எப்போது கூறினேன்? நான் இங்குதான் தங்கி இருப்பேன், ஆனால் உங்கள் கண்களுக்கு புலப்படாமல் இருப்பேன் என்றல்லவா சொன்னேன். என்னுடைய ரூபமாக என்னுடைய பாதுகைகள் இங்கு  இருக்கும். நான் தினமும் அதிகாலை அம்ரஜா நதிக்கு சென்று அங்கு குளித்தப் பின் கான்பூரில் உள்ள என்னுடைய மடத்துக்கு  வந்து நீங்கள் அளிக்கும் பிட்ஷைகளை ஏற்றுக் கொள்வேன். அதன் பின் அந்த நெல்லி மரத்தடியில் வந்து அமர்ந்து கொள்வேன். அங்கு வந்...

Guru Charithram - 59

படம்
  அத்தியாயம் - 5 0 சித்த முனிவர் நமதஹரகாவுக்கு இன்னொரு கதையையும் கூறினார் ''தன் வாழ்க்கையில் பல வசதிகள் பெற்று வாழ வேண்டும் என வேண்டிக் கொண்ட ஒரு வண்ணானுக்கு எப்படி ஸ்வாமிகள் கருணை புரிந்தார் என்பதை முன்னமே கூறினேன் அல்லவா, அவன் மரணம் அடைந்தப் பின் அதற்க்கு அடுத்த ஜென்மத்தில் பீதார் எனப்படும் இடத்தில் ஒரு  முஸ்லிம் அரசனாகப் பிறந்தான். பீதாரை ஆண்டுவந்த அந்த முஸ்லிம் மன்னன் பூர்வ ஜென்மத்தில் ஸ்வாமியின் பக்தனாக இருந்ததினால் நேர்மையான வாழ்க்கையை மேற்கொண்டு அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைத்துக் கொண்டு நடு நிலையாக ஆட்சி செய்தான்.  ஆனால் சில  முஸ்லிம் பிரிவினர் அந்த மன்னன் இந்துக்களையும் முக்கியமாக பிராமணர்கள் மற்றும் குருமார்களையும் தம் சமயத்தினருடன் சேர்த்து பாரபட்ஷம் இல்லாமல் நடத்துவதை  ஏற்றுக் கொள்ள முடியாமல் அதைப் பற்றி குறை கூறினார்கள். ஆனால் அவர்களுடைய கருத்து எதையுமே அந்த மன்னன் ஏற்கவில்லை. தன்னைப் பொருத்தவரை அனைவரும் ஒன்றே என்ற கொள்கையில் இருந்து தடம் புரண்டு ஆட்சி செய்ய விரும்பவில்லை.  தம்மிடம் குறைக் கூறியவர்களிடம் மன்னன் கூறினார் 'என்னை...

Guru Charithram - 58

படம்
  அத்தியாயம் - 49 நமத்ஹரகா சித்த முனிவரிடம் கேட்டார் ' முனிவரே ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளின் வாழ்கை பற்றிய பெரும்பாலான கதைகளை நீங்கள் எனக்கு மிக அழகாக எடுத்துரைத்து வந்துள்ளீர்கள். குருவை மதித்து நடப்பது கல்பதாரு விருட்ஷத்தை அடைந்தது போன்றது. சத்குரு, சத்குரு என்கிறார்களே அந்த சத்குருவின் தன்மை என்ன, மகிமை என்ன என்பதை எனக்கு விளக்குவீர்களா?' அதைக் கேட்ட சித்த முனிவர் அதை விளக்கும் ஒரு கதையைக் கூறினார். 'நமத்ஹரகா, நீ உண்மையிலேயே பேரானந்த நிலை என்பதென்ன என்பதைக் குறித்து மிக நல்ல கேள்வியைத்தான் கேட்டாய். பேரானந்த நிலையே சத்குருவைக் காண்பது. அதை அறிந்து கொள்வதின் மூலம் விவேகத்தைப் பெற்று அறியாமையை விலக்கிக் கொள்ள முடியும். ஒருமுறை கைலாயத்தில் சிவபெருமான் பார்வதியுடன் அமர்ந்து கொண்டு இருந்தபோது பார்வதி தேவி சிவபெருமானிடம் கேட்டாள் 'பரப்பிரும்மனே, தயவுசெய்து பிரும்மனை அடையும் வழிக்கான மந்திரோபதேசம் எதுவும் இருந்தால் அதை எமக்கு போதிப்பீர்களா?' சிவபெருமான் அதற்குக் கூறினார் 'தேவி இதுவரை வேறு எவருமே கேட்காத ஒரு கேள்வியை நீ ஒருவள் மட்டுமே என்னிடம் இ...

Guru Charithram - 57

படம்
  அத்தியாயம் - 48 சித்தமுனிவர் கூறிய கதையை கேட்ட நமத்ஹரகா சித்த முனிவரிடம் கேட்டார்  'சித்த முனிவரே. எனக்கு மனதில் ஒரு சின்ன சந்தேகம். எதற்காக ஸ்வாமிகள்  கனக்பூரில்  தங்க முடிவு செய்தார்? அதற்கு சித்த முனிவர்  கூறலானார் ''ஒரு நாள் தன்னுடைய சிஷ்யர்கள் மற்றும் கிராமத்தினரை அழைத்த ஸ்வாமிகள் அனைவரையும் உடனடியாக  புனித யாத்திரை மேற்கொள்ளத் தயாராக இருக்குமாறு கூறினார். அதற்கு அவர்கள் 'ஸ்வாமி  வெளியூருக்குச்  செல்வதென்றால்  எங்களுக்கு சிறிது நேரம் வேண்டுமே. நாங்கள் வீட்டுக்குச் சென்று பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டு, துணிமணிகளை எடுத்து வர வேண்டும்' என்றதும்  ஸ்வாமிகள் கூறினார் 'எதற்காக நீங்கள் துணிமணிகளை எடுத்துக் கொண்டு வர வேண்டும்? கங்கை, பிரயாகை, கயா என்ற மூன்றும் சங்கம் எனும் பெயரில் இங்கேயே உள்ள நிலையில் அந்த நதிக்கு சென்று குளிக்கவே நான் புனித யாத்திரையை மேற்கொள்ள வேண்டும் என்றபோது நீங்கள் எதற்காக வெளியூர் பயணத்துக்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும்?' என்று கூறிவிட்டு வீட்டுக்குச் செல்லக் கிளம்பியவர்களை  தடுத்து நிறுத்தின...

Guru Charithram - 56

படம்
  அத்தியாயம் - 47 சித்தமுனிவர் தொடர்ந்து கூறலானார் ''இன்னுமொரு கதையைக் கேள்.  கனக்பூரில்  ஒரு ஏழை விவசாயி, தாழ்ந்த குலத்தில் பிறந்தவன் இருந்தான். அவன் தனது நிலத்தைத் தானே உழுது வந்தான். தினமும் வயலில் வேலை  செய்த பின் வீடு திரும்பும் வழியில் உள்ள ஸ்வாமிகளின்  ஆஸ்ரமத்திற்கு சென்று  ஸ்வாமிகளை வணங்கிச் செல்வான்.  சங்கமத்தில் இருந்து கனக்பூர் ஆசிரமத்திற்கு நடந்தே வருவான்.  ஸ்வாமிகள் சங்கம் வழியே எப்போது  சென்றாலும் வயலில் இருப்பவன்  ஓடி வந்து அவரை வணங்குவான்.  அவரும் மௌனமாக அவனுடைய வணக்கத்தை எற்றுக் கொள்வார். ஒரு முறை ஸ்வாமிகள்  அந்த வயலின் வெளிப்பாதை  வழியாக சென்று கொண்டு இருந்த பொழுது  விவசாயி ஓடி வந்து ஸ்வாமிகளிடம்  தன் வயல் வழியே நடந்து சென்றால் அவருடைய பாதங்கள் தனது வயலில் விழும். அப்படி அவருடைய பாதம் தனது வயலில் விழுந்தால் அவருடைய அருள் தனக்குக் கிடைக்கும் என்று தான் நம்புவதினால் அந்த வேண்டுகோளை வைத்ததாகக் கூறினான். ஸ்வாமிகளும்  அவனுடைய வேண்டுகோளை  எற்றுக் கொண்டு  அவன் வயல் வழியே நடந்து ச...

Guu Charithram - 55

படம்
  அத்தியாயம் - 46 சித்தமுனிவர் தொடர்ந்து கூறலானார் ''தீபாவளிக்கு சில நாட்கள் முன்னர் அக்கம் பக்கங்களில் இருந்த பல இடங்களிலும் இருந்து தங்களுடைய கிராமங்களுக்கு ஸ்வாமிகள் வருகை தர வேண்டும் என்ற வேண்டுகோள் வந்தது. பல்வேறு கிராமத்தை சேர்ந்தவர்கள் ஒன்று கூடி ஸ்வாமிகளிடம் சென்று அவரை தம் கிராமத்திற்கு வருகை தருமாறு நேரிலே அழைத்தார்கள். ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் உள்ள கிராமத்தினர் அனைவரும்  அழைத்தால் நான் ஒருவன் அத்தனை இடங்களுக்கும், அதுவும் ஒரே நேரத்தில் அனைத்து கிராமங்களுக்கும்  எப்படி வர முடியும் என்பதால் தான் எந்த கிராமத்திற்கு முதலில் செல்ல வேண்டும் என்றும் அதன் பின்  வரிசைகிரமமாக  எந்தெந்த கிராமங்களுக்கு வருகை தர வேண்டும் எனக் கூறினால் அந்தந்த கிராமத்துக்கு தக்க  நேரம் ஒதுக்கித் தருவதாக கூறியும்  கிராம மக்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. அங்கு வந்த ஒவ்வொருவருமே தம்முடைய கிராமத்துக்கே ஸ்வாமிகள் முதலில் வர வேண்டும் என்றே விரும்பினார்கள். ஸ்வாமிகளை சந்தித்த கிராமத்தினர்  கூறினார்கள் 'ஸ்வாமிகளே நீங்கள் எங்களிடையே ஏழை அல்லது பணக்க...

Guru Charithram - 54

படம்
  அத்தியாயம் - 45 சித்தமுனிவர் தொடர்ந்து கூறலானார் ''கல்லீஸ்வரம் என்ற கிராமத்து மக்கள் குருவின் புகழைக் கேள்விப்பட்டு அவரை தங்களுடைய கிராமத்திற்கு அழைக்க  விரும்பினார்கள். கல்லீஸ்வாரத்தில்  கல்லீஸ்வரா என்ற புகழ் பெற்ற  சிவன் ஆலயம் இருந்தது. அந்த கிராமத்திலும்  நரஹரி என்ற பெயரைக் கொண்ட புகழ் பெற்ற புலவர் இருந்தார். அவர் தினமும் கல்லீஸ்வரரை  போற்றி ஐந்து வரிகளைக் கொண்ட புதிய பாடலை  இயற்றி வந்தார். அவர் அந்த ஆலயத்திலேயே பூஜைகளையும் செய்து கொண்டு இருந்தார்.   ஸ்வாமிகளை  தம் கிராமத்துக்கு அழைத்த மக்கள் அவர் வருகை தரும்போது அவரை வரவேற்கும் வகையில் ஒரு பாடலை இயற்றித் தருமாறு நரஹரியிடம் கேட்டார்கள். ஆனால் நரஹரியோ தான் சிவபெருமானைத் தவிர வேறு யார் மீதும் பாடலை இயற்ற மாட்டேன் என்றும், அதுவும் மானிடர்கள் மீது நிச்சயமாக பாடலை இயற்ற மாட்டேன் என்றும்  கூறி விட்டார். தன்னிடம் வந்து கேட்டவர்களிடம் இப்படியாகக்  கூறி விட்டு ஆலயத்தில் சென்று பூஜைகளை செய்யத் துவங்கியவர் தன்னை மறந்து  பூஜையை முடிக்கும் முன்னரே சன்னதியில் உட்கார்ந்த...

Guru Charithram - 53

படம்
  அத்தியாயம் - 44 சித்தமுனிவர் தொடர்ந்து கூறலானார் ''கங்காபுரத்தில் நந்திவர்மா  என்கின்ற நெசவாளி இருந்தார். அவருக்கு ஒருமுறை  வெண் குஷ்ட நோய் வந்து விட்டது.  அவர்  தான் வெண்குஷ்ட நோயில் இருந்து குணமடைய வேண்டும் என்பதற்காக துல்ஜாபூரில் இருந்த பவானி தேவியை  மூன்று வருடங்கள் தொடர்ந்து வழிபாட்டு வந்தார். ஒருநாள் அவருடைய கனவில் பிரசன்னமான பவானி தேவி அவரை கனப்பூரில் இருந்த ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளிடம் சென்று அவரை வணங்கி துதிக்குமாறு கூறி விட்டு மறைந்து விட்டாள். ஆனால் அந்த பிராமணரால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பவானி தேவியின் சன்னதிக்கு சென்று பிரார்த்தனை செய்து விட்டு சிலையை நோக்கிக் கூறினார் 'அம்மா பவானி தேவி, நான் உன்னை விட வேறு எந்த மனித அவதாரத்தையும் நம்புவதாக இல்லை. எனக்கு வியாதி குணம் ஆகாவிடிலும் சரி, இங்கேயே இருந்து உன்னை வணங்கியபடி மரணம் அடைவதையே விரும்புகிறேன்'. இப்படிக் கூறியவர் அந்த ஊரிலேயே இருந்து வந்தார்.   ஆனால் அவருக்கு தினமும் அதே கனவு தொடர்ந்தது. அவரும் மசியவில்லை. ஒருநாள் அந்த ஆலய பூசாரி இருவருக்கும்  அதே கனவு...

Guru Charithram - 52

படம்
  அத்தியாயம் -43 சித்தமுனிவர்  தொடர்ந்து கூறலானார்  'கனக்பூராவில்  தண்டுக்  என்ற ஒரு தறி நெய்பவன் இருந்தான். அவன் காலை வேலைகளை முடித்தப் பின்  ஆஸ்ரமத்துக்கு  வந்து அந்த இடத்தை சுத்தம் செய்து வாசலில் தண்ணீர்த் தெளித்துக் கோலம் போடுவது உண்டு.  அதன் பின் தூரத்தில்  இருந்தே குருதேவரை நமஸ்கரித்து விட்டுச் சென்று விடுவான்.  ஒரு நாள் அவனுடைய பெற்றோர்கள் தமது உறவினர்களுடன் ஸ்ரீசைலம் சென்று சிவராத்திரி  அன்று அங்குள்ள சிவபெருமானை வழிபாட்டு விட்டு வரலாம் என எண்ணிக் கொண்டு தண்டுக்கையையும்  ஸ்ரீசைலம் வருமாறு அழைத்தார்கள். ஆனால் தண்டுக்கோ ஸ்வாமிகள் உள்ள இந்த இடமே ஸ்ரீ சைலம் என்று தாம் கருதியதினால் அவர்களுடன் செல்ல மறுத்து விட்டார். அதைக் கேள்விப்பட்ட ஸ்வாமிகள் வேண்டும் என்றே தண்டுக்கை அழைத்துக் கேட்டார் 'அப்பனே, ஸ்ரீசைலம் போவதற்கு நீ ஏன் மறுத்தாய்?' தண்டுக் கூறினார் 'ஸ்வாமி என்னைப் பொருத்தவரை உங்கள் பாதங்களே எனக்கு ஸ்ரீ சைலம் ஆகும்' என்றார். அதற்குப் பின்னர் ஸ்வாமிகள் அவனிடம் வேறு எதையும் கேட்கவில்லை. சிவராத்திரி வந்தது. தண...

Guru Charithram 51

படம்
  அத்தியாயம் -42 சித்தமுனிவர்  தொடர்ந்து கூறலானார் 'அனைவரையும்  ஸ்வாமிகள்  ஆணையிட்டது போல சாயம்தேவா அழைத்து வந்ததும் அவர்களை  சங்கம் நதியில் குளித்து விட்டு வருமாறு ஸ்வாமிகள் கூறினார். அப்படியே அவர்கள் அனைவரும் குளித்து விட்டு வந்ததும் சாயம்தேவாவின் மூத்த மகனை தமது அருகில் அழைத்த ஸ்வாமிகள் அவர் தலையில் தனது கையை  வைத்து  'நீ பல்லாண்டு காலம் பெரும் செல்வம் பெற்று வளமாக வாழ்ந்து கொண்டு உன் மூதையர்களுக்கும் பெருமை சேர்த்தவண்ணம் இரு' என்றார். இப்படியாக அங்கு சில காலம் வசித்து வந்த சாயம்தேவாவின் குடும்பத்தினர் ஸ்வாமிகளுக்கு சேவை செய்து வந்தார்கள்.  அப்போது பத்ரபாத மாசமும்  வந்தது. ஒரு நாள் ஸ்வாமிகள் சாயம்தேவாவை அழைத்து அவர் குடும்பத்துடன் கருநெல்லி மரத்தை ஆராதித்தவண்ணம் இருந்து கொண்டு  அதே மாதத்தில் அனந்த விரதத்தை அனுஷ்டிக்குமாறு கூறினார். அதற்கு சாயம்தேவா  தம்மைப் பொருத்தவரை  ஸ்வாமிகளே   அனந்தர் என்று கூற ஸ்வாமிகள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்  தான் கூறியதை தட்டாமல் அவரை அந்த விரதத்தை அனுஷ்டிக்குமாறு கூ...