இடுகைகள்

ஜனவரி, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Guru Charithram -11

படம்
  ...........அத்தியாயம் - 5(ii) அதைக்  கேட்ட அவரது பெற்றோர் மனம் வருந்தினார்கள். சுமதிக்கு  தத்தாத்திரேயர் காட்சி தந்தபோது அவளுடைய மகன் எதைக் கூறினாலும் அதை தடுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி இருந்தது மனதில் அழியாமல் இருந்தாலும் தனக்கு மகனாகப் பிறந்து விட்ட ஒருவர் துறவற  நிலைக்கு செல்வதை மனத்தால் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தாள். அவர் இப்படிக் கூறியதும், அவரைக் கட்டிப் பிடித்துக் கொண்டு ''மகனே, எங்கள் வாழ்க்கையில் நல்லதொரு மகனாக வந்து விளக்கேற்றி வைப்பாய். எங்கள் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் தருவாய் என நினைத்தோமே. குருடனாகவும், முடமாகவும் உள்ள உன் சகோதரர்களை எங்கள் காலத்துக்குப் பின்னர் யார் பாதுகாத்து வருவார்கள் என்று நாங்கள் வருந்திக் கொண்டு  இருந்த நேரத்திலே, கவலைப்படாதே, நான் இருக்கிறேன் என்பது போல நீ வந்து என் வயிற்றில் பிறந்து எங்களுக்கு மன அமைதியை தந்தாய். ஆனால் அந்த மகிழ்ச்சி உடைந்து போய்விடும் போலல்லவா இருக்கிறது நீ துறவி  என்ற நிலையில் செல்ல  நினைப்பதும். எங்களுக்கும் வயது ஏறிக் கொண்டே உள்ள நிலையில் உ...

Guru Charithiram -10

படம்
  ...........அத்தியாயம் - 5(i) கலி துவங்கி விட்ட  இந்த வேளையில் நானே அவளது மகனாகப் பிறந்து பூவுலகை  காப்பேன் என மனதில் முடிவு செய்த தத்தாத்திரேயர் அவளுடைய கருப்பையில் சென்று அமர்ந்து கொள்ள முடிவு செய்தார். சுமதியோ தன்னை மறந்து உள்ளே ஓடிச் சென்று தன் கணவர் செய்த சிரார்த்த காரியம் முடியும் வரை அமைதியுடன் இருந்தப் பின் அவரிடம் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினாள்.  நல்ல பாண்டித்தியம் பெற்று இருந்த அப்பலராஜுவுக்கு புரிந்தது அப்படி பிட்ஷை எடுத்து வந்திருந்தவர் தத்தாத்திரேயராகவே  இருந்திருக்க வேண்டும்.  அவர்தான் தன்  பக்தர்களை சோதிக்க இப்படி எல்லாம் தன்னை அடையாளம் காண முடியாதபடி பல்வேறு வேஷங்களில் வந்து நாடகங்களை நடத்துவார் என்று கேள்விப்பட்டு இருந்தார் (இதனால்தானோ என்னவோ தத்தாத்திரேயரின் அவதாரம் எனக் கருதப்படும் சீரடி சாயிபாபாவும் மாறு வேடங்களில் பக்தர்கள் வீடுகளுக்குச் சென்று அவர்களை சோதிக்க பிட்ஷை எடுப்பதுண்டு என்று அவருடைய வாழ்கை வரலாற்றுக் கதைகளில் சில நிகழ்ச்சிகள் காணப்படுகின்றன). மேலும் எவர் ஒருவர் அகால வேளைகளில் பிட்ஷை எடுக்க வ...

Guru Charithram - 9

படம்
  அத்தியாயம் - 5 துர்வாச முனிவர் கொடுத்த சாபத்தினால் விஷ்ணு பகவான் பத்து அவதாரங்களை எடுத்தார். பகீரதன் பெரும் பிரயாசை செய்து கங்கையை பூமிக்கு எடுத்து வந்தார். அந்த செயலை பகிரப் பிரயத்தினம் என்பார்கள்.   இந்த உலகில் தீமைகள் அதிகரித்தபோது அதே போன்ற பகீரதப் பிரயத்தினம் செய்து தீமைகளை தடுத்து நிறுத்தி தர்ம நெறியை நிலைநாட்ட  மனித உருவில் அவதரிக்க முடிவு செய்த தத்தாத்திரேயர் தன்னிடம் வேண்டிக் கொண்ட ஒரு பிராமணப் பெண்மணிக்கு  அவளுடைய மகனாகவே இந்த பூமியில் பிறந்தார். அந்தக் கதையை  இப்போது கூறுகிறேன் கேள்'' என்று கூறிய சித்த முனிவர் அந்தக் கதையைக் கூறத் துவங்கினார். '' துவாபர யுகமும் முடிந்து கலியும் பிறந்தது. அங்காங்கே தர்மநெறி முறைகள் குறையத் துவங்கின என்றாலும் பரவலாக தர்ம நெறி முறைகளை அனுஷ்டித்துக் கொண்டு இருந்தவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். அப்படி வாழ்ந்து கொண்டு இருந்தவர்கள்தான் அப்பலராஜு என்ற தெலுங்கு  பிராமணத் தம்பதியினர். சாஸ்திர நெறிமுறைகளை விட்டு விலகாமல், அனைத்து வேதங்களையும் கற்றறிந்து,  தர்மநெறி முறையில் வாழ்ந்து வந்தவர்கள் அந்த ...

Guru Charithram - 8

படம்
  அத்தியாயம் - 4 சித்த முனிவர் கூறத் துவங்கினார் '' மகனே இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்ட விதமே சுவையானது. அது படைக்கப்பட்டபோது உலகமே பிரளயத்தில் மூழ்கி  இருந்தது.  அப்போது கடலில் ஆதிசேஷன் மீது விஷ்ணு பகவான் படுத்திருந்தார். அவருடையத் தொப்பிள் கொடியில் இருந்து வெளிவந்த பிரும்ம நான்கு பக்கமும் திரும்பிப் பார்த்தபோது அவருக்கு நான்கு முகங்கள் பிறந்தன. அதன் பின் அவர் வேதங்களைப் படைக்க, யுகங்களும் படைக்கப்பட்டன.  அடுத்தடுத்து  காலங்கள், திசைகள்,  பதினான்கு லோகங்கள், பாதாளம், தேவலோகம் என அனைத்தையும் படைத்து விட்டு  சனகா, சனாதனா, சனத்குமரா மற்றும் சனத் சுஜாதா போன்றவர்களையும்   ஏழு முனிவர்களையும் படைத்தார்.   அதன் பின்னர் தன்னையே இரண்டாகப் பிளந்து   கொண்டு வலப் புறத்தில் இருந்து  மனுவையும், இடப்புறத்தில் இருந்து ஷடரூபா என்பவர்களையும் படைக்க அந்த இருவருக்கும் தேவஹுதி என்ற ஒரு பெண் பிறந்தாள். தேவஹுதி என்பவள் மனித குலத்திற்கு  அதிபதியான கர்தபிரஜாபதி எனும் முனிவரை மணந்து கொண்டாள். அவர்களுக்கு ஒன்பதுப் பெண்கள் பிறந்தனர். ப...

Guru Charithram - 7

படம்
  .............அத்தியாயம் -3 (i) மாலை அனுஷ்டானங்களை முடித்துக் கொள்ள நதிக்கரைக்கு  சென்ற  துர்வாச முனிவர் துவாதசி கால நேரம் முடிந்து விடும் என்பதை தெரிந்து கொண்டும் அம்பாரிஸாவை சோதிக்க எண்ணியவர் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்லாமல் தாமதப்படுத்திக் கொண்டு இருக்க அரண்மனையிலோ இன்னும் ஏன்  முனிவரும் வரவில்லை என்பதைக் கண்ட அரசன் தவிக்கலானான். தன்னுடைய வாழ்க்கையில் அத்தனைக் காலமும் துவாதசி கால நேரம் முடிவதற்கு முன்னரே தவறாமல் தன் விரதத்தை முடித்துக் கொண்டு வந்திருந்த மன்னன் சோதனையாக அன்று மாமுனிவர் வரவில்லை என்பதால் விரதத்தை எப்படி முடிப்பது என்பது தெரியாமல் குழம்பினான். வீட்டுக்கு வந்த விருந்தாளி அதுவும் ஒரு மாமுனிவர்  சாப்பிட வந்தால்  அவர் வருவதற்கு முன் தான் உண்டு விட்டு அமர்ந்திருப்பது தவறு என்பதால் மன்னன் தவித்தான். அதே சமயத்தில் விரதத்தையும் துவாதசி கால நேரம் கடக்கும் முன் முடிக்க வேண்டும். மாமுனிவரையும் அவமானப்படுத்துவது போல அவர் வருவதற்கு முன்னர் உணவு உண்ணக் கூடாது.  என்ன செய்வது என யோசித்தவன் தண்ணீர் அருந்துவது உணவு உண்பதற்கு சமம் அல்ல...

Guru Charithiram - 6

படம்
  அத்தியாயம் -3    அவர் கூறியதைக் கேட்டு மனம் மகிழ்ந்து நின்ற நமத்ஹரா அவரிடம் கேட்டார் ''மகாத்மாவே, மாமுனிவரே, உங்களை சந்தித்து இத்தனை விவரங்களை அறிந்து கொண்டதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கே தெரியாத என் குருநாதரை தேடிக் கொண்டு, எங்கு செல்கிறேன் என்பதையும் புரிந்து கொள்ளாமல் சென்று கொண்டு இருக்கும் எனக்கு வழியிலே உங்களை சந்திக்கும் பாக்கியம் கிடைத்ததும் நான் செய்த பெரும் புண்ணியமாகவே இருந்திருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். என் மனதில் உங்களைக் குறித்து ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. ஸ்வாமி, நீங்கள் உண்மையிலேயே யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? உங்கள் பயணத்தின் நோக்கம் என்ன என்பதையெல்லாம் இந்த அபலைக்கு கூற வேண்டும். என்னை உங்களுடைய சீடனாக ஏற்றுக் கொண்டு எனக்கு கருணை புரிய வேண்டும்'' என்று அவரிடம் கேட்டார். கால்களில் விழுந்து வணங்கிய நமத்ஹராவை தூக்கி நிறுத்தினார் அந்த சித்த புருஷர். அவரிடம் கூறினார் ''மகனே, உன்னை சுற்றி இன்னும் பல அற்புதங்கள் நிகழ்வதை நீ இனிக் காணலாம். அதற்குக் காரணம் என்னுடைய குருநாதரே. அவர் அமிர்தம் போன்றவர். மும்மூர்...

Guru Charithiram - 5

படம்
   ............ அத்தியாயம் -2 (iv) தீபிகா எப்படித்தான் சமைத்துப் போட்டாலும் அதில் குறைக் கூறி அதை அவன் மீதே துப்புவார். தீபிகா சாப்பிட அமர்ந்தால் அவர் தட்டின் மீதே காரி உமிழ்வார். ஆனாலும் தீபிகா முகம் சுளிக்காமல் அந்தக் கொடுமைகளை எல்லாம் சகித்துக் கொண்டே அவருக்கு பணிவிடைகளை செய்து வந்தார். சீழ்பிடித்துப் போன கொப்புளங்களில் இருந்து ரத்தம் வடியலாயிற்று. அவற்றையும் தீபிகாவே துடைத்து விட வேண்டியதாயிற்று. இரவெல்லாம் தீபிகா தூங்க முடியாமல் இருக்கும். அதன் காரணம் வலியினால்  அவருடைய குருநாதர் கத்துவதே. இவ்வளவு கஷ்டத்திலும் சேவை செய்து வந்தாலும்  குருநாதருக்கு தீபிகாவின் மீது குறை இருந்து கொண்டே இருந்தது.  அவரைக் வேண்டும் என்றே திட்டித் தீர்ப்பார்.  ஆனாலும் குருவிற்கு செய்து வந்த பணிவிடைகளை தீபிகா எந்த விதத்திலும் குறை வைக்காமல் செய்து வந்தார். காலப்போக்கில் குருநாதரின் கண் பார்வையும் மறைந்தது. முற்றிலும் குருடராகி விட்டார்.  இப்படியாக நாட்கள் நகர்ந்து கொண்டு இருக்கையில் காசியில் அவை அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருந்த காசி விஸ்வநாதர் (சிவ...

Guru Charithiram - 4

படம்
   ............ அத்தியாயம் -2 (iii) குருவின் மகிமை எப்படிப்பட்டது என்பதை இந்தக் கதையின் மூலம் அறிந்து கொள் என்று கூறிய பிரும்மா, கலிக்கு அந்தக் கதையை கூறத் துவங்கினார். '' ஒரு காலத்தில் கோதாவரி நதிக் கரையில் வேத சர்மா என்ற ஒரு பிராமணர் வாழ்ந்து வந்தார். அவரை குருவாக ஏற்றுக்கொண்ட   பல சீடர்கள்  அவருக்கு இருந்தார்கள். அவர் நல்ல பாண்டித்தியம் பெற்றவர். அப்போதிருந்த மாமுனிவர்களில் மேன்மையானவர். அவருடைய சீடர்களில் தீபிகா என்ற சீடன் குருவிடம் அபார பக்தி கொண்டவராக இருந்தார். குருவுக்கு தேவையான அனைத்து பணிவிடைகளையும் செய்தவண்ணம் இருந்தார். இப்படியாக பல காலம் ஓடியது. ஒருநாள் வேத சர்மா தனது அனைத்து சீடர்களையும் அழைத்து அவர்களிடம் கூறினார் ''பிள்ளைகளே, நீங்கள் அனைவரும் எனக்கு பக்தி பூர்வமாக பணிவிடை செய்வதைக் கண்டு ஆனந்தம் அடைகிறேன்.  நான் மரணம் அடைவதற்கு முன்னால் உங்களுக்கு இந்த சம்சார பந்தத்தில் இருந்து விடுதலை கொடுத்து முக்தி தர விரும்புகிறேன். ஆனால் ஆயிரமாயிரம் வருடங்களுக்கு முன்னால் ஒரு பிறவியில் நான் செய்திருந்த பாவங்கள் என்னை இந்த ஜென்மத்தில் தண்...

Guru Charithram -3

படம்
   ............ அத்தியாயம் -2(ii) குரு தத்துவத்தின் விளக்கத்தை தமக்குக் கூறுமாறு கேட்ட நமத்ஹரகாவுக்கு சித்த புருஷர் கூறலானார் ''மகனே, நான் கூறுவதை காது கொடுத்து நன்றாக கேட்டுக் கொள். உன் அனைத்து சந்தேகங்களும் விலகும்''. இப்படியாக கூறி விட்டு கதையை தொடர்ந்தார் ''பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டது. அப்போது விஷ்ணுவையும், பிரும்மாவையும் பரமாத்மன் படைத்தார். விஷ்ணு ஒரு கடலில் பெரிய இலையில் படுத்துக் கொண்டு இருந்தபோது (அந்த நிலையில்தான் விஷ்ணு படைக்கப்பட்டாராம்) அவர் வயிற்றில் இருந்து ஒரு தொப்பிள் கொடி மேலெழுந்து வந்து நின்றது. அதில் பிரும்மா அமர்ந்திருந்தார் (பிரும்மா இப்படித்தான் படைக்கப்பட்டாராம்) . 'இனி வராஹ கல்பா எனும் புதிய உலகைப் படைப்பாய்' என பிரும்மாவுக்கு பரபிரும்மன் ஆணை பிறப்பிக்க, பிரும்மாவும் முதலில் நான்கு பக்கங்களிலும் என்னென்ன உள்ளது திரும்பிப் பார்க்க அவருக்கு நான்கு முகங்கள் முளைத்தன. அவற்றில் இருந்து நான்கு வேதங்கள் வெளி வந்தன. அவை வெளி வந்தவுடன் பிரும்மாவுக்கு தலை கனம் ஏற்பட்டது. என்னால் அல்...

Guru Charithram -2

படம்
அத்தியாயம் - 2 அற்புதமான கனவில் மிதந்து கொண்டு இருந்த நமத்ஹரகா சடாலென விழித்து எழுந்தார்.  தான் கண்டது உண்மையிலேயே கனவா அல்லது நனவா என்பதை அவரால் அறிந்து கொள்ளமுடியாத அளவுக்கு அவர் மனதில் மகிழ்ச்சி நிலவி இருந்தது. இனி நிச்சயமாக  தனது குருநாதரை விரைவில் சந்திப்போம் என்ற மன உறுதி அவர் மனதில் விழுந்தது. ஆகவே முழித்து எழுந்தவர் அருகில் இருந்த கிணற்றில் இருந்து நீரை எடுத்து, முகம் மற்றும் கை கால்களை அலம்பிக் கொண்டப் பின் அங்கிருந்து மீண்டும் நடையை தொடர்ந்தார். அப்படி சென்று கொண்டு இருந்தவர் திடீர் என சற்று தூரத்தில் ஒரு மகான் போன்ற ஒருவர் சென்று கொண்டு இருப்பதைக் கண்டார்.   பின்னால் இருந்து பார்த்தபோது அந்த மனிதர் தன கனவிலே வந்த குருவின் சாயலில் இருப்பதைக் கண்டார். ஒருவேளை அவர்தான் தான் தூங்கிக் கொண்டு இருந்தபோது தன்னுடன் பேசியவரோ என நினைத்தவர் தூரத்தில் சென்று கொண்டு இருந்த  அவரைக் கண்டதும் மனதில் மகிழ்ச்சிப் பொங்க ஓடோடி அந்த மனிதருக்கு அருகில் சென்று பார்த்தால், அமைதியான முகமும் ஆறுதல் அளிக்கும்  கண்களையும்  கொண்ட அந்த முனிவர் தன்  ...

Guru Charithram -1

படம்
தத்தாத்திரேய அவதாரங்களாக பல மகான்கள் அவதரித்து உள்ளார்கள். மும்மூர்த்திகளின் அவதாரமான தத்தாத்திரேயர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்  இந்த பூமியில் ஒரு அவதூதராக அவதரித்தார். அவர் அதி சக்தி பெற்றவர். அவரைப் பற்றி விவரங்கள் மற்றும் அவரை ஆராதிப்பது போன்றவை மராட்டிய மற்றும் கர்நாடக மானிலங்களில் மட்டுமே மிக அதிகமாக உள்ளது. அதற்குக் காரணமும் இந்த இரண்டு மானிலங்களில் மட்டுமே தத்தாத்திரேய அவதாரங்களாக பல மகான்கள் இருந்துள்ளார்கள் என்பதே. எங்கெல்லாம் மராட்டிய மக்கள் அதிகம் வசிப்பார்களோ அங்கெல்லாம் தத்தர் வழிபாடு அதிகம் உள்ளன. கால ஓட்டத்தில் மெல்ல மெல்ல தத்தர் வழிபாடும், அவருடைய சக்தியும் பிற மானிலங்களிலும் பரவலாயிற்று.  'தத்த பரம்பரா' என்பதில் ஸ்ரீபாதவல்லபா மற்றும் ஸ்ரீ ந்ருசிம்ம சரஸ்வதி ஆகிய இரு சத்புருஷர்களும் மிக முக்கியமாக மற்றும் மேன்மையானவர்களாக கருதப்படுபவர்கள். ஏன் ஷீரடி சாயி பாபா கூட தத்தரின் அவதாரமே என்கிறார்கள்.  இந்த நிலையில் மக்கள் மிக அதிகமாக போற்றிப் படிக்கும்  குரு போதனைகள் அதாவது 'குருசரிதம்' என்ற புத்தகம் தத்தரின் பக்தர்களினால் வேத ப...

siththargal

படம்
சித்தர்களைப் பற்றி  தெரியாத தகவல்கள்.....விளங்காத தத்துவம் சாந்திப்பிரியா சில நாட்களுக்கு முன்னர் முன் பின் தெரியாத ஒரு அன்பர் என்னுடன் பேசிக் கொண்டு இருக்கையில் புதுவையில் உள்ள மகான்களைப் பற்றிக் கூறிக் கொண்டு இருந்தார். இடையே அவர் பழனி சித்தர் என்ற ஒரு மகானைக் குறித்தும் குறிப்பிட்டார். நம்மை அறியாமலேயே பல சித்தர்கள் மனித உருவங்களில் நடமாடுவதாகவும், அவர்கள் தம்மை சில காரணங்களுக்காக வெளிப்படுத்திக் கொள்வது இல்லை என்றும், ஆனால் அவர்களையும் மீறி அவர்களது சக்தி வெளிப்படும்போது மட்டுமே அவர்கள் சித்த புருஷர்கள், அமானுஷ்ய சக்தி பெற்றவர்கள் என்பது தெரிய வருவதாகவும் கூறினார்.  அவர் மேலும் சில விஷயங்களைக் கூறினார். அவை எனக்கு தெரிந்திராதவை. இப்படித்தான் நான் பல புதிய விஷயங்களை தெரிந்து கொண்டு வரலாற்றிலும்  உள்ளனவா என தேடிய பின் எழுதுவதை வழக்கமாக கொண்டுள்ளேன்.   ஆகவே நான் கேட்டறிந்தவற்றை  மற்றவர்களும் அறிந்து கொள்ளட்டும், அதில் அவற்றைக் குறித்த மேலும் பல தகவல்கள் கிடைக்கலாம் என்றே அவற்றை வெளியிடுகிறேன். சித்தர்களைக் குறித்து  நான் பலரிடமும் எண்ணங்களை ப...