இடுகைகள்

செப்டம்பர், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Gubera Pooja

படம்
  பண விரயங்கள் நீங்கி செல்வம்  நிலைக்க ஒரு சிறிய பூஜை முறை      சாந்திப்பிரியா   ஒவ்வொருவருக்கும் வரவுக்கு மீறிய செலவும் ஏற்படுகிறது. அதுவும் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கும் விலைவாசிகள், குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவச் செலவு என அனைத்திற்கும் பணம் செலவு ஆகிக் கொண்டே இருக்கும்போது நமக்கு லஷ்மி தேவி ஏன் தங்குவது இல்லை என்ற விரக்தி ஏற்படுவது இயற்கையாக இருக்கும். ஆகவே லஷ்மி தேவியை திருப்திப்படுத்தி நம் கையில் நாலு காசு  தங்க வேண்டும் என நினைப்பவர்கள் செய்ய வேண்டிய மிக சாதாரண பூஜை இது. இது பூஜை என்று  கூற முடியாதது. ஒரு விதமான விரதம் அல்லது வேண்டுதல் என்று கூடக் கூறலாம். இதெல்லாம் பாட்டி வைத்தியம் போல நம் முன்னோர்கள் அந்த காலத்திலே செய்து வந்தவை. இந்த வழிமுறை இப்போது மிக சாதாரணமாக தோன்றக் கூடும். ஆனால் அந்த காலத்து வழிமுறைகள் காலத்தால் அழியாதவை. உண்மையில் நன்மை தரக்கூடியவை என்பதை மட்டுமே நம்மால் கூற இயலும். அதற்கு ஒருவர் செய்யக் கூடிய சின்ன வழிமுறை இது.  ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று காலையில் குளித்தப் பின...

Pattaabiraman Kavithaigal -3

படம்
  எழுதியவர் Pattabi Raman <vijayakoti33@gmail.com> தலைஎழுத்து மாற  ராம நாமம் சொல்லுங்கள் தலைஎழுத்து மாற ராம நாமம் என்னும் இரண்டெழுத்தை சொல்லுங்கள் முற்றும் துறந்தஅத்வைதிகளே ராமச்சந்திர மூர்த்தியின் முகவழகில் சொக்கி போய் அவன் தரிசனம் கண்டு விவரிக்கவொண்ணா பேரின்பத்தில் மூழ்கிவிட்டனர். அழியா பேரின்பம் பெற்றனர். பிரம்மத்தை உணர்ந்தவர்களே அந்த பிரம்மமே உருவெடுத்து வந்ததை கண்டு அதன் மீது பக்தி கொண்டு அதன் சுவையை அனுபவித்து அவனோடு கலந்துவிட்டனர். நாரதரின் அம்சமாக அவதரித்த புரந்தர தாசர் ராம மந்திரம் இருக்க ஏன் மற்ற மந்திரங்களை நாடி செல்கிறீர்கள் என்றார். ராம நாமே கற்கண்டு ரசமறியாதவன் கல்குண்டு என்றார் அவர் ராம நாம பாயசகே. என்றார் மேலும் அவர் கற்பார் ராமபிரானைஅல்லால் மற்றும் கற்பரோ என்றார் கம்பநாட்டாழ்வார். ஆபத்திலே கைகொடுப்பதும், ஆபத்துக்களே வராமல் காப்பதும் அளவில்லா ஆனந்தத்தை அளிப்பதும், அனைத்து அயிஸ்வர்யங்களை அளிப்பதும் இந்த உலகை காப்பதும் அந்த ராம நாமமே காசியில் மரிப்பவர்க்கு காசி விஸ்வநாதனே முக்தி அளிக்கும் ராம நாமத்த...

Mayil Ravanan - 20

படம்
மயில் ராவணன் மாய உருவங்களை எடுத்து கடைசி கட்டமாக சிவபெருமான் தனக்களித்திருந்த மந்திர சக்தி வாய்ந்த தன்னுடைய அஸ்திரங்களை எல்லாம் வீசத் துவங்கினான். அனுமானும் சளைக்கவில்லை, அவரும் பதிலுக்கு தன்னிடம் இருந்த ஆயுதங்களுக்கு தூப தீப ஆராதனைக் காட்டி இன்னொரு சிவாஸ்திரத்தையும் கஜாஸ்திரத்தையும் செலுத்தி மயில் ராவணனின் அனைத்து அஸ்திரங்களையும் தவிடு பொடியாக்கினார். இப்படியாக இருவரும் மாறி மாறி பல நாழிகையாக அஸ்திரங்களை ஏவிக் கொண்டிருக்க இருவரும் களைத்தார்கள். அப்போது அனுமானின் காதில் ஆகாசவாணி கூறிற்று 'வாயு புத்திரனே இனியும் தாமதிக்காதே அவன் தப்பிக்கும் முன் அவனை தீர்த்துக் கட்டு' . அவ்வளவுதான் அதைக் கேட்ட அனுமானின் இருபுஜங்களும் துடி துடிக்க, பற்களை நரனரவெனக் கடித்துக் கொண்டு மயில் ராவணன் அமர்ந்திருந்த தேருக்கு அருகில் சென்று அதன் மீது ஏறி அதை அப்படியே கீழே தள்ள சுக்கு நூறாக பொடிப்பொடியாக்க தேரில் இருந்த மயில் ராவணன் கீழே விழுந்தான். அதை அவன் சற்றும் எதிர்பாராத நிலையில் இருந்தபோது தாமதிக்காமல் அவன் மீது தன் காலை வைத்து அவனை பூமியோடு அழுத்தி தன் விஸ்வரூபத்தை எடுத்து அவன் உயிர் நிலை...

Mayil Ravanan -19

படம்
'இதென்னடா மீண்டும் அவனைக் காணோம் . எங்கே மாயமாகி விட்டான்?' என எண்ணியவாறு அனுமார் அவனைத் தேடத் துவங்க தூரத்தில் தெரிந்த ஒரு வனத்தில் சில காரியங்கள் நடைபெறுவதைப் பார்த்தார். ஒரு பெரிய ஆலமரம் தெரிந்தது. அதன் அடியில் பத்து பதினைந்து புரோகிதர் போன்ற உருவில் இருந்த ராக்ஷச பிராம்மணர்கள் சென்று கொண்டு இருந்தார்கள். கையில் பூக்கூடை, எண்ணை, நெய், சமித்துக்கள், சின்ன சின்ன மரக்கட்டைகள் என அனைத்தையும் எடுத்துக் கொண்டு அந்த மரத்தில் அருகில் இருந்த பொந்துக்குள் அவசரமவசரமாக நுழைவதைக் கண்டார். 'ஓஹோ...எதோ விசித்திரம் அங்கு நடக்குது. ...அதுவும் மயில் ராவணனின் அரண்மனைக்கருகில் அவனுக்கு தெரியாமல் நடக்க இயலுமா?' என நினைத்தவர் தன்னை சிறு பிராணியாகிக் கொண்டு தானும் ஓடோடிச் சென்று அந்த பொந்துக்குள் என்ன நடக்கிறதெனப் பார்க்கலானார். அத பொந்துக்குள் சில யாக காரியங்கள் நடந்து கொண்டிருந்ததைக் கண்டார். முக்கோண வடியில் யாக குண்டம். யாக குண்டத்தின் அனைத்து மூலையிலும் எருமை மாட்டின் கபாலம் தொங்கியது. யாக குண்டத்தில் நெருப்பு கொழுந்து விட்டு எரிகிறது. கபாலத்தின் மூலம் நெய்யும் ஊற்றப்பட்டுக...

Mayil Ravanan - 18

படம்
அவள் கூறியதைக் கேட்டுக் கொண்ட அனுமான் 'இந்த செய்தி மட்டுமே போதும் அம்மணி...இது எனக்கு உதவியா இருக்கும். அந்த மலையும் எங்குள்ளது என்றாவது தெரியுமா?' என்று கேட்க அவளும் அது உள்ள திசையைக் கூறி அதன் மீது ஒரு வெள்ளி மண்டபம் இருக்கும். அதுவே அந்த மலை என்பதின் அடயாளம்' என்றாள். அனுமானும் அதைக் கேட்டு தாமதிக்காமல் உடனடியாக யுத்தகளத்துக்குச் சென்றார். அங்கு மயில் ராவணன் அனுமானை தேடிக் கொண்டு இருந்தான். அவரைக் கண்டதும் அவன் கூவினான் 'ஹே வானரமே, உன்னைத்தான் நான் இத்தனை நேரமாகவும் தேடிக் கொண்டிருக்கிறேன். நீ எங்கே சென்று ஒளிந்து கொண்டாய் ? என் மாயத்தைப் பார்த்து பயந்து ஓடி விட்டாயா? வா....உன்னை எமலோகத்துக்கு அனுப்ப ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறேன். சீக்கிரம் வா...' என சூளுரைத்தான். அவன் உயிர் நிலை எங்குள்ளது என்பதை அறிந்து கொண்டு விட்ட அனுமாரோ முன்னைவிட அதிக உற்சாகத்தோடு யுத்தம் செய்யக் கிளம்பினார். 'வாருமையா ராட்சசப் பதரே, உம்மை வதைக்கவே நானிங்கு வந்துள்ளேன். யுத்தம் செய்வீர்' எனக் கொக்கரித்தபடி யுத்தம் செய்து கொண்டே மெல்ல மெல்ல மயில் ராவணன் உயிர் நிலை இருந்த மலை...

Mayil Ravanan - 17

படம்
குதிரைகள் தடதடென நடக்க, படையினர் படபடவென குதித்தோடிவர ........ஹூ....ஹா... ஹோய்....ஹோய்...என சப்தமிட்டபடி பல்வேறு ஜனங்களும் சேர்ந்தோடிவர மயில் ராவணன் மழைபோல விட்ட அம்புகளையும் அஸ்திரங்களையும் நொடிப் பொழுதில் அனுமன் பொடிப்பொடியாக்கி விட மயில் ராவணன் யோசனை செய்யலானான் 'அடடா...என் பத்தினி வர்ணமாலி அன்று சொன்னது நடந்து விடும் போலிருக்கே. நான்தான் தப்பு செய்துட்டேனோ ? அனாவசியமா அத்தனை சேனையும் இழந்து தசமுக ராவணனைப் போலாகி விட்டேனோ? இவனை எப்படி ஜெயிப்பது? எத்தனை அஸ்திரமானாலும் அஸ்க், புஸ்க் என்று அடித்து நொறுக்குறானே' இது மயில் ராவணன் மனதிலே வந்த கிலி . யுத்தம் தொடர அனுமான் வந்து மயில் ராவணனின் முதுகிலே தனது இரண்டு கை முஷ்டியினாலும் பலமாகத் தாக்கினார். அடுத்தகணம் அதே குத்து தன் முதுகிலும் விழுதே என அனுமார் திரும்பினால் அங்கே திடகார்த்தமாக அக்ரோஷத்துடனே மயில் ராவணன் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தார். இரண்டு பேரும் மாறி மாறி அடித்துக் கொண்டே இருக்க அனுமார் மயில் ராவணனை கீழே தள்ளி கொன்று சுக்குநூறா அவன் உடலைக் கிழித்து நாலாபக்கமும் சதைகளை வீசி எறிந்துவிட்டு 'அப்படா ஒரு...

Mayil Ravanan -16

படம்
இப்படியாக அனுமார் ஒரு பக்கத்தில் வேலைகளை செய்து கொண்டிருக்க, இன்னொர் பக்கம் அனுமாரிடம் இருந்து தப்பி ஓடிச் சென்ற கடகன் ஓடோடிச் சென்று மயில் ராவணனின் இருப்பிடத்தை அடைந்தான். மயில் ராவணனின் அரண்மனைக்கு வந்தபோது அங்கே பன்னிரண்டாயிரம் கோடி அரக்கர்கள் ஆயுதங்களை தமக்கு தலையணி போல வைத்துக் கொண்டு உறங்குவதைக் கண்ட கடகன் அனைவரையும் சப்தம் போட்டு எழுப்பினான். 'அசுரர்களே... அனைவரும் எழுந்திருங்கள். அந்த வானரம் வந்து விட்டால் உங்கள் அனைவரையும் நொடியில் துவம்சம் செய்திடும்' என உரக்கக் கத்தியவாறே, 'சுவாமி...சுவாமி...எழுந்திரும். உமக்கொரு முக்கியமான விஷயம் கொண்டு வந்திருக்கேன். அதைக் கேட்டாலே உமக்கு தலையே சுற்றும் ஐயா' எனக் கூவிக்கொண்டே மயில் ராவணனின் அரண்மனையில் புகுந்து அவனுடைய அறைக்கு முன்னாலே சென்று நின்று கொண்டான். அங்கே மயில் ராவணன் தனது மனைவியுடன் உல்லாசமாக இருந்து கொண்டிருந்த வேளையில் அங்கு சென்ற கடகன் படபடவென அவன் அறைக் கதவைத் தட்டி அறைக்குள்ளிருந்து எழுந்து வந்த மயில் ராவணனிடம் நடந்தனைத்தையும் விலாவாரியாகக் கூறினான். அதைக் கேட்டு வெகுண்டெழுந்த மயில் ராவணனை ஆஸ்வாசப்ப...

Mayil Ravanan - 15

படம்
இதெல்லாம் அரண்மனைக்கு வெளியே நடந்து கொண்டிருந்தபோது அதேதும் தெரியாத மயில் ராவணன் அதி பாதாள லோகத்தில் தன் மனைவியுடன் அதி உல்லாசத்தில் இருந்தான். அவன் மனைவியிடம் கூறிக் கொண்டிருந்தான் 'அடியே காமுகி, இப்பத்தான் நான் என் தங்கை தூரதண்டியை பூஜைக்கு தண்ணீர் கொண்டு வர அனுப்பி விட்டு வந்துள்ளேன். அவள் வர இன்னும் ரெண்டு ஜாமமாகும். அதற்குள் நான் உன்னோடு லீலைகளை செய்துட்டு, குளித்துவிட்டு பூஜைக்கு தயாராகணும். அடியே என் செல்லக் கிளியே அருகில் வந்து அமருடி' என மனைவியுடன் உல்லாசமாக இருந்து கொண்டிருந்தான். ராட்ஷசர்களை துவம்சம் செய்தப் பின் அங்கே அனுமார் காளி கோவிலுக்குச் சென்று பார்த்தால் அந்தக் கதவும் மூடி இருந்தது. அனைத்திடங்களிலும் இருந்தவர்களை துவம்சம் செய்து மரண யாத்திரைக்கு அனுப்பி விட்டதினால் அங்கு அக்கம் பக்கம் கூட சப்தம் எதுவும் இல்லை. கூப்பிட்ட குரலுக்கு ஓடி வர யாரும் கூட இல்லை. மயில் ராவணனும் மனைவியுடன் உல்லாசம்  செய்த பிறகு பூஜைக்குத் தயாராக்கிக் கொள்ள அங்கிருந்து பல காத தூரத்தில் அடி பாதாளத்தில் எந்த சத்தமுமே கேட்காத தூரத்தில் இருந்த குளம் ஒன்றில் குளிக்கச் சென்று விட...

Mayil Ravanan- 14

படம்
'யாரவன் வருகிறான், உள்ளே ஓடுடி பெண்ணே... சீக்கிரமா ஓடி வந்துடுடி 'எனக் கத்திக் கொண்டே பாய்ந்தது பாய்ந்து ராக்ஷசர்கள் வாயிலுக்கு வருவதற்கு முன் தூரதண்டியும் அனுமான் கூறியது போலவே குடத்துடன் இருந்த மாவிலைக் கொத்தோடு நுழை வாயிலின் உள்ளே தடுக்கி விழுவது போல பாசாங்கு செய்தாள். அவ்வளவுதான். அரண்மனைக்கு உள்ளே சென்று விழுந்த மாவிலைக் கொத்தில் சிறு பூச்சியாக இருந்த அனுமானும் மாவிலையில் இருந்து வெளியில் குதித்து, தன் விஸ்வரூபத்தை எடுத்து அதி பலம் கொண்டு அத்தனை வீரர்களையும் அடித்து, துவைத்து துவம்சம் செய்து கொன்றார். பாதாளத்திலே நடந்ததையெல்லாம் ஆனந்ததுடனே வானத்தில் இருந்த தேவர்கள் பிரமித்தபடி பார்த்து, பார்த்து பரவசம் அடைந்து மகிழ்ந்தார்கள். ' ராம லஷ்மணர்களை அனுமான் காப்பாற்றி விடுவார்' என்ற நம்பிக்கை அவர்களுக்கெல்லாம் இப்போ வந்து விட்டது. அதையெல்லாம் பார்த்த தூரதண்டி பெரும் மகிழ்ச்சி அடைந்து 'ஐயா அனுமனே இப்போ நீங்கள் செய்ய வேண்டியது கடகன் மற்றும் விருசிமுகன் என்ற இரண்டு அசுரர்களையும் அழிக்க வேண்டும். அவர்களே காளி கோவிலுக்கு காவலில் உள்ள பெரும் தளபதிகள். அவர்களை வதம...

Mayil Ravanan - 13

படம்
  தூரதண்டி தொடர்ந்து கூறலானாள் 'நீலமேகன் எனக்கு பிறந்தபோது மயில் ராவணனுக்கு ரூபவதி என்ற பெண்ணும் பிறந்தாள். ஆகவே வயதுக்கு வந்ததும் ரூபவதிக்கும் என் பிள்ளை நீலமேகனுக்கும் கல்யாணம் செய்து வைக்கலாமென ஏற்பாடு செய்தான்.  கலியாணம் செய்ய தேதி குறிக்கும்போது அசிரி ஒன்று கத்தியது ' மூடனாகப் பிறந்து விட்ட மயில் ராவணா ....... நடத்து ....இருவருக்கும் திருமணத்தை நடத்து. அந்த நீலமேகனே இந்த பாதாள இலங்கைக்கு அதிபதியாகி நிலையா இருக்கப் போறான். நீயும் வதமாகப் போகிறாய்.. இதை மனதில் வைத்து திருமணத்தை விரைவாகவே நடத்து' என்று கூறிவிட்டு சென்று விட்டது. அதனால திருமண  எண்ணத்தை நிறுத்திட்டான். எங்கள அரண்மணயிலேந்தும் துரத்திட்டான். எமக்கு போறாத காலம். மயில் ராவணன் ராம லஷ்மணர்களை தூக்கி வந்தபோதும் வழியிலே இன்னொரு ஆகாசவாணியும் கூறிற்றாம் 'அடே பாதகா, மயில் ராவணா, நீயெல்லாம் செய்வது நல்லதல்லடா.... வைகுண்டநாதர் அவதாரங்களை களவாடிக் கொண்டு பெட்டியில் வைத்துக் கொண்டு போகிறாயே, உனக்கு அழிவு காலம் வந்து விட்டதடா....நீர் அழிவது நிச்சயம். ..போ...போ....நீர் இத்தனை சிரமப்பட்டு ராவணனுக்காக இதை செய்...

Mayil Ravanan - 12

படம்
அவள் ஏன் அப்படி அழுது கொண்டிருக்கிறாள் என்பது அனுமானுக்கு புரியவில்லை. ஆனால் நடப்பது அனைத்தையும்  மரத்தின் மீதிருந்த அனுமார் பார்த்துக் கொண்டே இருந்தார். அவர் கவலையெல்லாம் கோட்டைக்கு உள்ளே எப்படிப் போவது? உள்ளே போனால்தானே வெளியில் உள்ள அசுரர்களை அழிக்க முடியும். அவர் மனதுக்குப் புரிந்தது வெளியில் வந்து புலம்பிக் கொண்டிருக்கும் பெண்மணி கெட்டவள் அல்ல என்பது. 'இவள் மூலமாவது நமக்கு ராம லஷ்மணர்கள் சிறை வைக்கப்பட்டு உள்ள இடம் தெரியவாராதோ. இவளை நம் கைக்குள் போட்டுக் கொண்டு காரியத்தை முடிக்கலாமே' என எண்ணிக் கொண்டு மரத்தின் மீதிருந்து ஆசிரி கூறுவது போல அவளுக்கு மட்டுமே கேட்கும்படி கூறலானார். 'இங்கே பாரும் பெண்ணே....அபலைப் பெண்ணே, நீ ஏன் வருந்தி அழுகிறாய்? அழுதழுது ஏன் வாடி வதங்குறே? உன்னையும் சேத்தே உன் மகனையும் காப்பாட்டறலாம். அதற்கும் உபாயமுள்ளது. அதுக்கும் நீ சரீன்னு சொன்னா அதையும் நாம் செய்வோம். ஆனா அதுக்கு உன் உதவியும் தேவையாகுமே' என்றார். 'இதென்ன மனிதக் குரலா இருக்குதே. ஒருவேளை மயில் ராவணனே என்னை சோதிக்க இப்படி ஒரு நாடகம் ஆடுவானோ? சரி நமக்கேன் வம்பு. தண்ணீ க...

Mayil Ravanan - 11

படம்
பவழக் கோட்டைக்கு உள்ளே இருந்து வெளியே வந்த ராக்ஷசர்கள் எல்லாமே சரியாக இருக்கிறதா எனப் பார்த்தப் பின் தாரை தம்பட்டங்களை அடித்து வெளியில் காவலில் இருந்தவர்களுக்கு எச்சரிக்கை தந்தப் பின் மீண்டும் கோட்டைக்குள் சென்று விட்டார்கள். அவர்கள் சென்றப் பின் யாருமில்லை என்பதை அறிந்து கொண்டவுடன் அனுமார் நந்தவனத்தில் இருந்த மரத்தில் இருந்து கீழிறங்கி வந்து நாலாபுறமும் பார்த்தார்.    அனுமான் நின்றிருந்த இருந்த இடங்களேல்லாமே மந்திர சக்தியால் கட்டப்பட்டு இருந்ததால் அவருடைய பலமும் அங்கே குறைந்து இருந்தது. அதே சமயத்தில் மயில் ராவணன் தன் சேனைகளுக்கெல்லாம் சக்தி உள்ள தாயத்தைக் கட்டி இருந்ததால் அவர்களுடைய பலம் குன்றவில்லை. ஆனால் அந்த தாயத்தில்லாத யாரேனும் இருந்தால் அவர்களது பலத்தில் பாதியும் குறைந்திடும். அதனால்தான் இத்தனைக் கட்டுக் காவலை மீறி எப்படி உள்ளே செல்வது என்ற யோசனையில் அனுமான் இருந்தபோது அரண்மனைக்குள்ளே ஒரு முக்கியமான நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அரண்மனையிலே மனைவியோடு படுத்திருந்து நித்திரையில் இருந்த மயில் ராவணன் 'நேரமாச்சே' என நினைத்துக் கொண்டு அவசரம் அவசரமா...

Mayil Ravanan - 10

படம்
வேற வழியே இல்லை என்பதால் அனுமான் மச்சவல்லபனை மயக்கமடையச் செய்த பின்னால் அடுத்து அவன் காவல் காத்திருந்த கோட்டைக்குள் குதிக்க அந்தக் கோட்டையோ செங்கலினால் கட்டப்பட்டு இருந்ததைக் கண்டார்.  'அட....இது வெறும் வெறும் செங்கல் கோட்டைத்தானே இது என நினைத்து அதன் அருகில் சென்றால் அதை சுற்றி  நாலாயிரம் லட்ஷ வீரர்கள் காவலில் இருந்ததைக் கண்டார். அத்தனை பேரையும் ஒரேடியாகக் கண்ட அனுமானுக்கு வேர்த்து வியர்த்தது. 'இதென்னடா, இத்தனை பேரையும் சமாளித்து உள்ளே போவதற்குள் காரியம் கேட்டுடுமே' என நினைத்தவர் கண்ணில் அரண்மனை உயரத்துக்கு அங்கிருந்த பிரும்மாண்டமான பெரிய மரம் ஒன்று கண்ணில் பட்டது. 'இது போதும் நமக்கு' என எண்ணிக் கொண்டே விஸ்வரூபம் எடுத்து அந்த மரத்தை வேரோடு பிடுங்கி அசுரர்கள் சுதாரிக்கும் முன்னேயே அவர்களை அதைக் கொண்டு அவர்களை  தாக்கத் துவங்க அங்கிருந்த பாதி அசுரர்களும் அடுத்தகணமே மாய்ந்து வீழ்ந்தார்கள். மிச்சமிருந்த அசுரர்கள் வாளையும், கதையையும், ஈட்டியையும் கொண்டு வந்து அனுமானை தாக்கத் துவங்க அத்தனை பேரையும் அந்த மரத்தாலேயே நாலு பக்கமும் தாக்கிக் தாக்கி அழித்தார். அவர்களை ...

Mayil Ravanan - 9

படம்
'என் பிள்ளாய்....நான் உனக்கொரு சேதி சொல்றேன். கேளும். நான் வணங்கும் நாயகனின் மனைவியை பத்து தலை ராவணன் தூக்கிப் போய் சிறையில்  வைத்தான்.  அவளை விடுதலை செய்து அழைத்துப் போக ராமன் தன் சகோதரன் லஷ்மணனையும் சுக்ரீவன் சேனையையும் அழைத்து வந்து இலங்கையில் யுத்தம் செய்தார். அதிலே பத்து தலை ராவணனின் சைனியங்கள் நிர்மூலமாகி, அவன் சந்ததியினரும் அழிந்து போக, அவனும் தனது தாயாதியான மயில் ராவணனின் உதவியை நாடினான். மயில் ராவணனும் தன் தாயாதிக்கு அநீதி வந்துதுட்டதென நினைத்து ராம லஷ்மணர்களை கொன்று பழிவாங்குவதாக சபதமும் செய்து, அவர்களை வஞ்சகமாக இங்கே கொண்டு வந்துட்டான். அவர்களை காளிக்கும் பலி தரப்போறானாம். நியாயமில்லாத, நேர்மை இல்லாத பத்து தலை ராவணனுக்காக அவன் தாயாதி மயில் ராவணன் ராம லஷ்மணர்களை கொல்வதும் நியாயமில்லையே. ஒருவன் மனைவியை இன்னொருத்தன்  அபகரிப்பது தர்ம சாஸ்திரத்திலுண்டா? நீரே சொல்லும் பிள்ளாய்.........தர்மம் பேசும் நீரே சொல்லும்.  அதனால்தான் உள்ளே போய் மயில் ராவணனைக் கொன்று ராம லஷ்மணர்களை மீட்கோணும் என்று நான் வந்திருக்க என்னை தடுப்பது உனக்கே  நியாயமாப்படுதா ' என்றார...

Mayil Ravanan - 8

படம்
அப்படீன்னா அவன் யார்? மச்சவல்லபன் தன்னைப் பற்றி சொல்லலானான் 'வானவதாரப் புருஷரே, உம்மைப் பார்த்தால் பரிதாபம் அடைகிறேன். உம்மைக் கொல்ல என் மனதும் இடம் கொடுக்கலே. அதற்கான காரணம் எனக்கும் தெரியலே. என் அப்பன் யார் என்று கேட்கிறீரே, அதையும் சொல்றேன். செவி மடக்கிக் கேளும். என் தகப்பன் மும்மூர்த்திகளையும் ஒத்த பலமுடையவர். சுத்த வீரர், பராக்கிரமசாலி. ராமநாமத்தை தவிர வேறெதுவும் சொல்லாதவர்  என்று கேள்வி. அவர் பெயரை அனுமன் என்கிறார்கள். என்னோட தாயாரும் திமிதி என்ற மீன் ஆவாள். அவள் இந்த சமுத்திரத்துலேதான் இருந்தாள். இப்ப எங்கேன்னு தெரியலே. என் பாட்டனார் வாயு பகவான் என்று சொல்லி இருக்கா. என்னை மச்சவல்லபன் என்று அழைப்பார்கள்' மச்சவல்லபன் கூறியதைக் கேட்ட அனுமார் திடுக்கிட்டார் 'அய்யய்யோ..., இதென்னடா கூத்து? இதென்னடா கோலம்? நான் இவனோட அப்பனா? என் அப்பன் வாயுவும் இவனுக்கு பாட்டனா? இதென்ன கூத்து? இதென்ன புதுக்கதை? இல்லை........இருக்காது.......... என் அப்பனுக்கு என்னைப் போலவே இன்னொரு பிள்ளையும் இருக்கானா? அவர் பெயரும் அனுமனா? நான் மட்டும்தானே அனுமார்!!!! எங்கிருந்தையா வந்தார் இன்னொரு...

Mayil Ravanan - 7

படம்
நிலைமை அங்கே அப்படியெல்லாமிருக்க ராம லஷ்மணர்களையும் அவரது சைனியங்களையும் தனது வாலினால் சுற்றிக் கட்டி இருந்த கோட்டையில் பாதுகாப்பாக வைத்திருந்த அனுமாருக்கு ராம லஷ்மணர்களை மயில் ராவணன் கடத்திக் கொண்டு போய் விட்டது தெரிந்திருக்கவில்லை.  அந்த வாலின் கோட்டைக்கு உள்ளே அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்த விபீஷணன் அனுமாரின் அருகில் சென்று 'ஐயா, அனுமாரே  அனைத்தும் பத்திரமாகத்தானே உள்ளது ?' என்று கேட்க அனுமார் கூறினார் ' வாருமையா விபீஷணரே. இப்போத்தானே அரை நாழிக்கு முன்னால என் வாயில் புகுந்து வெளி வந்தீர். எப்படி எனக்கே தெரியாமல் இப்போ மீண்டும் உள்ளே சென்றீர்?' என்று கேட்க பகீர் என்றது விபீஷணருக்கு. ஏமார்ந்து விட்டோமோ எனப் பதறியவாறு, 'ஒரு நிமிடம், வந்து விட்டேன்' எனக் கூறி விட்டு உள்ளே ஓடிப் போய் பார்த்தால் அங்கு ராம லஷ்மணர்களைக் காணோம்!!!. 'ஐயோ மோசம் போய்டோமே' எனக் கதறியவாறு அனுமானிடம் வந்து 'உள்ளே பாதுகாப்பாக இருந்த ராம லஷ்மணர்களைக் காணலை. நீர் யாரை உள்ளே விட்டீர். நான் கூறியது போலவே ஆயிட்டுது  இல்லே ....மயில் ராவணன் மாயாவி என்றேனே....ஏமார்ந்து விட்ட...

Mayil Ravanan - 6

படம்
அவர்களனைவரும் வந்து சொன்ன சேதி அனைத்தையும் கேட்ட மயில் ராவணன் யோசனை செய்தான். 'இனி இவாள எல்லாம் நம்பிப் பிரயோஜனமில்லே. நான்தான் போய் தந்திரமோ, மந்திரமோ, மாயமோ எதேகிலும் செய்து கச்சிதமாக காரியத்தை முடிக்கோணும். வேறு வழி இல்லே'. இப்படி எண்ணியவன் அனைவரையும் பத்திரமாக அங்கேயே தான் வரும்வரை காத்து இருக்க சொல்லி விட்டு அங்கிருந்துக் கிளம்பிச் சென்றான். வால் கோட்டை அருகே வந்ததும் தன்னை விபீஷணன் போல உருமாற்றிக் கொண்டான். வெற்றிலையில் மையையும் தடவிப் பார்த்து அனுமானின் முகம் எங்குள்ளது  என்பதைக் கண்டு பிடித்தும் விட்டான். அவன்தான் மாயாவி ஆயிற்றே. மெல்ல மெல்ல அனுமானின் காதருகில் சென்று 'ஐயா அனுமனே, பத்திரம்....பத்திரம்....எச்சரிக்கையாக இறும்...... ....ரொம்பவே   எச்சரிக்கையாக இரும் .... பதினைந்து நாழியாகப் போகிறது. கோட்டைக்கு வெளியே எல்லாமே சரியா இருக்கு. அனைத்தையும் பார்த்துட்டேன். எல்லாமே சரியாக இருக்கு. நல்ல வேளை ....உள்ளே நுழைய  வந்த களவாணி எல்லாருமே ஓடிட்டான்......... உள்ளே எல்லாம் சரியா இருக்கான்னு பாக்குறேன். வழியை விடுங்கோ  ?' அதைக் கேட்ட அனுமார் விபீஷண...

Mayil Ravanan -5

படம்
'பிராணநாதா, நீவீர் எங்கே செல்கிறீர்?' என மயில் ராவணனைக் கேட்கவும் முகம் சுளுக்கிய மயில் ராவணனும் கூறுகிறான், 'அன்பே, ஒரு முக்கிய காரியத்துக்கு கிளம்பும்போது இப்படி அபசகுனமா வந்து புலம்பலாமா? இது ஒரு மனைவிக்கழகா? என் தாயாதி சகோதரன் ராவணனை இரண்டு மானிடர்கள் அவமானப்படுத்தி, அவன் சந்திதியினரையும், சேனைகளையும் நிர்மூலமாக்கி விட்டார்கள். அவனென்னை உதவிக்கழைத்தான். அவனுக்கும் ஒத்தாசை செய்வதா வாக்கும் கொடுத்தேன். என் தாயாதி அல்லவா? அவனுக்கு கெடுதியோண்ணு வந்தா, அது நம் வம்சத்துக்கும் கெடுதி இல்லையா? எம் சந்ததியினருக்கு தீங்கு செய்த அந்த இரண்டு மானிடர்களையும் காளிக்கு பலியிடுவதாக சங்கல்பம் செய்துள்ளேன். அதுக்காவே இப்போ போகிறேன்....என்னைத் தடுக்காதே....பெண்ணை....தடுத்து நிறுத்தாதே' என்று கூறியவுடன் வர்ணமாலி தன் மனதில் உள்ளதைக் கூறத் துவங்கினாள்.  வர்ணமாலி கூறுகிறாள் 'பிராணநாதா, நான் சொல்வதையும் சற்றே கேளுமேன். அந்த ராம-லஷ்மணர்கள் சாமான்யமானவர்கள் அல்ல என்று கேள்வி. அவர்கள் தெய்வத்தின் அம்சங்களாம். அதுவும் அனேகம்பேர்  சொல்லக் கேட்டேன். அதை ஆகாசவாணியும்  கூட நான் காளிக்க...