Gubera Pooja

பண விரயங்கள் நீங்கி செல்வம் நிலைக்க ஒரு சிறிய பூஜை முறை சாந்திப்பிரியா ஒவ்வொருவருக்கும் வரவுக்கு மீறிய செலவும் ஏற்படுகிறது. அதுவும் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கும் விலைவாசிகள், குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவச் செலவு என அனைத்திற்கும் பணம் செலவு ஆகிக் கொண்டே இருக்கும்போது நமக்கு லஷ்மி தேவி ஏன் தங்குவது இல்லை என்ற விரக்தி ஏற்படுவது இயற்கையாக இருக்கும். ஆகவே லஷ்மி தேவியை திருப்திப்படுத்தி நம் கையில் நாலு காசு தங்க வேண்டும் என நினைப்பவர்கள் செய்ய வேண்டிய மிக சாதாரண பூஜை இது. இது பூஜை என்று கூற முடியாதது. ஒரு விதமான விரதம் அல்லது வேண்டுதல் என்று கூடக் கூறலாம். இதெல்லாம் பாட்டி வைத்தியம் போல நம் முன்னோர்கள் அந்த காலத்திலே செய்து வந்தவை. இந்த வழிமுறை இப்போது மிக சாதாரணமாக தோன்றக் கூடும். ஆனால் அந்த காலத்து வழிமுறைகள் காலத்தால் அழியாதவை. உண்மையில் நன்மை தரக்கூடியவை என்பதை மட்டுமே நம்மால் கூற இயலும். அதற்கு ஒருவர் செய்யக் கூடிய சின்ன வழிமுறை இது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று காலையில் குளித்தப் பின...