இடுகைகள்

ஆகஸ்ட், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Mayil Ravanan

படம்
 முன்னுரை வால்மீகி முனிவர் ராமாயணத்தை எழுதினர். அது புராணமாயிற்று. ராமாயணக் கதை உலகெங்கும் பல வடிவங்களில் புழங்கி வருகிறது. அது போலவே தமிழ் நாட்டிலும் வங்கத்திலும் பல ஆண்டுகளுக்கு முன்னர் ராவணனின் தாயாதி வழி சகோதரன் மயில் ராவணன் என்பவர் தன் சகோதரன் ராவணனுக்கு உதவ ராம லஷ்மணர்களை கடத்தி வந்து காளிக்கு பலி கொடுக்க முயன்ற நாட்டுப்புறக் கதை புழக்கத்தில் இருந்துள்ளது. பல்வேறு வருடங்களாக அது செவி வழிக் கதையாகவே கூறப்பட்டு வந்திருந்தாலும் தமிழ்நாட்டில் முதன் முதலாக 1958 ஆம் ஆண்டுகளில் மயில் ராவணனின் கதை எழுத்து வடிவில் வந்ததாக கூறுகிறார்கள். அதை கிராமப்புறங்களில் தெருக்கூத்து அல்லதுஒருவிதமான பொம்மலாட்டத்தின் மூலமே கூறி வந்துள்ளார்கள். அந்த பொம்மலாட்ட நிகழ்ச்சி பொம்மைகளைக் கொண்டு நடத்தப்பட்டது இல்லை. பதனிடப்பட்ட, தோல்களில் உண்மையான மனிதர் உயரத்தில் வண்ண உருவம் தீட்டி, வெள்ளைத் திரைகளுக்குப் பின்னால் வைத்து பெட்ரோமாஸ் விளக்கு ஒளியின் துணையைக் கொண்டு வெள்ளைத் திரைகள் மீது அவற்றின் உருவை அசைய வைத்து நிழல்லாட்டதின் மூலம் கதையைக் காட்டுவார்கள். அந்த நிழல் கலை தஞ்சாவூரை ஆண்டு வந்த ...

Patabiraman Kavithaigal

படம்
  எழுதியவர் Pattabi Raman <vijayakoti33@gmail.com> நம்மை பார்த்து பொறாமைப்படுபவர்களிடமிருந்து நம்மை காத்துக்கொள்வது எப்படி? ? திரு வேணுகோபால் கிருஷ்ணமூர்த்தி  அவர்கள் கேள்வி ஆம் கொடுக்கின்ற எல்லாவற்றையும் கபளீகரம் செய்து விட்டு இன்னும் இன்னும் என கேட்கும் "அக்னியை"விட மோசம் "பொறாமை தீ: இதில் இருந்து தப்பிக்க வழி சொல்லவும்...அதாவது நம்மை பார்த்து பொறாமைபடுபவர்களிடமிருந்து தப்பிக்க...வழி சொல்லவும்  பதில் பொறாமைப்படுபவர்களைப் பார்த்து மகிழுங்கள் (மனதில் மட்டும்) அதை வெளிக் காட்டாதீர்கள். அவர்களை விட நீங்கள் மேம்பட்டு நிற்கிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளவும். நீங்கள் அடைந்த நிலையை அவர்கள் அடையமுடியவில்லையே என்று மனதிற்குள் வெதும்பட்டும் . அதன் வெளிப்பாடுதான் அவர்களின் செயல்பாடுகள், பேச்சுகள் , தடங்கல்கள். அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாதீர்கள். ஒரு மின் விளக்கில் உள்ள உலோகத் திரியில் ஏற்படும் மின் தடையினைப் பொருத்துதான் அதன் ஒளிரும் தன்மை அதிகமாவதைபோல உங்கள் செயல்பாடுகளும் பிரகாசிக்கும். தடைகளை கண்டு அஞ்சாதீர்கள். பொறாமைக்காரர்களிடம் போராடி உங்க...

Pattabiraman Kavithaigal - 2

படம்
  எழுதியவர் Pattabi Raman <vijayakoti33@gmail.com> என்னே இறைவன் கருணை! நமக்கு உயிரையும் உடலையும் மற்று அனைத்தையும் கேளாமலே தந்ததுமட்டுமல்லாமல் அவைகளை நாம் அனுபவிக்க மனதையும், துன்பத்திலிருந்து காத்துக்கொள்ள அறிவையும் அளித்த இறைவனுக்கு ஒவ்வொரு கணமும் நாம் நன்றி செலுத்த வேண்டும். அதற்க்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை. இறைவனை நாம் நாள் தவறாமல் பூசிக்க வேண்டும். அவனை பூசிப்பதர்க்கு பெரிய ஆடம்பரங்கள் தேவையில்லை என்று கண்ணனே கீதையில் சொல்லிவிட்டான். ஒரு பூ,ஒரு இல்லை(துளசி),நீர் (தீர்த்தம் )போதும் என்று சொல்லிவிட்டான். சிவபெருமானோ ஒரு வில்வ பத்ரமே போதும் என்று சொல்லிவிட்டான்.லிங்கம் போதும் ஆடம்பரமான கோயில்கள் ஏதும் தேவையில்லை என்று இருந்துவிட்டான். அவன் மைந்தன் விநாயகனோ இன்னும் எளிமையாக்கி விட்டான் வழிபாட்டை. மண்ணினால் பிடித்து வைத்தாலும்,பசும் சாணத்தினால்,அல்லது மஞ்சளில் பிடித்து அதில் அருகே முளைத்திருக்கும் இரண்டு அருகம்பில்லை என் மீது போட்டால் போதும் அதுவே எனக்கு பரம திருப்தி என்கிறான். உடனே அதில் நான் பிரசன்னமாகிவ...

Pattabi Raman Kavithaigal

படம்
  எழுதியவர் Pattabi Raman <vijayakoti33@gmail.com> கண்ணா கண்ணா என்று  கண்மூடி அழைத்தாலே ... கண்ணா கண்ணா என்று  கண்மூடி அழைத்தாலே  கண் முன்னே வந்து நின்றிடுவான் கவலைகளைஎல்லாம்  போக்கிடுவான்  காலமெல்லாம் உடனிருந்து கண்ணிமைபோல் காத்திடுவான்  அன்புடன்  தினமும் அவன் நாமம் நாவிலும் நினைவிலும் ஒலிக்க  விட்டால்  ஒயாது சலிக்கும்  மனமும் ஒடுங்கிவிடும்.  அரக்கரை அழிக்க சீதையின் நாயகனாய் தரணிக்கு  வந்த இராமனவன்  அதர்மத்தை அழித்து தர்மத்தை  நிலை நாட்டிய கீதா நாயகனவன்  சிலையாய் புறத்தே நின்றிடினும்  என் அகத்தே நிலையாய் நின்றருள் செய்திடவே  ஓதுகின்றேன் அவன் திருநாமம்