Mayil Ravanan

முன்னுரை வால்மீகி முனிவர் ராமாயணத்தை எழுதினர். அது புராணமாயிற்று. ராமாயணக் கதை உலகெங்கும் பல வடிவங்களில் புழங்கி வருகிறது. அது போலவே தமிழ் நாட்டிலும் வங்கத்திலும் பல ஆண்டுகளுக்கு முன்னர் ராவணனின் தாயாதி வழி சகோதரன் மயில் ராவணன் என்பவர் தன் சகோதரன் ராவணனுக்கு உதவ ராம லஷ்மணர்களை கடத்தி வந்து காளிக்கு பலி கொடுக்க முயன்ற நாட்டுப்புறக் கதை புழக்கத்தில் இருந்துள்ளது. பல்வேறு வருடங்களாக அது செவி வழிக் கதையாகவே கூறப்பட்டு வந்திருந்தாலும் தமிழ்நாட்டில் முதன் முதலாக 1958 ஆம் ஆண்டுகளில் மயில் ராவணனின் கதை எழுத்து வடிவில் வந்ததாக கூறுகிறார்கள். அதை கிராமப்புறங்களில் தெருக்கூத்து அல்லதுஒருவிதமான பொம்மலாட்டத்தின் மூலமே கூறி வந்துள்ளார்கள். அந்த பொம்மலாட்ட நிகழ்ச்சி பொம்மைகளைக் கொண்டு நடத்தப்பட்டது இல்லை. பதனிடப்பட்ட, தோல்களில் உண்மையான மனிதர் உயரத்தில் வண்ண உருவம் தீட்டி, வெள்ளைத் திரைகளுக்குப் பின்னால் வைத்து பெட்ரோமாஸ் விளக்கு ஒளியின் துணையைக் கொண்டு வெள்ளைத் திரைகள் மீது அவற்றின் உருவை அசைய வைத்து நிழல்லாட்டதின் மூலம் கதையைக் காட்டுவார்கள். அந்த நிழல் கலை தஞ்சாவூரை ஆண்டு வந்த ...