இடுகைகள்

பிப்ரவரி, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Thirupoovana Mahathmiyam - 3

படம்
தன் வீட்டிற்கு வந்து உள்ளது சிவபெருமானே என்பதை அறியாதவளாக பொன்னையாள் அவரிடம் மனம் உருகிக் கூறினாள்  'சித்தர் பெருமானே உங்களிடம் நான் எதை, என்ன என்று கூற.  எனக்கு மனதில் தீராத ஆசை ஒன்று  உள்ளது.  நான் பூஜிக்கும்  சிவபெருமானுக்கு தங்கத்திலான சிலையை செய்து அவரை அழகு பார்க்க வேண்டும் என்று மனது நினைக்கின்றது. ஆனால் மனதில் நினைப்பதை நிறைவேற்றிக் கொள்ள வசதியும் வேண்டும் அல்லவா.  நானோ நடன மாது. நான் என் சம்பாத்தியத்தைக் கொண்டு அதை எப்படி நிறைவேற்ற முடியும் ?  ஆகவே நடக்க முடியாத அந்த காரியத்தை  மனத்தால் மட்டும் எண்ணி  மகிழ்ந்து கொண்டு  வேறு எந்தப் பிறவியிலாவது  அதை செய்யும்  பாக்கியம் பெற்றவளாக இருப்பேன் என்ற மனக் கனவுடன் வாழ்ந்து வருகிறேன். ஆகவே குறைந்த பட்ஷம் சிவன் அடியவர்களான உங்களைப் போன்றவர்களுக்காவது  இந்த ஜென்மத்தில் சேவை செய்யலாம் என்பதை  என் கடமையாக  செய்து  வருகிறேன். ஆகவே பெரியவரே நீங்கள் சிவபெருமானிடம்  எனக்காக வேண்டினாலும் அது எங்கே நடக்கும்? உங்களுக்கு சேவை செய்வதையே பெரிய பாக்கியமாகக் கருதி ...

Thirupoovana Mahathmiyam - 2

படம்
சூத முனிவர் நைமிசாரண்யத்தில் முனிவர்களுக்கு திருப்பூவனத்தைப் பற்றி விளக்கிக் கூறலானார். ''முனிவர்களே, திருப்பூவணத்திற்கு நான்கு யுகங்களில் நான்கு பெயர்கள் இருந்துள்ளன. கிரேதாயுகத்திலே தேவிபுரம் என்றும் திரேதா யுகத்திதல் லஷ்மிபுரம் என்றும், துவாபர யுகத்தில் பிரும்மபுரம் என்றும் பெயர்கள் உண்டு. அதுவே கலியுகத்தில் தட்சிண காசி அல்லது பிதுர் முக்திபுரம் என அறியப்படும். அங்கு செல்பவர்களுக்கும் அங்கேயே வசிப்பவர்களுக்கும் முக்தி கிடைக்கும், பித்ரு பாபம் தீரும் மற்றும் சிவப்பிராப்தி கிடைக்கும்''. முன் ஒரு காலத்திலே இந்த தலத்திலே பொன்னையாள் என்றொரு மாது வாழ்ந்து வந்திருந்தாள். அவள் ஆலயத்தில் நடனமாடும் மங்கை. அவள் சிவபெருமான் மீது அளவற்ற பக்தி கொண்டவள். அங்கு இருந்த சிவபெருமானுக்கு பூவண்ணனாதர் என்ற பெயருண்டு. தினமும் அவரை பூஜித்து வந்திருந்த பொன்னையாளுக்கு ஒரு தீராத ஆசை இருந்தது. தன் வாழ்நாளில் பூவண்ணனாதரை தங்கத்திலான சிலை அழகில் காண வேண்டும் என்பதே அந்த ஆசை. ஆனால் ஏழை அவளால் எப்படி அத்தனை தங்கத்தை சேர்த்து சிலையை வடிவமைப்பது? ஆகவே அவள் தினமும் மனமுருகி ஆலயத்தில் சிவ...

Thirupoovana Mahathmiyam -1

படம்
பிரும்மா இந்த பிரபஞ்சத்தைப் படைத்த சில காலத்துக்குப் பின் அவரிடம் சென்ற அனைத்து முனிவர்களும் ரிஷிகளும் தாம் அனைவரும் நிம்மதியாகவும், தடங்கல்கள் இன்றியும் யாகங்களை செய்யவும், தவம் செய்யவும் ஒரு தக்க இடத்தைக் காட்டுமாறு அவரிடம் வேண்டிக் கொண்டார்கள். அவரும் சிறிது நேரம் யோசனை செய்தப் பின் தன் கையில் அப்போது வைத்து இருந்த ஒரு சங்கு சக்கரத்தை எடுத்து பூமியில் ஓட விட்டார். அடுத்து அந்த ரிஷி முனிவர்களிடம் பிரும்மா கூறினார் ' ரிஷி முனிவர்களே, நீங்கள் இந்த சக்கரத்தை தொடர்ந்து செல்லுங்கள். அது எந்த இடத்தில் சென்று நின்று விடுமோ அந்த இடமே நீங்கள் விரும்பும் இடம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்' என்று கூறினார். அவர் கொடுத்த அறிவுரைப்படி அந்த ரிஷி முனிவர்கள் சங்கு சக்கரத்தை தொடர்ந்து சென்றார்கள். அதுவும் பல இடங்களுக்கும் ஓடிச் சென்ற பின் முடிவாக நைமிசாரண்யா வனத்தில் சென்று நின்று விட, அந்த இடமே அனைத்து ரிஷி முனிவர்களும் கூடி சத்சங்கம் செய்யவும், வேள்விகள் செய்யவும் ஏற்ற இடமாக அமைந்தது. நம் நாட்டில் பல்வேறு புராணங்கள் உள்ளன. அவற்றில் பலவற்றையும் நைமிசாரண்ய வனத்தில் சூதக முனிவர் கூ...

Siva (Vishnu) Temple, Thiru Marperu

படம்
சாந்திப்பிரியா ஒருமுறை நாரத முனிவருக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. பக்தி என்பதின் உண்மையான விளக்கம் என்ன? ஆகவே அவர் திருமாலிடம் சென்று அதற்கான விளக்கத்தைக் கேட்டார். திருமாலோ எதை எதையோ கூறியும் நாரதருக்கு திருப்தி ஏற்படவில்லைஎன்பதினால் திருமால் அவரை சிவபெருமானிடம் சென்று அதற்கான விளக்கத்தைக் கேட்குமாறுக் கூறினார். நாரதரும் சிவபெருமானிடம் சென்று உண்மையான பக்தி என்பதின் விளக்கத்தைக் கேட்க அவர் நாரதரிடம் சில நாட்கள் பூலோகத்துக்குச் சென்று ஆயிரம் ஆலயங்களில் தரிசனம் செய்தப் பின் தன்னிடம் வந்தால் அதற்கான விளக்கத்தைக் கூறுவதாகக் கூறினார். சிவபெருமான் கூறியபடி நாரதரும் மனித உருவை எடுத்து பூமிக்குச் சென்று பல இடங்களிலும் இருந்த விஷ்ணு மற்றும் சிவஸ்தலங்களுக்கு சென்று தரிசனம் செய்தப் பின் கடைசியாக காஞ்சீபுரத்தின் அருகில் காஞ்சீபுரம் மற்றும் அரக்கோணத்துக்கு இடையே உள்ள  திருமாற்பேறு என்ற ஆலயம் உள்ள இடத்தை அடைந்தார். அங்கு இருந்த மிகச் சிறிய ஆலயத்தில் ஒரு சிவலிங்கம் இருந்தது. அதன் எதிரில் லிங்கத்தை வணங்கிய நிலையில் விஷ்ணுவின் ஒரு சிலையும் இருந்தது. அதைக் கண்ட நாரதருக்கு வியப்பாக இருந்தது...