Thirupoovana Mahathmiyam - 3

தன் வீட்டிற்கு வந்து உள்ளது சிவபெருமானே என்பதை அறியாதவளாக பொன்னையாள் அவரிடம் மனம் உருகிக் கூறினாள் 'சித்தர் பெருமானே உங்களிடம் நான் எதை, என்ன என்று கூற. எனக்கு மனதில் தீராத ஆசை ஒன்று உள்ளது. நான் பூஜிக்கும் சிவபெருமானுக்கு தங்கத்திலான சிலையை செய்து அவரை அழகு பார்க்க வேண்டும் என்று மனது நினைக்கின்றது. ஆனால் மனதில் நினைப்பதை நிறைவேற்றிக் கொள்ள வசதியும் வேண்டும் அல்லவா. நானோ நடன மாது. நான் என் சம்பாத்தியத்தைக் கொண்டு அதை எப்படி நிறைவேற்ற முடியும் ? ஆகவே நடக்க முடியாத அந்த காரியத்தை மனத்தால் மட்டும் எண்ணி மகிழ்ந்து கொண்டு வேறு எந்தப் பிறவியிலாவது அதை செய்யும் பாக்கியம் பெற்றவளாக இருப்பேன் என்ற மனக் கனவுடன் வாழ்ந்து வருகிறேன். ஆகவே குறைந்த பட்ஷம் சிவன் அடியவர்களான உங்களைப் போன்றவர்களுக்காவது இந்த ஜென்மத்தில் சேவை செய்யலாம் என்பதை என் கடமையாக செய்து வருகிறேன். ஆகவே பெரியவரே நீங்கள் சிவபெருமானிடம் எனக்காக வேண்டினாலும் அது எங்கே நடக்கும்? உங்களுக்கு சேவை செய்வதையே பெரிய பாக்கியமாகக் கருதி ...