இடுகைகள்

ஜனவரி, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Bande Mahakali, Bangalore

படம்
பெங்களூர் சாந்திப்பிரியா பெங்களூரில் கெம்பகெளடா கோபுரம் எனும் இடத்தில் மலைப் பகுதி போன்ற பகுதியில் உள்ளது 'பண்டே மகா காளி' எனும் காளி தேவியின் ஆலயம். இந்த இடம் கவிபுரம் என்று அழைக்கப்படும் இடத்தில் உள்ளது. இந்த ஆலயம் சுமார் 300 அல்லது 350 ஆண்டுகளுக்கு முன்பே வெளியில் தெரிந்ததாக கருதுகிறார்கள். ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அது ஸ்யம்புவாகத் தோன்றி இருக்க வேண்டும் என்று நம்புகிறார்கள். இதைக் கட்டியவர் யார், மற்றும் இதன் வரலாறு என்ன என்பது குறித்து சரியான விவரம் தெரியவில்லை. மலைப்பாங்கான பகுதியில் ஒரு பெரிய பாறையில் காளி தேவியின் சிலை காணப்படுகிறது. அங்கொரு ஆலயத்தை நிறுவி அதற்குள் பாறையில் காணப்படும் அந்த காளி தேவியின் சிலை இருக்குமாறு சிறு சன்னதியாகக் கட்டி உள்ளார்கள். அந்த சன்னதிக்கு செல்ல படிகள் ஏறிப் போக வேண்டும். அந்த சன்னதியை சுற்றி வேறு பல தெய்வ சன்னதிகள் உள்ளன. இந்த காளியின் ஆலயத்துக்கு எதிரில் வீரபத்திர ஸ்வாமி ஆலயம் உள்ளது. அவரை பிரளயகால வீரபத்திரர் என்கிறார்கள். இந்த ஆலயம் ராஜராஜ சோழனின் காலத்து ஆலயம் என்கிறார்கள். மேலும் அங்குள்ள வீர பத்த...

Birth of Vishnu Sahasranamam

படம்
விஷ்ணு சஹஸ்ரநாமம்  பிறந்த கதை சாந்திப்பிரியா பெரும்பாலான ஆஸ்தீக பக்தர்கள் பெரிதும் போற்றிப் படிக்கும் விஷ்ணு சஹஸ்ரநாமம் என்பது விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களைக் கொண்டது. பூஜையே செய்யாமல் ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்து கொண்டு அதை தினமும் ஸ்தோத்திரம் செய்வதின் மூலம் அவரை தினமும் ஆயிரம் முறை பூஜித்தற்கான  பலனைத் தரும் என்பார்கள். சஹஸ்ர என்றால் ஆயிரம் என்று அர்த்தம். ஆகவேதான் ஆயிரம் நாமங்களைக் கொண்ட இதன் பெயர் சஹஸ்ரநாமம் என்றாயிற்று. இந்த உலகில் லலிதா சஹஸ்ரநாமம், கணேச சகஸ்ரநாமம், லஷ்மி சகஸ்ரநாமம், நரசிம்ஹ சகஸ்ரநாமம் மற்றும் சுதர்சன சகஸ்ரநாமம் போன்ற சக்தி வாய்ந்த மந்திர நாம தோத்ராவளிகள் பலவும் இருந்தால் கூட சஹஸ்ரநாமம் என்றாலே எவருக்கும் விஷ்ணு சஹஸ்ரநாமமே மனதில் எழும் கூறுவார்கள்.  இந்த நாமாவளியே அத்தனை சக்தி வாய்ந்தது என்பதான நம்பிக்கை இன்றல்ல, பல ஆயிரம் வருடங்களாகவே இருந்துள்ளது என்பதின் காரணம் விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்கும் மகாபாரதத்துக்கும் நெருங்கிய சம்மந்தம் உள்ளது.  சரியாகக் கூறினால் இந்த சஹாஸ்ரனாமத்தை சனக குமாரர்களில் ஒருவரே பிதா மகனான பீஷ்மருக்க...

Magalam Siva Temple

படம்
மாகாளேஸ்வர் ஆலயம் சாந்திப்பிரியா மாகாளேஸ்வர் ஆலயம் என்றாலே உஜ்ஜயினியின் நினைவுதான் அனைவருக்கும் வரும். ஆனால் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற பெருமையை கொண்ட இன்னொரு மாகாளேஸ்வர் ஆலயம் பாண்டிச்சேரியில் இருந்து சுமார் 10 கி.மி. தொலைவில் உள்ள இரும்பை மாகாளம் என்ற ஊரில் உள்ளது. இந்த இடத்துக்கு செல்ல திண்டிவனத்தில் இருந்து கிளியனூர் வழியே பாண்டிச்சேரி செல்லும் பாதையில் செல்ல வேண்டும். இந்த தலம் எழுந்த வரலாறு சுவையானது.  இந்த தலம் எழக்காரணம் காடுவெளிச் சித்தர் என்ற உண்மை பலமாக உள்ளது. காடுவெளி என்பது வெட்ட வெளியைக் குறிக்கும். வெட்டவெளி என்பது சூன்யப் பிரதேசம் ஆகும்.  ஆகவே இந்த முனிவர் இவர் அந்த வெட்ட வெளியான  சூனியத்தையே   தியானித்து சித்தி பெற்றதால் காடுவெளிச் சித்தர் என்று அழைக்கப்பட்டார் என்பது ஒரு நம்பிக்கை. இவர் காஞ்சிபுரத்தில் சமாதியடைந்ததாக சிலர் கூறுகின்றனர். இவருடைய வாழ்கை  வரலாற்றை யாரும் முறையாக எழுதவும் இல்லை. இவரைப் பற்றிய பல செய்திகள் வாய் மொழிக் கதைகளாகவே உள்ளன.   இந்த ஆலயத்தைக் குறித்து சில இடங்களில் கூறப்படும் கதைகள் சற...

Thirumurugatrup padai

படம்
திருமுருகாற்றுப் படை சாந்திப்பிரியா சூரியனை வதம் செய்ய புறப்பட்ட முருகப் பெருமான் புலவர் நக்கீரரை காப்பாற்றியக் கதை முருகனின் புராணத்தில் உள்ளது. நக்கீரர் பெரும் கவி. யாருக்கும் தலை வணங்காதவர். காரணம் அவருக்கு உண்மையைத் தவிர வேறொன்றும் தெரியாது என்பதே. சிவபெருமானை வணங்காமல் வேறெங்கும் செல்ல மாட்டார்.  ஒருநாள் என்றும் போல வெளியில் கிளம்பிச் சென்றார். நக்கீரர் ஒருமுறை வெளியூருக்குப் பயணமானார். அது திருப்பரம்குன்றம் எனும் இடமாகும். அங்கு சென்றவே அங்கிருந்த குளத்தில் குளித்து விட்டு அருகில் இருந்த சிவாலயத்தின் வெளியில் இருந்த மரத்தடியில் படுத்துக் கொண்டார். ஆலயம் இன்னும் திறக்கவில்லை. அது திறந்ததும் அங்கு சென்று சிவபெருமானை வழிபடலாம் என எண்ணி இருந்தார். அதே நேரத்தில் அங்கு சாபம் ஒன்றைப் இருந்த கார்முகி எனும் பூதம் ஒன்று ஆலயத்தின் வெளியில் காத்துக் கிடந்தது.  அதன் வேலை என்ன என்றால் அந்த ஆலயத்தில் வந்து சிவனை பூசிப்பவர்கள் சிவ பூஜையில் கவனம் செலுத்தாமல் இருந்ததால் அவர்களை கொண்டு போய் சிறையில் அடைத்து விடும். இப்படியாக ஆயிரம் பக்தர்களை  சிறையில்...

Kannagi worship in Sri Lanka

படம்
  இலங்கையில் கண்ணகி வழிபாடு  புங்குடுத் தீவு  கண்ணகி ஆலயம்    சாந்திப்பிரியா  மதுரையை எரித்த கண்ணகிக்கு  இந்தியாவின் தென் பகுதியில் மட்டும் அல்ல இலங்கையிலும்  வழிபாடு உள்ளது. ஈழத்தில் முருகன் வழிபாடு எப்படி அதிகமாக உள்ளதோ, அதில் பாதி அளவாவது கண்ணகிக்கும் உள்ளது என்பது ஒரு ஆச்சர்யமான செய்தியாக இருக்கும். இலங்கையில் பல இடங்களில் கண்ணகிக்கு ஆலயங்கள் உள்ளன. கண்ணகியை ராஜராஜேஸ்வரி, நாகபூசணி, முத்துமாரி அம்மன், நாச்சியம்மன், புவனேஸ்வரி, மீனாட்சி போன்ற பல பெயர்களில் வழிபடுகிறார்கள். கண்ணகி ஆராதனை என்பதைசுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு கொண்டு வந்தது கி.பி 170 ஆம் ஆண்டுகளில் இலங்கையின் அனுராதபுரத்தை ஆண்டு வந்த கஜபாகு என்ற மன்னனே என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். கண்ணகியும் கோவலனும் தெய்வமாகி மேலுலகம் சென்றப் பின் இந்தியாவின் தென் நாட்டில் ஆட்சியில் இருந்த சேரன் செங்குட்டுவன் என்ற சேர மன்னன் கண்ணகிக்கு பெரும் விழாவை எடுத்தான். வாஞ்சி நகரில் அவன் நடத்திய கண்ணகி விழாவில் இமயமலையில் இருந்து கொண்டு வந்த கல்...

Full moon and Dark moon

படம்
அம்மாவாசை மற்றும் பௌர்ணமி   பிறந்த கதை  சாந்திப்பிரியா ஒருமுறை தக்கன் சிவபெருமானை துதித்துக் கடும் தவம் புரிந்து பல ஆற்றல்களைப் பெற்றான். பல சக்திகளைப் பெற்றுக் கொண்ட தக்கன் சற்றே இறுமாப்புக் கொண்டு அலைந்தான். அவன் மணந்து கொண்ட மனைவிகள் மூலம் பால ஆயிரம் பிள்ளைகளைப் பெற்றெடுத்தான். ஆனால் பரிதாபம் என்ன என்றால் அவனுடைய எந்தப் பிள்ளைகளினாலும் அவனுக்கு பெருமைக் கிடைக்கவில்லை. ஆகவே அவன் மனம் நொடிந்து போனான். மீண்டும் சிவபெருமானை துதித்தார்.  சிவபெருமானின் அருளினால் அவனுக்கு இருபத்தி ஏழு பெண்கள் பிறந்தார்கள் . அவர்கள் அனைவரையும் நன்கு பேணி வளர்த்து வந்த தக்கன் அவர்களுக்கு நல்ல மாப்பிள்ளையை தேடி வந்தான். அப்போது அதைக் கேள்விப்பட்டு அங்கு வந்த சந்திரன் தனக்கு அவர்களை மணம் செய்து கொடுக்குமாறு கோரிக்கை வைக்க அதை ஏற்றுக் கொண்ட தக்கனும் சந்திரனுக்கு அவர்கள் அனைவரையும் திருமணம் செய்து வைத்தார். முதலில் சில வருடங்கள் அனைத்து மகள்களின் வாழ்கையும் இனிமையாகவே கழிந்தன. சந்திரனும் தினமும் ஒரு மனைவி என ஒவ்வொரு பெண்ணுடனும் ஒவ்வொரு நாளைக் கழித்தாலும் அவர்களில் மூத்...