இடுகைகள்

ஜனவரி, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Story from Purana

படம்
திக்குவாய் முனிவர் சொன்ன புராணக் கதை  வசிஷ்டரின் சாபமும் பீஷ்மர் பெற்ற சாப விமோசனமும்  சாந்திப்பிரியா  முன்னொரு காலத்தில் தேவலோகத்தில் அஷ்டவசு எனும் எட்டு கண தேவதைகள் இருந்தார்கள். அவர்கள் தக்ஷனின் இன்னொரு மகளான வசு என்பவளுக்குப் பிறந்தவர்கள் . அவர்களை காஷ்யப முனிவருக்குப் பிறந்தவர்கள் என்று இன்னொரு புராணக் கதை உள்ளது. திருமண வயதை அடைந்ததும் அவர்கள் எட்டு பேருக்கும் திருமணம் நடந்தது. அவரவர் மனைவிகளுடன் ஆனந்தமான வாழ்கையை அனுபவித்து வந்தார்கள். ஒற்றுமையாக ஒன்றாகவே அங்கும் இங்கும் சுற்றித் திரிந்தார்கள். இப்படியாக அவர்கள் சுற்றித் திரிந்து கொண்டு இருந்தபோது அவர்களில் ஒருவருடைய மனைவி வசிஷ்டரிடம் இருந்த காமதேனுப் பசுவிற்கு இணையான நந்தினி எனும் பசுவை பார்த்தாள். அதன் அழகில் மயங்கியவள் அதை அடைய ஆசைப் பட்டாள். ஆனால் அதை வசிஷ்டரிடம் இருந்து எப்படிப் பெறுவது. அவர் அதைத் தரமாட்டார். அவருடன் அவர்கள் சண்டைப் போடவும் முடியாது. காரணம் தேவலோகத்தில் வசிஷ்ட முனிவருடன் சண்டை போடுவதை யாரும் அனுமதிக்க மாட்டார்கள். அதனால் வேறு வழித் தெரியாமல் அவளுடைய ...

Thiru Kannamangai Temple-Tanjore Dt

படம்
  திருக்கண்ண மங்கை ஆலயம் சாந்திப்பிரியா தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருக்கண்ண மங்கை ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் ஆலயம் மகிமை வாய்ந்தது. இதுவும் இன்னொரு திவ்ய தேச ஆலயமே.  இங்குதான் திருக்கண்ண மங்கை என்ற பெயரில் லஷ்மி தேவியானவள் திருமாலை மணந்து கொண்டார் என்பது தல வரலாறு. இந்த தலத்தை ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் ஆலயம் என்றும் சப்தமித்ர ஷேத்ரம் என்றும் கூறுகிறார்கள். இந்தத் தலம் ஜீவாத்மா மற்றும் பரமாத்மா எனும் தத்துவத்தை விளக்கும் தலமாம். இந்த ஆலயம் உள்ள இடத்தில் நைமிசாரண்யம் மற்றும் பத்ரினாதுக்கு இணையாக ஒரு காலத்தில் பெரிய வனம் இருந்ததாம். இந்த ஆலயத்தின் பக்கத்தில் காவேரி நதி ஓடுகின்றது. முன்னொரு சந்தர்பத்தில் தாம் பெற்ற சாபத்தின் காரணமாக விஷ்ணு பகவானைப் பிரிந்து இருந்தார் மகாலஷ்மி தேவி. ஆகவே அவரை மீண்டும் கணவராக அடைய வேண்டும் என்பதற்காக இந்த ஆலய வனப் பகுதியில் வந்து அங்கு ஓடிக் கொண்டு இருந்த புஷ்கரணி எனும் நதியில் குளித்து விட்டு மகாவிஷ்ணுவை நினைத்து ஒரு கல்லையே மகாவிஷ்ணுவாக பாவித்து அதற்கு அபிஷேகம் செய்து கடுமையான தவத்தில் அமர்ந்து இருந்தாராம். அப்போது அவளுக்க...

Sangadahara Chathurththi

படம்
பிள்ளையார் எறும்பும்  சங்கடஹர சதுர்த்தியும் சாந்திப்பிரியா விநாயகரை வேண்டிக் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையான சங்கடஹர சதுர்த்திப் பற்றிய கர்ணபரம்பரைக் கதை ஒன்று உண்டு. அது என்ன? ஒரு முறை கைலாயத்தில் பரமசிவனுடன் வேடிக்கையாக விளையாடிக் கொண்டு இருந்த பார்வதிக்கு ஒரு குறும்பு விளையாட்டு தோன்றியது. அன்றைக்கு  அவள் பிள்ளையான விநாயகருக்கு விசேஷமாக கொழுக்கட்டைகளை தயார் செய்து வைத்திருந்தாள். அந்தக் கொழுக்கட்டைகளை சுற்றியபடி கருப்பு நிற எறும்புகள் அங்கும் இங்கும் சென்று கொண்டு மற்ற தின்பண்டங்களை மொய்த்துக் கொண்டு இருந்தன. இத்தனை சிறிய எறும்புகள் ஒரு நாள் சாப்பிடாமல் பட்டினி கிடந்தால் அவை அப்போதும் எப்படியே சுறுசுறுப்பாக இருக்குமா என பார்க்கலாம் என அவளுக்கு ஒரு விளையாட்டு எண்ணம் தோன்றி விட அனைத்து எறும்புகளையும் பிடித்து ஒரு பெரிய காலி டப்பாவில் அடைத்து வைத்து விட்டாள். அவள் அவற்றை டப்பாவில் போட்ட தினம் கிருஷ்ண பக்ஷ சதுர்த்தி . இரண்டு நாட்கள் கழிந்தன. டப்பாவைத் திறந்து விட்டவளுக்கு ஒரே ஆச்சர்யம். எறும்புகள் அப்படியே இருந்தது மட்டும் அல்லாமல் வாயில் வெள்ளையாக...

Thirupukuzhi Temple-- Kanchipuram

படம்
திருப்பூக்குழி விஜயராகவப் பெருமாள் ஆலயம் சாந்திப்பிரியா திவ்ய தேசத்தின் மற்றும் ஒரு முக்கியமான ஆலயம் காஞ்சீபுரத்தில் இருந்து வேலூருக்குச் செல்லும் பாதையில் சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருப்பூக்குழி ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் ஆலயம். இந்த ஆலயத்தின் தல வரலாறும் ராவணன் சீதையை தூக்கிக் கொண்டு போனபோது அதனுடன் சண்டைப் போட்டு இறந்த ஜடாயுவிற்கு இறுதிக் காரியத்தை செய்த ராமபிரான் ஜடாயுவை தனது மடியில் வைத்துக் கொண்டு அதற்கு ஈமக்கிரியைகளை செய்ததாக தல வரலாறு கூறுகிறது. அப்போது அந்த சிதையில் இருந்து வெளிவந்த வெட்பத்தையும் அதன் வாசனையையும் தாங்க முடியாமலும் போன ஸ்ரீ தேவியானவள் ராமரின் வலது புறத்தில் இருந்து இடதுபுறத்துக்கு சென்று நின்று கொண்டதான ஐதீகம் உள்ளது. ஆகவேதான் உலகிலேயே இந்த ஒரு ஆலயத்தில்தான் ராமரின் இடதுபுறத்தில் ஸ்ரீ சீதா தேவியும், வலப் புறத்தில் பூமா தேவியும் காணப்படுவார்கள். அதனால்தான் இந்த தலத்தில் விஜயராகவப் பெருமாளின் சன்னதிக்கு இடது புற சன்னதியில் தாயாரும், வலது புற சன்னதியில் ஆண்டாளும் உள்ளனர். இப்படியாக அமைந்துள்ள சன்னதிகள் இது மற்ற ஆலயங்களில் கா...