Story from Purana
திக்குவாய் முனிவர் சொன்ன புராணக் கதை வசிஷ்டரின் சாபமும் பீஷ்மர் பெற்ற சாப விமோசனமும் சாந்திப்பிரியா முன்னொரு காலத்தில் தேவலோகத்தில் அஷ்டவசு எனும் எட்டு கண தேவதைகள் இருந்தார்கள். அவர்கள் தக்ஷனின் இன்னொரு மகளான வசு என்பவளுக்குப் பிறந்தவர்கள் . அவர்களை காஷ்யப முனிவருக்குப் பிறந்தவர்கள் என்று இன்னொரு புராணக் கதை உள்ளது. திருமண வயதை அடைந்ததும் அவர்கள் எட்டு பேருக்கும் திருமணம் நடந்தது. அவரவர் மனைவிகளுடன் ஆனந்தமான வாழ்கையை அனுபவித்து வந்தார்கள். ஒற்றுமையாக ஒன்றாகவே அங்கும் இங்கும் சுற்றித் திரிந்தார்கள். இப்படியாக அவர்கள் சுற்றித் திரிந்து கொண்டு இருந்தபோது அவர்களில் ஒருவருடைய மனைவி வசிஷ்டரிடம் இருந்த காமதேனுப் பசுவிற்கு இணையான நந்தினி எனும் பசுவை பார்த்தாள். அதன் அழகில் மயங்கியவள் அதை அடைய ஆசைப் பட்டாள். ஆனால் அதை வசிஷ்டரிடம் இருந்து எப்படிப் பெறுவது. அவர் அதைத் தரமாட்டார். அவருடன் அவர்கள் சண்டைப் போடவும் முடியாது. காரணம் தேவலோகத்தில் வசிஷ்ட முனிவருடன் சண்டை போடுவதை யாரும் அனுமதிக்க மாட்டார்கள். அதனால் வேறு வழித் தெரியாமல் அவளுடைய ...