Thinamalar News:
தினமலர் நாளிதழ் செய்தி அதிசய சம்பவம் இன்று ( 18.11.2011 ) தினமலர் நாளிதழில் வெளியான செய்தியை அப்படியே பிரசுரித்து உள்ளேன். படித்து மகிழவும். ஒரு ஆடு கார்த்திகை முதல் மாதத்தில் ஆண்டவனை பூஜித்து உள்ளது அதிசயச் செய்தி இல்லாமல் வேறு என்னவாக இருக்கும் ? பூர்வ ஜென்மத்தில் பெற்ற சாபத்தினால் யாரோ ஒருவர் - மனிதர்களோ, அல்லது தேவர்களோ - இந்த ஜென்மத்தில் ஆடாகப் பிறந்து இறைவனை பூஜித்து சாப விமோசனம் பெற இதை செய்து உள்ளதோ என்று நம்புகிறேன். இந்த செய்தியை வெளியிட்டு உள்ள தினமலரை பாராட்ட வேண்டும். தினமலர் நாளிதழுக்கு நன்றி சாந்திப்பிரியா ------------------------------------------------- கார்த்திகை 1ல் ஆடு செய்த பூஜை : காவிரிக் கரையில் நடந்த அதிசயம் ஈரோடு: ஈரோடு காவிரிக் கரையில் உள்ள மரத்தடி விநாயகர் கோவிலில், நேற்று ஆடு செய்த பூஜையால், பரபரப்பு ஏற்பட்டது. கார்த்திகை மாதல் முதல் நாளான நேற்று அதிகாலை முதலே, ஈரோடு, கருங்கல்பாளையம் காவிரியாற்றில், ஏராளமான ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர். காவிரியில் நீராடி, ஆற்றங்கரையில் உள்ள ஐயப்பன் கோவிலில் மாலையணிந்து, விரதத்தைத் துவக்கினர...