Akkalkot Samarth Swamiji -1

அக்கல்கோட் ஸமர்த்த மகராஜ் ஸ்வாமிகள் -வரலாறும் அவர் மகிமைகளும்- சாந்திப்பிரியா பாகம்-1 உலகத்தில் எப்போதெல்லாம் பாபச் செயல்கள் தலை தூக்கி நிற்குமோ அப்பொழுதெல்லாம் கடவுள் பல ரூபங்களிலும் தோன்றிக் கொண்டே இருந்து அதர்மங்களை அழிக்கின்றார், மக்களை காப்பாற்றுகின்றார் என்பது சத்திய வாக்கு. இப்படிப்பட்ட அவதாரங்களில் ஒருவரே அவதூதரான தத்தாத்ரேயரின் அவதாரமான அக்கல்கோட் ஸ்வாமிகள் என்பவர். அவதாரம் அக்கல்கோட் ஸ்வாமிகளின் பிறப்பு பற்றிய முழு விவரமும் தெரியவில்லை. ஆனால் அவர் 1275 ஆம் ஆண்டு வாக்கில் கர்நாடக மாநிலத்தில் கரஞ்சா நகர் என்ற இடத்தில் வாழ்ந்து வந்த மாதவா-அம்பாவாணி என்பவர்களுக்கு மகனாகப் பிறந்தாராம். அந்த பிராமணத் தம்பதியினர் கடவுள் பக்தி மிகுந்தவர்கள். பிறந்த குழந்தை சில நாட்களிலேயே வாய் ஓயாமல் ஓம் , ஓம் என உச்சரித்தவண்ணம் இருந்ததாம். இன்னொரு செய்தியின்படி அக்கல்கோட் ஸ்வாமிகள் 875 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரப் பிரதேசத்தின் சிலேக்ஹெடா எனும் கிராமத்தில் எட்டு வயதான சிறுவனாக இருக்கும்போது அவரை அங்குள்ள மக்கள் முதன் முறையாக ப...