இடுகைகள்

ஏப்ரல், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Bagavaan Satya Sayi Baba

படம்
சத்யா சாயி பாபா தான் கூறிய  வயதில்தான்  சித்தி அடைந்து உள்ளார் ! சாந்திப்பிரியா புட்டபர்த்தி சத்ய சாயி பாபா அவர்கள் தன்னுடைய காலத்தைக் குறிப்பிடுகையில் :" நான் 95 வயது வரை வாழ்வேன்" என்று கூறியிருந்தாராம். அதனால்தான் மார்ச் மாதம் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, "பாபாவுக்கு ஒன்றும் நேராது .தற்போது 86 வயதே ஆகும் அவர் உடல் நிலை தேறி மீண்டும் நல்லபடியாக வருவார்" என்று பக்தர்கள் நம்பிக்கை வைத்து இருந்தனராம். பாபாவின் பூத உடல் இந்த நிலையில் சாயி பாபாவின் வாக்குக்கு பொய் ஆகிவிட்டதே என பலரும் நினைக்கலாயினர். சித்தி அடைவதற்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னரே அவர் ஏப்படி சித்தி அடைந்தார் என்ற ஐயம் எழலாம். ஆனால் அது குறித்து இன்றைய தினமலர் நாளிதழில் வெளி ஆகி உள்ள ஒரு செய்தி யைக் கீழே தந்து உள்ளேன். ''சாய் பாபாவின் மரணம் குறித்து தீவிர பக்தர் ஒருவர் விளக்குகையில், "நாம் ஆங்கில முறைப்படி ஆண்டுகளைக் கணக்கிட்டு, சாய் பாபாவுக்கு தற்போது வயது 86 என்று கூறுகிறோம். ஆனால் ஹிந்து முறைப்படி சந்திரனை அடிப்படையாக கொண்டே ஆண்டு நிர்ணயிக்கப்படுகிறது. அதாவது ஆங...

Adi Shankara's Sountharyalahari

படம்
செளந்தர்யலஹரி - சில அரிய தகவல்கள்  சாந்திப்பிரியா ( முன் குறிப்பு:-  இந்தக் கட்டுரைக் குறித்து சில விஷயங்களை முதலிலேயே தெளிவுபடுத்துவது அவசியமாகின்றது.  செளந்தர்யலஹரி குறித்து நான் எழுத நினைத்தபோது செளந்தர்யலஹரி இயற்றப்பட்டதின் காரணம் என்னவாக இருக்கும் என யோசனை செய்தேன். அப்போதுதான் எதேற்சையாக  செளந்தர்யலஹரி எழுதப்பட்டதின் பின்னணிக்  காரணத்துக்கான  கதை கிடைத்தது.  இதில் கூறப்பட்டு உள்ள ஆதி சங்கரரின் கதைக்கான கருவை செளந்தர்யலஹரி இணையதளத்தில் இருந்து பெற்றேன். அந்தக் கதை இந்தக் கட்டுரைக்கு  பயனுள்ளதாக அமைந்தது. அதற்கான அனுமதி கொடுத்த  திரு மெளலி (மதுரையம்பதி) அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவிக்கின்றேன்.  அவர் வலை தளத்தில் http://sowndharyalahari.blogspot.com/2007_09_01_archive.html   செளந்தர்யலஹரி   பற்றிய பல தகவல்களையும் அனைத்து சுலோகங்களின் விளக்கத்தையும்  வெளியிட்டு உள்ளார். அவற்றை படித்து மகிழவும்  -    சாந்திப்பிரியா .)    செளந்தர்யலஹரி வெறும் வார்த்தை அலங்காரம் செய்யப்பட்டுள்ள பாடல...

Spirits and Ghosts -2

படம்
 எரிந்து போன  போன பச்சை மரம்   ?........ எனக்கு விடை கிடைக்காத  இன்னொரு  உண்மை சம்பவம்  -2   நான் நேரிலே  பார்த்த   இந்த சம்பவமும் அதிசயமான சம்பவமாகவே எனக்கு உள்ளது.  ஆனால் இதில் சம்மந்தப்பட்டு உள்ளவரின் பெயரை வெளியிட விரும்பவில்லை. ஏன் எனில் அவர் இன்றும் ஒரு உயர் அதிகாரியாக மத்திய அரசாங்கத்தின் ஒரு அலுவலகத்தில் உள்ளார் என்பதினால் அவர் பெயரைக் கூற விரும்பவில்லை . இந்த சம்பவம் நடந்து 10 அல்லது 15 ஆண்டுகள் ஆகி இருக்கும்.  அப்போது நான் மத்தியப் பிரதேசத்தில்  மத்திய அமைச்சகத்தின் கீழ் இருந்த காகித நோட்டுக்கள் அச்சடிக்கும் அலுவலகத்தில் பணி ஆற்றிக் கொண்டு இருந்தேன். ஒரு முறை நான் வேலை விஷயமாக  மைசூருக்கு சென்று இருந்தேன் . என்னுடன் இதில் சம்மந்தப்பட்டு உள்ள என் நண்பரும்  வந்து இருந்தார்.  அவர் எப்போதுமே சற்று மன வருத்தத்துடன் காணப்பட்டார் . நான் அது அவருடைய சொந்த விஷயம்  என நினைத்து அதைப் பற்றிக் கேட்காமல் இருந்தேன். நாங்கள் தாசப்பிரகாஷ் என்ற ஒரு ஹோட்டலில் தங்கி இருந்தோம். அந்த ஹோட்டலில்  கீ...

Happy New Year

படம்
இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் அனைவருக்கும் நடக்கும் அனைத்துமே நன்மைகளாக அமையட்டும், மனம் அமைதி பெறட்டும்,  வாழ்வு வளம் பெறட்டும், தீய எண்ணங்கள்  அழியட்டும்.  அனைவருக்கும் எங்களுடைய  சாந்திப்பிரியா 

Spirits and Ghosts -1

படம்
பில்லி  சூனியம் என்பது   உண்மையா  அல்லது  பொய்யா  ?........ எனக்கு விடை கிடைக்காத ஒரு உண்மை சம்பவம்  -1 சாந்திப்பிரியா  மற்றவர்கள் மீது ஏவப்படும் ஆவிகள் இரவில்தான்  சுற்றுகின்றன என்பது உண்மையா?  படம்  நன்றி  :http://en.wikipedia.org/wiki/Ghost ஆவிகளைப் பற்றி நான் வெளியிட்டு உள்ள கட்டுரையைக் படித்தப் பின் எனக்கு என் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவம் நினைவுக்கு வருகின்றது. இந்த சம்பவத்தில் சம்மந்தப்பட்டவர்களின் பெயர்களும், நடந்த இடங்களும் நிஜமானவை.  இன்று வரை அந்த சம்பவத்தை என்னால் மறக்க முடியவில்லை. இன்று நினைத்தால்  கூட அந்த காட்சிகள் இப்போது  நடந்தது போலவே தெரிகின்றது. அது 1966 அல்லது 1967 ஆம் ஆண்டு இருக்கும் என்று நினைக்கின்றேன் . ஆண்டு மட்டும் சரிவர நினைவில்லை.  மத்திய அமைச்சகத்தின் ஒரு பிரிவில் CSIR என்ற  ஆராய்ச்சி மையம் இருந்தது. அதற்கு நாடெங்கும் பல கிளைகள் இருந்தன.  பெங்களூரிலேயே அதற்கு பல பிரிவுகள் உள்ளன. அவற்றில் ஒன்றான  CSIR  கீழ் இருந்த  INSDOC எனும்   அலுவலகத்தி...

Spirits and Ghosts

படம்
ஆ வி க ள் - ஒ ரு அ ற் பு த மா ன க ட் டு ரை   ஆவிகளைப் பற்றி நான் சமீபத்தில் ஒரு அற்புதமான கட்டுரையை படித்தேன். அதை நமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். இந்தக் கட்டுரையை வெளியிட்டு உள்ளவர் Yogi Shri.Ramanantha guru, ujiladevi.blogspot.com .  அவருடைய இணையதள முகவரி: http://ujiladevi.blogspot.com/2011/04/blog-post_11.html .   இந்தக் கட்டுரையில் கூறப்பட்டு உள்ள அனைத்து கருத்துக்களுமே யோகி ஸ்ரீ ராமானந்த குருவை சார்ந்ததே. ஆனால் நமக்கு புரியாத ,விளங்காத பல  விஷயங்களை இந்தக் கட்டுரை மூலம் அவர்  கூறி உள்ளதினால் அவற்றை அனைவரும் படித்துப் பயனடைய இதை வெளியிட்டு உள்ளேன். சாந்திப்பிரியா கண்ணில் சிக்குமா அமானுஷ்ய ஆவி...? Yogi Shri.Ramanantha guru, ujiladevi.blogspot.com  ஆவிகளின் அறிமுகம் கிடைத்த ஆரம்ப நிலையில் இருப்பவர்க்குப் பொதுவாக ஆவிகளைப் பற்றி சிறிதளவேணும் அறிந்திருப்பவர்களுக்கு ஒரு கேள்வி எழும்புவது உண்டு. மரணத்திற்குப் பின்னால் மேலுலக வாழ்க்கையை அனுபவிக்கும் ஆவிகள் அடிக்கடி பூமிக்கு வருவது ஏன்? அது எப்படி நிகழ்கிறது? அப்படி பூமிக்க...