இடுகைகள்

ஜனவரி, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Spiritual Masters

படம்
ஆன்மீகவாதிகளின் லட்ஷணத்தை அடையாளம் காட்டும் இந்த கட்டுரை ( நன்றி : http://knowingyourself1.blogspot.com/search/label/வாழ்கை தத்துவம் ) அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று -       சாந்திப்பிரியா    ஆன்மிக துறவிகளின் அடையாளம் 1. சாதி, மதம், சமயம், தேசம், மொழி, இன, வேறுபாடுகள் எதுவும் இருக்கக் கூடாது. 2 . மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை கனவிலும் இருக்கக் கூடாது. 3 . எல்லா ஜீவர்களிடத்தும் தயவும், மெய்ப்பொருளின் (கடவுள்) இடத்தில் அன்பும் இருக்க வேண்டும். 4. தம் உயிர் போல் எல்லா உயிர்களையும் ஒன்று என என்ன வேண்டும். 5. ஆன்மநேய ஒருமைப்பாடு எக்காலத்தும் விலகாமல் இருக்க வேண்டும். 6. ஆகாரம், மைத்துனம், நித்திரை, பயம் இவை நான்கும் இருக்கக் கூடாது. 7 . பஞ்ச பூத உணவுகள் எதுவும் புசிக்கக் கூடாது. ஏக தேசத்தில் கொள்ளலாம். 8. அருள் என்ற அமுதம் ஆன்மாவில் சுரக்கும் அதைத்தான் சுவைக்க வேண்டும். 9. நரை, திரை, பிணி, மூப்பு இவைகள் எதுவும் இருக்க கூடாது. 10. கடவுள் ஒருவரே! அவர் ஒளியாக இருக்கிறார் என்ற உண்மையை உணர்ந்து இருக்க வேண்டும். 11. ஏழைகளின் பசி...

Nilal sevai amaippu

படம்
நிழல் சேவை அமைப்பு  நல்ல காரியங்கள் போற்றப்பட வேண்டும்  சாந்திப்பிரியா    திரு மோகன் சுரேஷ் என்பவர் எனக்கு தவறாமல் சில கடிதங்களை அனுப்பி வருகிறார். அவற்றில் வள்ளலார் பற்றிய செய்திகள் அதிகம். ஆனால் அவை அனைத்தும் முத்தானவை...சத்தானவை.  அவர் யார்?  2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நிழல் சேவை என்ற அமைப்பை  பாட்மிண்டன் விளையாட்டு வீரர்கள்,  வேளாண்மை துறை நண்பர்கள், சேலம் மற்றும் தென் இந்திய  வங்கியில் பணி புரிபவர்கள் போன்ற நண்பர்களுடன் சேர்ந்து இரத்த தான சேவை, அதை ஊக்குவிப்பது,  முதியோர் இல்லம் மற்றும் அனாதைகளின் இல்லங்களுக்கு உதவுவது,  உபயோகித்த துணிமணிகளை நண்பர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டு ஏழை எளியவர்களுக்குத் தருவது போன்ற நல்ல காரியங்களை செய்து வருகிறார். அவர்களுடைய இந்த சேவை பாராட்டப் படவேண்டியது.  நீங்களும் உங்கள் பிறந்தநாள், மற்றும் பண்டிகை தினங்களில் அவர்கள் மூலம் ஏதாவது ஒரு இல்லத்திற்கு தானம் தரலாமே! அவர்களின் விலாசம்: Reg.No.997/24.09.2010  நிழல் சேவை அமைப்பு No.4/42. குருக்கள் காலனி    , சின்னத்திருப்பதி...

Nellitheertham - Somanatheeswarar

படம்
  சாந்திப்பிரியா  கர்நாடகத்தில் தெற்கு கானரா  மாவட்டத்தில் உள்ள மிகவும் பழைமையான குகை ஆலயமே நெல்லி தீர்த்தம்.  ஆன்மீகவாதிகளுக்கு மட்டும் அல்ல இயற்கை அழகை ரசிக்க விரும்புபவர்களுக்கும் அந்த இடம் ரம்யமானது.  இந்த ஆலயத்தில் உள்ள மூல தெய்வம் சோமனதீஸ்வரா என்ற சிவன் அவரைத் தவிர  மஹா கணபதி மற்றும் ஜாபாலி முனிவரின் சிலைகளும் வைக்கப்பட்டு உள்ளன. மேலும் துளு நாட்டு வழக்கப்படி அந்த ஆலயத்தில் சில பூத கணங்களும் வைக்கப்பட்டு உள்ளன. அந்த ஆலயத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரராக கருதப்படும் சிவபெருமானின் சிலை சாலிகிராமக்கல் என்கிறார்கள். . ஆலயம் அமைந்து உள்ள இடம் ஒரு குகை ஆகும். ஆலயம் கி.பீ. 1487 ஆம் ஆண்டுக்கு முற்பட்டது என்கிறார்கள்.  காட்டுப் பகுதியில் கவனிப்பார் அற்று அமைந்து இருந்த அந்த குகை ஆலயம் பன்னிரண்டாம் நூற்றாண்டில் மெல்ல மெல்ல அழியத் துவங்க  பின்னர் அந்த ஆலய மகிமையை கேள்விப்பட்ட பக்தர்களின் முயற்சிகளினால்  மீண்டும் அது  புதுபிக்கப்பட்டுள்ளது.  ஆலயத்தின் வடக்குப் பகுதியில் நாகப்பா கரே அதாவது பாம்புக் குளம் என்ற ஒன்று உள்ளது. அதில் குளித்தப் ப...