இடுகைகள்

நவம்பர், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Kolak Kalai

படம்
  கோலக் கலையும் அதன் சில உண்மைகளும் சாந்திப்பிரியா கோலக் கலை என்பது இரண்டாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே தோன்றி உள்ளது என்பது தெரிகின்றது. கோலம் என்பது ஒரு விதத்தில் பார்த்தால் சித்திரக் கலையைப் போன்றதே. இன்றும் ஆதி மனிதர்கள் வாழ்ந்ததாக கூறப்படும் மலைகளிலும், பள்ளங்களிலும், குகைகளிலும் உள்ள பாறைகளைப் பார்க்கையில் அவற்றில் கோலங்கள் போன்ற பல உருவங்கள் உள்ளதைக் காணலாம். ஆகவேதான் கோலக் கலை ஆதி முதலேயே இருந்துள்ளது என்பதை நம்ப வேண்டி உள்ளது. வாயிலில் கோலங்களைப் போடுவது ஒரு பழக்கமாக இருந்துள்ளது என்றாலும் அதற்கும் சில காரணங்கள் இருந்துள்ளன. துஷ்ட தேவதைகள் வீட்டிற்குள் நுழையாமல் இருக்க, தர்ம தேவதைகளை உள்ளே அழைக்க, தூய ஆவிகளை உள்ளே அழைக்க மற்றும் லஷ்மி தேவியை உள்ளே அழைக்க என பல காரணங்களுக்காக பல விதமான கோலங்கள் போடப்பட்டன. அப்படியாக கோலங்களைப் போட்டபோது அதைப் போடும் பெண்கள் சில மந்திரங்களையும் உச்சரித்தவாறே போட்டு வந்தனர் என்பது கிராமியக் கதையாக உள்ளது. அதற்கு மேலும் சென்றால் கோலங்கள் போடுவது புழு பூச்சிகளுக்கு உணவாக இருக்கட்டும் என்பதற...

Random Thoughts

படம்
சாமி படங்கள்- சுவர் அழுக்காகாமல் பூ வைக்க ஒரு யோசனை சாந்திப்பிரியா நாம் பூஜை அறையில் மாட்டும் சாமி படத்தின் மீது பூ வைக்கின்றோம். அவற்றை தலைப் பகுதியில் பிரேமுகுப் பின்னால் சொருகி வைப்பதினால் நாளடைவில் அந்த இடத்தில் கறை ஆகி சுவர் அழுக்காகி விடும். பூக்களை வைக்காத நாட்களில் அந்த இடம் கருப்பாகத் தெரியும். ஆகவே சுவற்றை அசுத்தப்படுத்தாமல் இருக்க நான் பூஜை அறையில் உள்ள சாமிகளின் பிரேமின் தலைப் பகுதியில் ஒரு அங்குலம் நீளமும் அறை அங்குல அகலமுமான கெட்டியான (சிறிது தடிமனான ) வண்ண அட்டையின் ஒரு பக்கத்தில் சிறு ஓட்டை போட்டு (பஞ்ச் மிஷினினால்) பெவிகால் போட்டு ஒட்டி வைத்தேன். அட்டையை இப்போது அந்த அட்டையின் ஒட்டையில்தான் பூவை சொருகி வைக்கின்றோம். சுவர் கறை படுவது இல்லை. நாம் எந்த வீட்டுக்கு குடி சென்றாலும் சுவர்  அழுக்கு ஆகாது. பிரேமின் வண்ணத்துக்கு ஏற்ப அட்டையை வாடர் கலர் செய்து விட்டால் பிரேமுடன் அது ஒன்றி இருக்கும்.  அச்சிங்கமாகவும் தெரியாது.  கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்.