Mangattu Amman
தெரிந்த ஆலயம், தெரியாத வரலாறு - 8 மாங்காட்டு அம்மன் ஆலயம் சாந்திப்பிரியா முன்னொரு காலத்தில் தேவ லோகத்தில் சிவபெருமானும் பார்வதியும் அமர்ந்து கொண்டு விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது விளையாட்டாக பார்வதி சிவனின் இரண்டு கண்களையும் தமது கைகளினால் மூடினாள். அவ்வளவுதான் உலகமே இருண்டது. ஜீவராசிகள் மடியத் துவங்கின. அதைக் கண்டு பயந்து போன பார்வதி தன் கைகளை எடுத்து விட்டாள். ஆனாலும் அதுவரை பல தீய செயல்கள் நடந்து விட்டன. சிவபெருமானிடம் வந்த தேவர்கள் பூமியில் ஏற்பட்ட துயரத்தை அவரிடம் எடுத்துக் கூற அதற்கான காரணத்தை சிவபெருமான் ஆராய்ந்தார். அவருக்கு பார்வதி தன்னுடைய கண்களைப் பொத்தியதும் அதுவே காரணம் எனவும் தெரியவர கோபமடைந்த அவர் அவளை பூமியிலே போய் பிறந்து அங்கு தன்னை துதித்து தவம் செய்தால்தான் அங்கு வந்துதான் அவளை மணப்பதாகக் கூறினார். அந்த சாபத்தின் விளைவாக பார்வதி பூமியிலே ஒரு பெண்ணாக அவதரித்தாள். இப்போது மாங்காடு உள்ள இடத்தில் இருந்த கிராமத்தில் சென்று பிறந்தவள் எவருக்கும் தெரியாமல் காட்டுக்குள் போய் புதர்களும் செடிகளும் மண்டிக் கிடந்த இடத்தில் பூமிக்குள்...